மேலும் அறிய

மயிலாடுதுறை எஸ்.பி அதிரடி: குற்றங்களை கட்டுப்படுத்த அதிரடி ஆலோசனை & வாகன சோதனை!

மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விரிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் G.ஸ்டாலின், தலைமையில் இன்று (07.11.2025) மாவட்டக் காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்றக் கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் காவல்துறையின் அனைத்து வாகனங்களின் மாதாந்திர ஆய்வு நடைபெற்றது. மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விரிவான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

மாதாந்திர குற்றக் கலந்தாய்வுக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டக் காவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், சிறப்புக் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கலந்தாய்வின் முக்கிய அறிவுறுத்தல்கள்

குற்றவாளிகள் கண்காணிப்பு: மாவட்டத்தில் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் பற்றியும், அவர்களின் தற்போதைய நடத்தை குறித்தும், தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

* நிலுவை வழக்குகள்: நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் தொடர்பாகவும், அதில் சம்பந்தப்பட்ட எதிரிகளைக் கண்டுபிடித்தல் மற்றும் திருடுபோன சொத்துகளை விரைவில் பறிமுதல் செய்வதற்கான வழிமுறைகள் பற்றியும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

* சட்டவிரோதச் செயல்கள் மீது நடவடிக்கை: நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், சட்டவிரோத மதுபான விற்பனை, கஞ்சா கடத்தல், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, மணல் கடத்தல், சூதாட்டம் மற்றும் லாட்டரி விற்பனை ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

* தடுப்புக் காவல் சட்டம்: தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளவும் காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்.

* விழிப்புணர்வு மற்றும் கேமராக்கள்: தினசரி முறையே மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திடவும், பொது இடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை அதிகளவில் புதிதாக அமைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டது.

* போக்குவரத்து நெரிசல் கட்டுப்பாடு: மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அறிவுரைகள் வழங்கினார்.

காவல்துறைக் வாகனங்களின் ஆய்வு

குற்றக் கலந்தாய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து, நவம்பர் மாதத்திற்கான காவல்துறைக் வாகனங்களின் மாதாந்திர ஆய்வு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வின்போது மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன் அவர்கள் உடனிருந்தார்.

ஆய்வின் முக்கிய அம்சங்கள்:

 * வாகன ஆய்வு: மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் காவல்துறையில் இயங்கி வரும் அனைத்து இருசக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்களை நேரில் ஆய்வு செய்தார்.

*செயல்திறன் தணிக்கை: வாகனங்களின் நிலை, அவற்றைப் பொருத்தப்பட்டுள்ள தொலைத்தொடர்பு சாதனங்கள், ஒளிரும் மின்விளக்குகள் ஆகியவற்றின் செயல்திறன் மற்றும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பழுது நீக்கும் கருவிகள் ஆகியவற்றைத் தணிக்கை செய்தார்.

* நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள்: மயிலாடுதுறை மற்றும் சீர்காழி உட்கோட்டங்களில் இயங்கி வரும் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் இருக்க வேண்டிய எச்சரிக்கை சமிக்கைகள், போக்குவரத்து குறியீடு பலகைகள் மற்றும் பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என ஆய்வு செய்து, அவற்றை இயக்கச் செய்து சோதனை மேற்கொண்டார்.

* காவலர்களுக்கு அறிவுறுத்தல்: காவல் வாகனங்களை இயக்கும் காவலர்களுக்கு, வாகனங்களை உபயோகப்படுத்தும் முறை, தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், வாகனங்களை இயக்கும்போது கடைபிடிக்க வேண்டிய சாலை விதிமுறைகள், சீட் பெல்ட் அணிவது மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் ஆகியவை குறித்து விளக்கமளித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கைப் பேணிக்காப்பதிலும், சாலைப் பாதுகாப்பிலும் மிகுந்த கவனம் செலுத்த இந்த ஆய்வு மற்றும் கலந்தாய்வுக் கூட்டங்கள் உதவிகரமாக இருக்கும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், தெரிவித்தார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!
திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
"காவிரி பொங்கி வரணும்!" - கண்ணீரும் பக்தியுமாக ஆடிப்பெருக்கை கொண்டாடிய மயிலாடுதுறை மக்கள்.

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்!
6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்
Embed widget