மேலும் அறிய

சீர்காழி அருகே விபத்து: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மனிதநேயம்! விவசாயிக்கு உதவிய நெகிழ்ச்சி சம்பவம்!

விபத்தில் சிக்கிய விவசாயத் தொழிலாளி ஒருவரை, அமைச்சர் மெய்யநாதன் உடனடியாகத் தமது காரை நிறுத்தி, மனிதநேயத்துடன் உதவிய செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும் பெரும் பாராட்டையும் பெற்றுள்ளது. 

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கதிராமங்கலம் பகுதியில் நடந்த சாலை விபத்தில் காயமடைந்த விவசாயத் தொழிலாளி ஒருவரை, அவ்வழியாகச் சென்ற தமிழகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உடனடியாகத் தமது காரை நிறுத்தி, மனிதநேயத்துடன் உதவிய செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும் பெரும் பாராட்டையும் பெற்றுள்ளது. 

விபத்து நிகழ்ந்த விதம்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள கொண்டத்தூர் தெற்கு பண்டாரவடை கிராமத்தைச் சேர்ந்தவர் வயதான 56 பாலு. இவர் விவசாயத் தொழிலாளியாகப் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று பாலு தமது சொந்த வேலை காரணமாகச் சைக்கிளில் கதிராமங்கலம் கிராமத்திற்குச் சென்றிருந்தார். வேலைகளை முடித்துக்கொண்டு, சைக்கிளில் அவர் மீண்டும் தமது ஊரான கொண்டத்தூர் தெற்கு பண்டாரவடை கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது கதிராமங்கலம் கடைவீதியை அடைந்த சமயம் எதிரே அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக பாலுவின் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறிய பாலு சாலையில் விழுந்து பலத்த காயம் அடைந்து வலியால் துடித்துத்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகன ஓட்டி அங்கிருந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. கடைவீதிப் பகுதி என்பதால் மக்கள் கூடி பரபரப்பை ஏற்படுத்தியது, ஆனால் பாலுவுக்கு உடனடியாக மருத்துவ உதவி கிடைக்காமல் சற்று நேரம் தாமதம் ஏற்பட்டது.

அமைச்சரின் திடீர் வருகை 

இந்தச் சூழ்நிலையில், அப்பகுதியில் அரசு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, அவ்வழியாகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கார்  சென்று கொண்டிருந்தது. சாலையோரத்தில் மக்கள் கூட்டம் இருப்பதையும், ஒருவர் காயமடைந்து கிடப்பதையும் கவனித்த அமைச்சர் மெய்யநாதன், உடனடியாகத் தமது ஓட்டுநரை அழைத்து வாகனத்தை நிறுத்தச் சொல்லியுள்ளார்.

வாகனத்தில் இருந்து இறங்கிய அமைச்சர், காயமடைந்து கிடந்த பாலுவைப் பார்த்து பாலுவின் உடல்நிலை குறித்து விசாரித்தார். காயம் தீவிரமானது என்பதை உணர்ந்த அமைச்சர், சிறிதும் தாமதிக்காமல், தன்னுடன் பாதுகாப்புக்கு வந்திருந்தவர்களின் காரை உடனடியாக வரவழைத்தார். அமைச்சரின் உத்தரவின் பேரில், காயமடைந்த பாலுவை தூக்கி, அமைச்சருடன் வந்திருந்த  மற்றொரு காரில் ஏற்றி வைத்தார். பின்னர், காரின் ஓட்டுநரிடம், காலம் தாழ்த்தாமல் உடனடியாக அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு அனுமதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.பாலுவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னரே அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டார்.

மருத்துவமனைக்கு சென்று அக்கறை காட்டிய அமைச்சர் 

விபத்தில் காயமடைந்த விவசாயத் தொழிலாளியை மருத்துவமனைக்கு அனுப்பியதோடு நிற்காமல், அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், தமது அடுத்த வேலைகளை முடித்துக்கொண்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கே நேரில் சென்றார். அங்குச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலுவைச் சந்தித்து, அவருக்கு ஆறுதல் கூறினார். மேலும், மருத்துவமனையில் பணியிலிருந்த உயர் மருத்துவர்களை அழைத்து, விபத்தில் காயமடைந்த பாலுவுக்குத் தேவையான அனைத்துச் சிறந்த சிகிச்சைகளையும் உரிய நேரத்தில் அளித்து, அவர் விரைவில் குணமடைய முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்திவிட்டுச் சென்றார்.

சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு

அமைச்சரின் இந்தச் செயல், கடமைக்கு அப்பால் சென்று ஒரு சாமானிய விவசாயத் தொழிலாளிக்கு இக்கட்டான நேரத்தில் நேரடியாக உதவிய மனிதாபிமானத்தின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகிறது. வழக்கம் போல் கடந்து போகாமல், ஒரு விபத்து நடந்த இடத்தில் காரை நிறுத்தி, காயமடைந்தவரை வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சரின் இந்தச் செயல்பாடு, அங்கிருந்த மக்கள் அனைவரின் பாராட்டையும் பெற்றது. சமூக வலைதளங்கள் மற்றும் உள்ளூர் ஊடகங்களிலும் அமைச்சரின் இந்த மனிதநேயமிக்கச் செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

போலீஸ் விசாரணை

இந்தச் சாலை விபத்து குறித்து வைதீஸ்வரன் கோவில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகன ஓட்டியைத் தேடும் பணியும், விபத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget