மேலும் அறிய

சீர்காழி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்களுடன் தர்ணாவில் ஈடுபட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் - காரணம் என்ன?

சீர்காழி நகராட்சி பகுதியில் குடியிருப்புகளை கழிவு நீர் சூழ்ந்து நிற்பதை தடுத்து நிறுத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும் என நகர்மன்ற உறுப்பினர்களுடன் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி என இரண்டு நகராட்சிகள் செயல்பட்டு வருகின்றது. இதில் சீர்காழி நகராட்சி 24 வார்டுகளை கொண்டது. இதில் திமுகவைச் சேர்ந்த துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் நகரமன்ற தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட 5 மற்றும் 6-ஆவது வார்டு பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் கழிவு நீர், மழை நீர் வடிகால் மூலம் புகுந்து குடியிருப்பு பகூதியில் சூழ்ந்து தேங்கி நிற்கிறது. இதனால் பெரும் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.


சீர்காழி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்களுடன் தர்ணாவில் ஈடுபட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் - காரணம் என்ன?

நகர்மன்ற கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தல்

இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே மழைநீர் வடிகால் வழியாக கழிவு நீர் உட்புகுவதை தடுக்க மன்ற உறுப்பினர் பாலமுருகன் 5-ஆவது வார்டு உறுப்பினரின் கணவர் மதியழகன் ஆகியோர் இரு தினங்களுக்கு முன்பு கழிவுநீர் பாதையில் மண்ணை கொட்டி அடைத்தனர். இதனால் நகராட்சி நிர்வாகம் சார்பில் நகர்மன்ற உறுப்பினர் பாலமுருகன், 5 - ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினரின் கணவர் மதியழகன் ஆகியோர் மீது சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


சீர்காழி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்களுடன் தர்ணாவில் ஈடுபட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் - காரணம் என்ன?

நகராட்சி அலுவலகம் முற்றுகை 

இந்நிலையில், 5, 6-ஆவது வார்டு பகுதியில் குடியிருப்புகளை கழிவு நீர் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும், நகரில் அன்றாடம் குப்பைகளைளை அகற்றி சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, சீர்காழி நகராட்சி நகர நிர்வாகத்தை கண்டித்து நகர்மன்ற உறுப் பினர் பாலமுருகன் தலைமையில், நகர்மன்ற உறுப்பினர்கள் முழுமதி இமயவரம்பன், கலைச்செல்வி, ரமாமணி, நாகரத்தினம், ராஜேஷ், கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் தங்கள் வார்டு பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சீர்காழி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சீர்காழி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்களுடன் தர்ணாவில் ஈடுபட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் - காரணம் என்ன?

அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு 

இதனை அடுத்து பேச்சுவார்த்தை நடத்த வந்த நகராட்சி ஆணையர் மஞ்சுளாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர். தொடர்ந்து சீர்காழி காவல்துறையினர், நகராட்சி ஆணையர் தர்னாவில் ஈடுபட்டவர் களை அழைந்து தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து இரண்டு நாட்களில் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கை விடப்பட்டு கலைந்து சென்றனர். சீர்காழி நகரின் முக்கிய விதியில் அமைந்துள்ள நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


சீர்காழி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்களுடன் தர்ணாவில் ஈடுபட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் - காரணம் என்ன?

அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் பொதுமக்கள் 

சீர்காழி நகராட்சி நிர்வாகம் சீர்கேடு குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே இதுபோன்ற போராட்டங்களில் மக்கள் ஈடுபடுவதும், தம்மை நம்பி வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதர முடியாமல் நகர மன்ற உறுப்பினர்களும் போராடுவதும் தொடர்கதையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget