மேலும் அறிய

பொறியாளர் கனவுடன் ஆற்றில் குளித்த இளைஞன் உயிரிழப்பு! மயிலாடுதுறையில் சோகம்

மயிலாடுதுறை அருகே பொறியியல் கல்லூரியில் பயில இருந்த இளைஞன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே ஆற்றில் குளித்து கொண்டிருந்த சிறுவன் ஆற்றுச் சுழலில் சிக்கி உயிரிழந்த சோக சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பொறியியல் கல்வி பயில இருந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம் 

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள திருச்சிற்றம்பலம் மேலத் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் 17 வயதான சக்திசிவன். இவர் இந்தாண்டு பனிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. சிவில் படிப்பில் சேர்வதற்காக விண்ணப்பித்து இருந்தார். மேலும் வரும் ஆகஸ்ட் 10 -ஆம் தேதி கல்லூரிக்கு செல்லவிருந்த நிலையில், தனது நண்பர்களுடன் சேர்ந்து திருச்சிற்றம்பலம் மெயின்ரோடு அருகே ஓடும் கும்கி மண்ணியாற்றில் குளித்துக் கொண்டிருந்தார்.

ஆற்றில் ஏற்பட்ட சுழல்

தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையில் உரிய நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது. இந்த சூழலில் ஆற்றுநீரில் சட்ரஸ் அருகே நண்பர்களுடன் சேர்ந்து உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஆற்றுச் சுழலில் சிக்கிய சக்திசிவன் நீரில் மூழ்கினார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் மற்றும் சிலர் உடனடியாக அவரை மீட்க முயற்சித்தனர். பெரும் போராட்டத்திற்குப் பிறகு, ஆற்றுச் சுழலில் சிக்கியிருந்த சக்திசிவனை மீட்டு, உடனடியாக மணல்மேடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் அதிர்ச்சி தகவல்

மணல்மேடு அரசு மருத்துவமனைக்கு சக்திசிவன் கொண்டு செல்லப்பட்டபோது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தத் தகவல் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. தங்கள் மகன் பொறியியல் படிப்புக்கு செல்லவிருந்த நிலையில், இப்படி ஒரு சோகமான முடிவு நேர்ந்ததைக் கேட்டு பெற்றோர் கதறி அழுதது, அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

காவல்துறையின் நடவடிக்கை

இந்தச் சம்பவம் குறித்து மணல்மேடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணல்மேடு காவல் ஆய்வாளர் பாலசுப்ரமணியம் மற்றும் போலீசார், சக்திசிவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோரிக்கை விடுத்த பொதுமக்கள் 

இந்தச் சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், “கும்கி மண்ணியாற்றில் ஆழமான பகுதிகள் உள்ளன. குறிப்பாக சட்ரஸ் அருகே ஆற்றுச் சுழல்கள் அதிகம் உருவாகின்றன. இது குறித்து எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். மேலும், இதுபோன்ற சோகச் சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுக்க, காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிப் படிப்பை முடித்து, பொறியியல் கல்லூரிக்கு செல்ல தயாராக இருந்த ஒரு இளைஞனின் கனவுகள் இப்படி நீரில் மூழ்கியது, ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் ஒரு பெரிய சோகச் செய்தியாக அமைந்துள்ளது. இந்தச் சம்பவம், ஆற்றங்கரையோரப் பகுதிகளில் குளிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்துகிறது. மேலும், ஆபத்தான பகுதிகளில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
Ukraine Putin Trump: புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
Ukraine Putin Trump: புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Tata Sierra 1st Drive Review: டாடா சியாரா SUV ஓட்டுறதுக்கு எப்படி இருக்குன்னு தெரியணுமா.? முதல் ஓட்டுநர் அனுபவம் - ரிவ்யூவ்
டாடா சியாரா SUV ஓட்டுறதுக்கு எப்படி இருக்குன்னு தெரியணுமா.? முதல் ஓட்டுநர் அனுபவம் - ரிவ்யூவ்
Old pension scheme : ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
Embed widget