மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு: பயிர்க் காப்பீடு செய்ய தவறினால் இழப்பீடு இல்லை! ஆட்சியர் எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் நவம்பர் 15-தேதிக்குள் காப்பீடு செய்ய தவறினால் இழப்பீடு பெற முடியாது என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா மற்றும் தாளடிப் பருவத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும், தங்கள் விளைபயிர்களை இயற்கை இடர்பாடுகளிலிருந்து பாதுகாப்பதற்காக, வரும் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் (PMFBY) கட்டாயம் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், அவசர செய்திக்குறிப்பு மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

சாகுபடி இலக்கு மற்றும் தற்போதைய நிலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா, தாளடிப் பருவத்தில் மொத்தம் 68,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நடவுப் பணிகள் மற்றும் சாகுபடிப் பராமரிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பருவத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடையும் என்பதால், நெற்பயிர்களை மழை வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல் போன்ற இயற்கை இடர்பாடுகளிலிருந்து பாதுகாப்பது மிகவும் அத்தியாவசியமாகிறது.

இதற்காக, மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மைத் துறை சார்பில், விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்வதன் மூலம், இயற்கைச் சீற்றங்களால் பயிர் சேதமடையும்போது, இழப்பீட்டுத் தொகையைப் பெற்று, அடுத்தகட்டச் சாகுபடிக்குத் தயாராக முடியும்.

குறையும் காப்பீடு பதிவு: ஆட்சியர் கவலை

பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசித் தேதி நெருங்கி வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஒப்பிடுகையில், மிகக் குறைந்த அளவிலான நிலப்பரப்புக்கே இதுவரை காப்பீடு செய்யப்பட்டுள்ளது மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 68,000 ஹெக்டேரில், இத வரையிலும் 41,684 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு மட்டுமே விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்துள்ளனர். அதாவது, இலக்கில் பாதிக்கும் சற்று அதிகமான அளவுக்கே காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சுமார் 26,000 ஹெக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்கள் காப்பீடு செய்யப்படாமல் உள்ளன.

நவம்பர் 15 கடைசி நாள்

இந்தக் குறைந்த பதிவு எண்ணிக்கையைக் கருத்தில் கொண்ட மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விவசாயிகள் உடனடியாகச் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

"சம்பா மற்றும் தாளடிப் பருவ நெற்பயிர்களுக்குப் பயிர்க் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 15-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. நாளை மறுநாளுடன் காலக்கெடு நிறைவடைவதால், மீதமுள்ள அனைத்து விவசாயிகளும் எஞ்சிய பயிர்களுக்குத் தவறாமல் பயிர்க் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரீமியம் தொகை மற்றும் பதிவு முறை

பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியத் தொகையையும் ஆட்சியர் வெளியிட்டுள்ளார். விவசாயிகள், ஒரு ஏக்கருக்கான பயிர்க் காப்பீட்டு பிரீமியத் தொகையாக ரூ. 564/- ஐ செலுத்த வேண்டும்.

இந்தத் தொகையை விவசாயிகள் தங்களுக்கு அருகிலுள்ள பொது சேவை மையங்களில் (Common Service Centres - CSC) சென்று நவம்பர் 15-ஆம் தேதிக்குள் செலுத்தி, அதற்கான ஒப்புதல் சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

விவசாயிகள் காப்பீடு செய்யும்போது, நிலத்தின் சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்குப்புத்தக நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை எடுத்துச் சென்று, கட்டாயம் பயிர்க் காப்பீடு செய்திட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு அவசர வேண்டுகோள் 

குறிப்பாக, வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அவர்களின் பயிர்கள் தானாகவே காப்பீடு செய்யப்பட்டிருக்கும். பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் மற்றும் குத்தகைக்கு எடுத்துச் சாகுபடி செய்யும் விவசாயிகள் உடனடியாகப் பொது சேவை மையங்களை அணுகிப் பதிவு செய்ய வேண்டும். நவம்பர் 15-ஆம் தேதிக்குப் பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்பதால், விவசாயிகள் காலதாமதம் செய்யாமல் விரைந்து காப்பீடு செய்து, இயற்கை இடர்பாடுகளிலிருந்து தங்கள் விளைபயிர்களைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், கேட்டுக்கொண்டுள்ளார். காப்பீடு செய்யத் தவறும் பட்சத்தில், வரும் நாட்களில் ஏற்படும் மழை வெள்ளம் அல்லது வறட்சியால் பயிர் சேதம் அடைந்தால், அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகையைப் பெற முடியாமல் போகும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL
Saudi Bus Accident | 42 இந்தியர்கள் பலி!விபரீதமாய் முடிந்த ஹஜ் பயணம்சவுதி அரேபியாவில் பயங்கரம்
Vaithiyalingam joins ADMK| ”வாங்க வைத்திலிங்கம்”EPS கொடுத்த அசைன்மெண்ட்அதிமுகவின் டெல்டா கணக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
Airplane: விமானங்கள் இரவில் சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகளில் ஒளிர்வது ஏன்? காரணம் தெரியுமா?
Airplane: விமானங்கள் இரவில் சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகளில் ஒளிர்வது ஏன்? காரணம் தெரியுமா?
RE Shotgun 650 : ஷாட்கன் 650 பைக் வாங்க திட்டமா? இந்த விஷயங்கள் தெரியாமா முடிவு பண்ணாதிங்க - டீடெய்ல் லிஸ்ட்
RE Shotgun 650 : ஷாட்கன் 650 பைக் வாங்க திட்டமா? இந்த விஷயங்கள் தெரியாமா முடிவு பண்ணாதிங்க - டீடெய்ல் லிஸ்ட்
Salary Hike: குஷியோ குஷி.! ரூ.12 ஆயிரத்திலிருந்து 18ஆயிரமாக ஊதியம் அதிகரிப்பு.! ஊழியர்கள் கொண்டாட்டம்
குஷியோ குஷி.. இரண்டு மடங்காக உயர்ந்த ஊதியம் .! ஊழியர்கள் கொண்டாட்டம்- யாருக்கெல்லாம் தெரியுமா.?
மதுரைக்கும், கோவைக்கும்
மதுரைக்கும், கோவைக்கும் "NO METRO"... பாஜகவின் பழிவாங்கும் சதியை முறியடிப்போம்- சீறும் மு.க.ஸ்டாலின்
Embed widget