மேலும் அறிய

"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!

மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் சென்ற அரசுப் பேருந்து நடுவழியில் பழுதாகி நின்றதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பேருந்தை தள்ளும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசுப் பேருந்துகள் போதிய பராமரிப்பின்றி அடிக்கடி சாலையில் பழுதாகி நிற்பதும், படிமானங்கள் (படிக்கட்டுகள்) உடைந்த நிலையில் ஆபத்தான முறையில் இயக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் பயணிகள், மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் தினமும் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

நடுவழியில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்து

இந்நிலையில், இன்று காலை மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்திலிருந்து '2B' எண் கொண்ட அரசுப் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. இந்தப் பேருந்து மன்னம்பந்தல், செம்பனார்கோவில், ஆக்கூர் வழியாக வரலாற்றுச் சிறப்புமிக்க பூம்புகார் பகுதிக்குச் செல்லும் வழித்தடத்தில் இயங்கி வருகிறது. காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், வியாபாரிகள் என ஏராளமான பயணிகள் பேருந்தில் பயணித்தனர்.

பேருந்து செம்பனார்கோவில் கடைவீதி பேருந்து நிறுத்தத்திற்கு வந்தடைந்தது. அங்குப் பயணிகளை இறக்கிவிட்டு, அங்கிருந்த பயணிகளை ஏற்றிக்கொண்ட பிறகு, ஓட்டுநர் பேருந்தை மீண்டும் இயக்க முயன்றார். ஆனால், எதிர்பாராதவிதமாகப் பேருந்து பிரேக் டவுன் (Breakdown) ஆகி, எஞ்சின் இயங்காமல் நடுரோட்டிலேயே நின்றுபோனது. ஓட்டுநர் பலமுறை முயற்சி செய்தும் பேருந்தை ஸ்டார்ட் செய்ய முடியவில்லை.

கடும் போக்குவரத்து நெரிசல்

செம்பனார்கோவில் கடைவீதி எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் முக்கிய வர்த்தகப் பகுதியாகும். குறுகலான அந்தச் சாலையில், பேருந்து திடீரென பழுதாகி நின்றதால், அவ்வழியாக வந்த பிற வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதனால் சில நிமிடங்களிலேயே அப்பகுதி முழுவதிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருசக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர ஊர்திகள் கூடக் கடந்து செல்ல முடியாமல் ஸ்தம்பிக்கும் சூழல் உருவானது.

பேருந்தை தள்ளிய பொதுமக்கள் மற்றும் பயணிகள்

போக்குவரத்து பாதிப்பு தீவிரமடைந்ததையும், தங்களின் பயண நேரம் வீணாவதையும் உணர்ந்த பயணிகள் மற்றும் செம்பனார்கோவில் கடைவீதியில் இருந்த உள்ளூர் பொதுமக்கள், வியாபாரிகள் அனைவரும் ஒன்று திரண்டனர். பேருந்தின் பின்புறம் நின்று அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பேருந்தை தள்ளத் தொடங்கினர்.

சுமார் நூறு மீட்டருக்கும் அதிகமாகப் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அனைவரும் கூட்டு முயற்சியாகப் பேருந்தைச் சாலையில் தள்ளிச் சென்றனர். சிறிது தூரம் தள்ளிய பிறகு, ஒருவழியாகப் பேருந்தின் எஞ்சின் மீண்டும் இயங்கத் தொடங்கியது. அதன்பின்னரே பேருந்து அங்கிருந்து பூம்புகார் நோக்கித் தனது பயணத்தைத் தொடர்ந்தது. பொதுமக்கள் மற்றும் பயணிகளின் இந்தத் துரித நடவடிக்கையால் அப்பகுதியில் நிலவிய போக்குவரத்து நெரிசல் சீரடைந்து, வாகனங்கள் வழக்கம் போல் செல்லத் தொடங்கின.

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கொந்தளிப்பு

இச்சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்களும், பயணிகளும் கடும் வேதனையும் கொந்தளிப்பும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், "மயிலாடுதுறை மாவட்டத்தில் இயக்கப்படும் பெரும்பான்மையான அரசுப் பேருந்துகள் மிகவும் பழமையானவையாகவும், போதிய பராமரிப்பின்றியும் காணப்படுகின்றன. பல பேருந்துகளின் படிக்கட்டுகள் உடைந்து தொங்கும் நிலையில் உள்ளன. பயணத்தின் போது எப்போது பிரேக் டவுன் ஆகும் என்பதே தெரியாத நிலையில்தான் தினசரி பயணிகள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணிக்க வேண்டியுள்ளது.

இன்று காலை செம்பனார்கோவிலில் நடந்த சம்பவம் ஒரு உதாரணம் மட்டுமே. தினந்தோறும் ஏதேனும் ஒரு கிராமப்புற வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் பழுதாகி நிற்பது வாடிக்கையாகிவிட்டது. அரசுப் போக்குவரத்துத் கழக நிர்வாகம் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் அலட்சியமாகச் செயல்படுகிறது" எனக் குற்றம் சாட்டினார்.

உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

குறிப்பாக, கிராமப்புற மற்றும் பள்ளி, கல்லூரி வழித்தடங்களில் இயங்கும் பழைய பேருந்துகளை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்றும், அவற்றிற்குப் பதிலாகப் புதிய மற்றும் சீரான பராமரிப்பில் உள்ள பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், பேருந்துகளின் எஞ்சின், பிரேக் மற்றும் படிக்கட்டுகளின் தரத்தைப் போக்குவரத்துத் கழக அதிகாரிகள் அவ்வப்போது நேரில் ஆய்வு செய்து, பழுதுகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவே மாறாது என பொதுமக்கள் புலம்பி சென்றனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
"காவிரி பொங்கி வரணும்!" - கண்ணீரும் பக்தியுமாக ஆடிப்பெருக்கை கொண்டாடிய மயிலாடுதுறை மக்கள்.
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget