மேலும் அறிய

மயிலாடுதுறை குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து: புகை மண்டலத்தால் மக்கள் கடும் அவதி

மயிலாடுதுறை நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு பற்றி எரிந்ததால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர்.

மயிலாடுதுறை நகராட்சிக்குச் சொந்தமான குப்பை கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்து புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த திடீர் விபத்தால் அருகிலுள்ள குடியிருப்புகளைச் சேர்ந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் பல மணி நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். குப்பைகளை முறையாக நிர்வகிக்காததே இதற்கு முக்கியக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குப்பை மலையில் திடீர் தீ விபத்து

மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் ஆனந்த தாண்டவபுரம் சாலையில் உள்ள பிரதான குப்பை கிடங்கிற்குக் கொண்டு செல்லப்படுவது வழக்கம். இங்கு, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் எனத் தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கப்படுகிறது. இருப்பினும், நகரின் ஆறு இடங்களில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், அத்திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், சேகரிக்கப்படும் குப்பைகள் பல இடங்களில் ஆங்காங்கே தீ வைத்து எரிக்கப்படுகின்றன.


மயிலாடுதுறை குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து: புகை மண்டலத்தால் மக்கள் கடும் அவதி

இத்தகைய நிர்வாகச் சீர்கேட்டால், ஆனந்த தாண்டவபுரம் குப்பை கிடங்கில் குப்பைகள் மலைபோல் தேக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த குப்பை கிடங்கில் திடீரென்று குப்பைக் குவியலின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. முதலில் லேசாகப் பரவிய தீ, காற்றின் காரணமாகவும், பிளாஸ்டிக் உள்ளிட்ட எரியக்கூடிய பொருட்கள் நிறைந்திருந்ததாலும், வெகுவேகமாகப் பரவி, கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

புகை மண்டலத்தால் மக்கள் திணறல்

குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை கிளம்பியது. இப்பகுதி முழுவதும் அடர்த்தியான புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்தப் புகை மூட்டம் அப்பகுதியில் உள்ள இந்திரா காலணி மற்றும் நகரின் பிற நகர்ப்புறப் பகுதிகளிலும் பரவியதால், அங்கு வசிக்கும் குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாயினர். குறிப்பாக, சுவாசிப்பதில் சிரமம், கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகளால் முதியோர் மற்றும் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். சில குடியிருப்புவாசிகள் தீ விபத்து மற்றும் சுகாதாரச் சீர்கேடு குறித்து உடனடியாக நகராட்சி நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.


மயிலாடுதுறை குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து: புகை மண்டலத்தால் மக்கள் கடும் அவதி

"தினமும் இந்த குப்பை கிடங்கிலிருந்து வரும் துர்நாற்றம் ஒருபுறம் இருக்க, தற்போது ஏற்பட்ட இந்தத் தீ விபத்து எங்களை மூச்சுத் திணறச் செய்துவிட்டது. இந்தக் கரும்புகை எங்கள் வீடுகளுக்குள் வந்துவிட்டது. இதனால், உடனே வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது" என்று இந்திரா காலணியைச் சேர்ந்த ஒரு மூத்த குடிமகள் வேதனையுடன் தெரிவித்தார்.

தீயணைப்பு வீரர்களின் துரித செயல்

தீ விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும், மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாகச் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மலைபோல் குவிந்திருந்த குப்பைக் குவியலில் பற்றிய தீயை அணைப்பது பெரும் சவாலாக இருந்தது. தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சியடித்தும், குப்பைக் குவியலைச் சிதைத்துத் தீயை அணைக்கும் முயற்சியிலும் வீரர்கள் ஈடுபட்டனர்.


மயிலாடுதுறை குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து: புகை மண்டலத்தால் மக்கள் கடும் அவதி

சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகத் தீயணைப்பு வீரர்கள் இடைவிடாது போராடியதன் விளைவாக, தீ முழுவதுமாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், குப்பைக்குள் ஆங்காங்கே இருந்த கனல்கள் முழுவதுமாக அணைக்கப்படும் வரை வீரர்கள் தொடர்ந்து கண்காணித்தனர். இந்தத் தீ விபத்தின் சேத விவரங்கள் குறித்து உடனடியாகத் தகவல் எதுவும் வெளியாகவில்லை. மின்கசிவா அல்லது யாரேனும் தீ வைத்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பொதுமக்களின் கோரிக்கை- நிர்வாகச் சீர்திருத்தம் அவசியம்

இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவம், மயிலாடுதுறை நகராட்சியின் குப்பை மேலாண்மைத் திட்டத்தில் உள்ள ஓட்டைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. குப்பைகளை முறையாகச் சேகரித்து, தரம் பிரித்து, உரம் தயாரிக்கும் திட்டம் நகராட்சியில் பெயரளவுக்கு மட்டுமே உள்ளதாகவும், அதை முறையாகச் செயல்படுத்தாததே இதுபோன்ற விபத்துகளுக்கும், சுகாதாரக் கேடுகளுக்கும் காரணம் என்றும் பொதுமக்கள் மத்தியில் பரவலான கருத்து நிலவுகிறது.


மயிலாடுதுறை குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து: புகை மண்டலத்தால் மக்கள் கடும் அவதி

"நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்களை அமைத்தும், அதை முறையாகச் செயல்படுத்தாமல் குப்பைகளைக் கிடங்கில் குவிப்பதால் என்ன பயன்? இது பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதுடன், சுகாதாரச் சீர்கேட்டையும் ஏற்படுத்துகிறது" என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, இந்தத் தீ விபத்தை ஒரு பாடமாகக் கொண்டு, மயிலாடுதுறை நகராட்சியானது, குப்பைகளை முறையாகச் சேகரித்து, அறிவியல் ரீதியாகத் தரம் பிரித்து, உரம் தயாரிக்கும் திட்டத்தைச் செம்மையாகச் செயல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நகர்வாழ் மக்களின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு நிரந்தரத் தீர்வு காணவேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Maruti Electric MPV: இ-விட்டாராவிற்கு நெக்ஸ்ட்.. குடும்ப காரை மின்சார எடிஷனில் களமிறக்கும் மாருதி - எப்போது? எப்படி?
Maruti Electric MPV: இ-விட்டாராவிற்கு நெக்ஸ்ட்.. குடும்ப காரை மின்சார எடிஷனில் களமிறக்கும் மாருதி - எப்போது? எப்படி?
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
Embed widget