மேலும் அறிய

PM-YASASVI உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு: தவறவிடாதீர்!

மத்திய அரசு திட்டமான PM-YASASVI கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மயிலாடுதுறை: இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் (EBC), மற்றும் சீர்மரபினர் (DNT) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களின் உயர்தரக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசின் முக்கிய திட்டமான PM-YASASVI – Top Class Education in Schools for OBC, EBC & DNT Students திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெற, தகுதியுள்ள மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal - NSP) விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

திட்டத்தின் நோக்கம் மற்றும் பயனாளிகள்

* திட்டத்தின் பெயர்: பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM-YASASVI – Top Class Education in Schools).

*பயனாளிகள்: இதர பிற்படுத்தப்பட்டோர் (BC/MBC/DNT), பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் (EBC), மற்றும் சீர்மரபினர் (DNT) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள்.

* கல்வி நிறுவனங்கள்: 2025-26 ஆம் ஆண்டிற்குத் தேசிய கல்வி உதவித்தொகைக்காக மத்திய அரசால் பட்டியலிடப்பட்டுள்ள (Top Class Schools) பள்ளிகளில் பயிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

* வருமான வரம்பு: இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிக்க, அவர்களது பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

மாணவர்களின் வசதிக்காக, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட தேதிகள் பின்வருமாறு:

* கடைசி நாள் ; மாணவர்கள் விண்ணப்பிக்க (புதியது மற்றும் புதுப்பித்தல்) 15.11.2025 

* கல்வி நிறுவனங்கள் விண்ணப்பங்களைச் சரிபார்க்க 25.11.2025 

விண்ணப்பிக்கும் முறை: புதியது மற்றும் புதுப்பித்தல்

மாணவர்கள் https://Scholarship.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

1. புதுப்பித்தல் (Renewal)

 * கடந்த நிதியாண்டில் (2024-25) இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த மாணவ, மாணவியர்கள், அதே இணைப்பில் சென்று OTR (One Time Registration) பதிவு செய்து, 2025-26 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பத்தினை புதுப்பித்தல் (Renewal) மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

2. புதிய விண்ணப்பம் (Fresh Application):

* நடப்பாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள், NSP தளத்தில் தங்களது கைபேசி எண் (Mobile Number) மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.

* விவரங்களை அளித்ததும், OTR Number & Password ஆகியவை பதிவுசெய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரும். இந்த OTR எண்ணைப் பயன்படுத்தி, 2025-26 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்குரிய ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து, புதிய விண்ணப்பத்தை (Fresh Application) சமர்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள்

மாணவர்கள் இத்திட்டத்தின் பயனை முழுமையாகப் பெற பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்:

* பள்ளிகளின் பட்டியல்: மத்திய அரசால் பட்டியலிடப்பட்டுள்ள (Top Class Schools) பள்ளிகளின் விவரங்களை அறிந்துகொள்ள, தொடர்புடைய முதன்மை கல்வி அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

* திட்டம் குறித்த தகவல்கள்: இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள, தேசிய கல்வி உதவித்தொகை (NSP) இணையதளமான https://Scholarship.gov.in-ஐ அணுகி, கல்வி உதவித்தொகையின் பயன்களைப் பெறலாம்.

தகுதியுள்ள மாணவ, மாணவியர்கள் அனைவரும் கால அவகாசத்தைப் பயன்படுத்தி, நீட்டிக்கப்பட்ட இறுதித் தேதிக்குள் விண்ணப்பித்து மத்திய அரசின் இந்த உயரிய கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மூலம் பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

 

Mayiladuthurai District collector announcement PM-YASASVI scholarship scheme 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Embed widget