மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு: பயிர்க் காப்பீடு செய்ய தவறினால் இழப்பீடு இல்லை! ஆட்சியர் எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் நவம்பர் 15-தேதிக்குள் காப்பீடு செய்ய தவறினால் இழப்பீடு பெற முடியாது என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா மற்றும் தாளடிப் பருவத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும், தங்கள் விளைபயிர்களை இயற்கை இடர்பாடுகளிலிருந்து பாதுகாப்பதற்காக, வரும் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் (PMFBY) கட்டாயம் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், அவசர செய்திக்குறிப்பு மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

சாகுபடி இலக்கு மற்றும் தற்போதைய நிலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா, தாளடிப் பருவத்தில் மொத்தம் 68,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நடவுப் பணிகள் மற்றும் சாகுபடிப் பராமரிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பருவத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடையும் என்பதால், நெற்பயிர்களை மழை வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல் போன்ற இயற்கை இடர்பாடுகளிலிருந்து பாதுகாப்பது மிகவும் அத்தியாவசியமாகிறது.

இதற்காக, மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மைத் துறை சார்பில், விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்வதன் மூலம், இயற்கைச் சீற்றங்களால் பயிர் சேதமடையும்போது, இழப்பீட்டுத் தொகையைப் பெற்று, அடுத்தகட்டச் சாகுபடிக்குத் தயாராக முடியும்.

குறையும் காப்பீடு பதிவு: ஆட்சியர் கவலை

பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசித் தேதி நெருங்கி வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஒப்பிடுகையில், மிகக் குறைந்த அளவிலான நிலப்பரப்புக்கே இதுவரை காப்பீடு செய்யப்பட்டுள்ளது மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 68,000 ஹெக்டேரில், இத வரையிலும் 41,684 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு மட்டுமே விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்துள்ளனர். அதாவது, இலக்கில் பாதிக்கும் சற்று அதிகமான அளவுக்கே காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சுமார் 26,000 ஹெக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்கள் காப்பீடு செய்யப்படாமல் உள்ளன.

நவம்பர் 15 கடைசி நாள்

இந்தக் குறைந்த பதிவு எண்ணிக்கையைக் கருத்தில் கொண்ட மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விவசாயிகள் உடனடியாகச் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

"சம்பா மற்றும் தாளடிப் பருவ நெற்பயிர்களுக்குப் பயிர்க் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 15-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. நாளை மறுநாளுடன் காலக்கெடு நிறைவடைவதால், மீதமுள்ள அனைத்து விவசாயிகளும் எஞ்சிய பயிர்களுக்குத் தவறாமல் பயிர்க் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரீமியம் தொகை மற்றும் பதிவு முறை

பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியத் தொகையையும் ஆட்சியர் வெளியிட்டுள்ளார். விவசாயிகள், ஒரு ஏக்கருக்கான பயிர்க் காப்பீட்டு பிரீமியத் தொகையாக ரூ. 564/- ஐ செலுத்த வேண்டும்.

இந்தத் தொகையை விவசாயிகள் தங்களுக்கு அருகிலுள்ள பொது சேவை மையங்களில் (Common Service Centres - CSC) சென்று நவம்பர் 15-ஆம் தேதிக்குள் செலுத்தி, அதற்கான ஒப்புதல் சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

விவசாயிகள் காப்பீடு செய்யும்போது, நிலத்தின் சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்குப்புத்தக நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை எடுத்துச் சென்று, கட்டாயம் பயிர்க் காப்பீடு செய்திட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு அவசர வேண்டுகோள் 

குறிப்பாக, வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அவர்களின் பயிர்கள் தானாகவே காப்பீடு செய்யப்பட்டிருக்கும். பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் மற்றும் குத்தகைக்கு எடுத்துச் சாகுபடி செய்யும் விவசாயிகள் உடனடியாகப் பொது சேவை மையங்களை அணுகிப் பதிவு செய்ய வேண்டும். நவம்பர் 15-ஆம் தேதிக்குப் பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்பதால், விவசாயிகள் காலதாமதம் செய்யாமல் விரைந்து காப்பீடு செய்து, இயற்கை இடர்பாடுகளிலிருந்து தங்கள் விளைபயிர்களைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், கேட்டுக்கொண்டுள்ளார். காப்பீடு செய்யத் தவறும் பட்சத்தில், வரும் நாட்களில் ஏற்படும் மழை வெள்ளம் அல்லது வறட்சியால் பயிர் சேதம் அடைந்தால், அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகையைப் பெற முடியாமல் போகும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சாகுபடி இலக்கை எட்ட ரெடியான மயிலாடுதுறை! விவசாயிகளுக்கு ஆட்சியர் ஸ்ரீகாந்த் கொடுத்த முக்கிய அப்டேட்!
சாகுபடி இலக்கை எட்ட ரெடியான மயிலாடுதுறை! விவசாயிகளுக்கு ஆட்சியர் ஸ்ரீகாந்த் கொடுத்த முக்கிய அப்டேட்!
சொந்தமாக பைக் வாங்க ஆசையா? தமிழ்நாடு அரசின் ரூ.50,000 மானியம்... உடனே முந்துங்கள்..!
சொந்தமாக பைக் வாங்க ஆசையா? தமிழ்நாடு அரசின் ரூ.50,000 மானியம்... உடனே முந்துங்கள்..!
60 ஆண்டுகாலக் காத்திருப்பு... ஆச்சாள்புரத்தில் அசைந்தாடிய மகா ரதம்! ஆச்சாள்புரத்தில் நிலை கொண்ட திருத்தேர்!
60 ஆண்டுகாலக் காத்திருப்பு... ஆச்சாள்புரத்தில் அசைந்தாடிய மகா ரதம்! ஆச்சாள்புரத்தில் நிலை கொண்ட திருத்தேர்!
"வெளியே சொன்னால் கொலை செய்திடுவேன்.." மயிலாடுதுறையில் 53 வயது பெண்ணை மிரட்டிய அரசியல் பிரமுகர் சிறையிலடைப்பு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
Anitha Radhakrishnan: ”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் மீண்டும் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
’’வீர வசனம் வேணாம்; ஆசிரியர்களுக்கு உடனே பாதுகாப்பு குடுங்க’’- அரசை அட்டாக் செய்த அன்பில் மகேஸ்
’’வீர வசனம் வேணாம்; ஆசிரியர்களுக்கு உடனே பாதுகாப்பு குடுங்க’’- அரசை அட்டாக் செய்த அன்பில் மகேஸ்
CM Vijay: வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
Embed widget