மேலும் அறிய

பணி முடிந்து வீடு திரும்பிய காவலர் லாரி மோதி உயிரிழப்பு - மயிலாடுதுறையில் சோகம்

சீர்காழி அருகே பணி முடிந்து வீடு திரும்பிய காவலர் மீது லாரி மோதிய விபத்தில் காவலர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

சீர்காழி அருகே பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய காவலர் மீது லாரி மோதியதில் காவலர் சம்பவம் இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

முதல்நிலை காவலர்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் 39 வயதான காளிதாஸ். இவர் மயிலாடுதுறை மாவட்டம் மதுவிலக்கு தடுப்பு பிரிவில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மயிலாடுதுறையில் பணி முடிந்து இரவு சிதம்பரத்தில் உள்ள தனது வீட்டிற்கு காளிதாஸ் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது சீர்காழி சிதம்பரம் இடையே உள்ள ஆனந்த கூத்தன் என்ற இடத்தில் நான்கு வழிச்சாலையில் சென்ற போது சிதம்பரத்தில் இருந்து சீர்காழி நோக்கி வந்து கொண்டிருந்த லாரி எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த காளிதாசன் மீது மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி காளிதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

Watch Video: கோலியின் உணவகத்திற்கு சென்ற விராஜ் தோலி..குழம்பிய ரசிகர்கள்! வைரல் வீடியோ


லாரி ஓட்டுனர்

லாரி ஓட்டுனர் கைது

இதனை அடுத்து தகவல் அறிந்த ஆணைக்காரன் சந்திரம் காவலநிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து உயிரிழந்த காளிதாஸ் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுனரான காட்டுமன்னார்குடியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரை கைது செய்து விபத்தை ஏற்படுத்திய லாரியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். உயிரிழந்த காளிதாசுக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. 

Thalapathy 69: நடிகர் விஜய்யின் கடைசி படம்! தளபதி 69 அரசியல் படமா? மனம் திறந்த எச்.வினோத்!


பணி முடிந்து வீடு திரும்பிய காவலர் லாரி மோதி உயிரிழப்பு - மயிலாடுதுறையில் சோகம்

பொதுமக்கள் கோரிக்கை 

சீர்காழி புறவழிச்சாலையில் போதிய முன்னறிவிப்பு பலகை இல்லாமல் சாலை விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருவதால் சாலை விபத்துகள் தொடர்வதாகவும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மேலும் சாலை விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் சீர்காழி பகுதியில் லாரி மோதி காவலர் உயிரிழந்த சம்பவம் காவல்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கப்பலூர் டோல்கேட்டை இடமாற்ற கோரி 15க்கும் மேற்பட்ட ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அறிக்கை, வேலுமணிக்கு மவுனமா?” EPS ஆடும் ஆட்டம் என்ன..?
”எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அறிக்கை, வேலுமணிக்கு மவுனமா?” EPS ஆடும் ஆட்டம் என்ன..?
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
ஒரு பள்ளி விடமால் ஆய்வு செய்வேன்- எச்சரித்த ஆட்சியர்....!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy bike stunt apology : வம்பிழுத்த இளைஞர்! சுளுக்கெடுத்த வருண் SP! திருச்சியில் பரபரப்புTirupati laddu animal fat : ”திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு” சந்திரபாபு பகீர்Kuraishi on Manimegalai Priyanka : Govt Bus Damage : படிக்கட்டு உடைந்த பஸ்” உயிரோடு விளையாடலாமா” ஆத்திரத்தில் பயணிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அறிக்கை, வேலுமணிக்கு மவுனமா?” EPS ஆடும் ஆட்டம் என்ன..?
”எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அறிக்கை, வேலுமணிக்கு மவுனமா?” EPS ஆடும் ஆட்டம் என்ன..?
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
ஒரு பள்ளி விடமால் ஆய்வு செய்வேன்- எச்சரித்த ஆட்சியர்....!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
சென்னையை அதிர வைத்த சூட்கேஸ் கொலை.. பெண்ணை வீட்டிற்கு வரவைத்த இளைஞர்.. நடந்தது என்ன ?
சென்னையை அதிர வைத்த சூட்கேஸ் கொலை.. பெண்ணை வீட்டிற்கு வரவைத்த இளைஞர்.. நடந்தது என்ன ?
Breaking News LIVE : சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14 என அறிவிப்பு
Breaking News LIVE : சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14 என அறிவிப்பு
”தொழிலாளர்களை விவசாயிகளாக மாற்றி புரட்சி செய்த புது ஆறு” இப்போ வயசு 91ங்க!!!
”தொழிலாளர்களை விவசாயிகளாக மாற்றி புரட்சி செய்த புது ஆறு” இப்போ வயசு 91ங்க!!!
7 ஆண்டு குழந்தை இல்லாமல் பெற்ற குழந்தைகள்; 4 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சோகம்
7 ஆண்டு குழந்தை இல்லாமல் பெற்ற குழந்தைகள்; 4 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சோகம்
Embed widget