மேலும் அறிய

சாரங்கபாணி மேம்பாலம் சீரமைப்பு: அமைச்சர் அதிரடி உத்தரவு! பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எப்போது திறக்கப்படும்?

மயிலாடுதுறை ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காகப் பாலத்தை உடனடியாகத் திறக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை - கும்பகோணம் பிரதான சாலையின் முக்கிய இணைப்பாக விளங்கும் காவிரி நகரில் உள்ள பழமையான சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தின் சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரத்தை உறுதி செய்த அமைச்சர், பொதுமக்களின் பயன்பாட்டிற்காகப் பாலத்தை உடனடியாகத் திறக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு  அறிவுறுத்தினார்.

முக்கியப் பாலத்தை சீரமைக்கும் பணி தீவிரம்

மயிலாடுதுறை - கும்பகோணம் பிரதான சாலையில் காவிரி நகர் பகுதியில் அமைந்துள்ள சாரங்கபாணி நினைவுப் பாலம், இப்பகுதியின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்த காரணத்தால் பாலம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்தப் பழமையான மேம்பாலத்தை முழுவதுமாகச் சீரமைக்கும் பணிகள் கடந்த 03.10.2025 அன்று தொடங்கப்பட்டன. சீரமைப்புப் பணிகளுக்காக, மாற்றுச் சாலை வழியாகப் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

பழுதடைந்த பகுதிகள் மாற்றம் மற்றும் பலப்படுத்துதல்

பணிகள் நடைபெறும் இடங்களை நேரடியாகப் பார்வையிட்ட அமைச்சர், ஒவ்வொரு கட்டப் பணியின் தரத்தையும், கால அவகாசத்தையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் மணிசுந்தரம் பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சரிடம் விளக்கினார்.

பாலத்தில் நடைபெறும் முக்கிய  சீரமைப்புப் பணிகளின் விபரம் 

கீழ்தள கான்கிரீட் சீரமைப்பு: பாலத்தின் கீழ்தளத்தில் பழுதடைந்த Girder பகுதிகளின் கான்கிரீட்டைச் சீர் செய்யும் பொருட்டு, புதிய கான்கிரீட் நிரப்பும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.

*தாங்கு தூண்களுக்கான புதிய தாங்கிகள் (Bearing): பாலத்தைத் தாங்கும் அனைத்துத் தூண்களின் மீதும் புதிதாக bearingகள் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தம் 9 கண்களில் (Spans) 7 கண்களுக்கான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்தப் புதிய தாங்கிகள், பாலத்தின் உறுதித் தன்மையை மேம்படுத்தும்.

* தூண்களுக்கு வலிமை சேர்க்கும் பணி (Grouting): தாங்கும் தூண்களின் பலத்தை அதிகரிக்கும் விதமாக Grouting (சிமெண்ட் கலவையைச் செலுத்தி வலிமை சேர்க்கும்) பணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.

* ஓடுதள இணைப்புச் சீரமைப்பு (Expansion Joints): பாலத்தின் ஓடுதளத்தில் உள்ள அனைத்து இணைப்புகளிலும் (மொத்தம் 35 எண்கள்) பழுதுகள் ஏற்பட்டிருந்தன. இந்தப் பழுதடைந்த இணைப்புகள் முழுவதுமாக உடைக்கப்பட்டு, பாலத்தை இணைக்கும் இரும்புத் தகடுகளால் ஆன புதிய இணைப்புப் பொருத்தும் பணி நடைபெறுகிறது. இதுவரை 30 இணைப்புகளில் முழுமையாக வெல்டிங் செய்யும் பணி முடிக்கப்பட்டுள்ளது.

* இரயில்வே பகுதி இணைப்பு (Railway Span Joint): இரயில்வே Span பகுதியில் பாலத்தை இணைக்கும் இரும்புத் தகடுகளால் ஆன இணைப்புப் பொருத்தும் பணிகளும் விரைவில் நிறைவடைய உள்ளது.

* கைப்பிடிச் சுவர்கள் மாற்றம்: மிகவும் பழமையான மற்றும் சிதிலமடைந்த கைப்பிடிச் சுவர்கள் உடைக்கப்பட்டு, புதிதாக வலிமையான கைப்பிடிச் சுவர்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

*ஆக்கிரமிப்புகள் அகற்றம்: சித்தர்காடு பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் முழுவதுமாக அகற்றப்பட்டு, பாலத்தின் பராமரிப்புப் பணிகளுக்குத் தடைகள் நீக்கப்பட்டுள்ளன.

அமைச்சரின் அறிவுறுத்தல்

பணிகளின் முன்னேற்றத்தைப் பார்வையிட்ட அமைச்சர் மெய்யநாதன், பாலத்தின் சீரமைப்புப் பணிகள் பொதுமக்கள் மற்றும் வணிக ரீதியான போக்குவரத்திற்கு மிக முக்கியமானது என்பதைச் சுட்டிக் காட்டினார்.

"அனைத்துப் பணிகளையும் மிகவும் தரமான முறையில், எந்தவிதத் தாமதமும் இன்றி விரைந்து முடிக்க வேண்டும். இந்தப் பாலம் செயல்பாட்டிற்கு வருவது இப்பகுதி மக்களுக்கு அத்தியாவசியமானது. எனவே, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை முடித்து, உடனடியாகப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குப் பாலத்தைத் திறக்க வேண்டும்" என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக அறிவுறுத்தினார். பொதுமக்கள் சிரமமின்றிப் பயணம் செய்வதை உறுதி செய்வதே அரசின் முதன்மை நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர் மெய்யநாதன் மேற்கொண்ட இந்த ஆய்வின்போது, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், நகர்மன்றத் தலைவர் செல்வராஜ், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் மணிசுந்தரம் உடனிருந்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

இனி ஆபீஸைத் தேடி அலைவதெல்லாம் பழசு... 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' வருகிறது அரசு!
இனி ஆபீஸைத் தேடி அலைவதெல்லாம் பழசு... 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' வருகிறது அரசு!
ஆன்லைனில் ஒரு கிக்... ஹாஸ்டலில் ஒரு சீட்! மயிலாடுதுறை அரசு சமூகநீதி விடுதிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைனில் ஒரு கிக்... ஹாஸ்டலில் ஒரு சீட்! மயிலாடுதுறை அரசு சமூகநீதி விடுதிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
சாத்தன்குடி காதல் ஜோடி மரண விவகாரம் : முற்றுகையிட்ட சமுதாய அமைப்புகள்! பூட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகக் கதவுகள்!
சாத்தன்குடி காதல் ஜோடி மரண விவகாரம் : முற்றுகையிட்ட சமுதாய அமைப்புகள்! பூட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகக் கதவுகள்!
ஏன் இந்த முக்குள தீர்த்தவாரி இவ்வளவு சிறப்பு? திருவெண்காட்டில் திரண்ட பக்தர்கள் கூட்டம்!
ஏன் இந்த முக்குள தீர்த்தவாரி இவ்வளவு சிறப்பு? திருவெண்காட்டில் திரண்ட பக்தர்கள் கூட்டம்!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
Netanyahu Warns Iran: இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
MG Hybrid SUV India launch: No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
Embed widget