மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு: பயிர்க் காப்பீடு செய்ய தவறினால் இழப்பீடு இல்லை! ஆட்சியர் எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் நவம்பர் 15-தேதிக்குள் காப்பீடு செய்ய தவறினால் இழப்பீடு பெற முடியாது என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா மற்றும் தாளடிப் பருவத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும், தங்கள் விளைபயிர்களை இயற்கை இடர்பாடுகளிலிருந்து பாதுகாப்பதற்காக, வரும் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் (PMFBY) கட்டாயம் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், அவசர செய்திக்குறிப்பு மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

சாகுபடி இலக்கு மற்றும் தற்போதைய நிலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா, தாளடிப் பருவத்தில் மொத்தம் 68,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நடவுப் பணிகள் மற்றும் சாகுபடிப் பராமரிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பருவத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடையும் என்பதால், நெற்பயிர்களை மழை வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல் போன்ற இயற்கை இடர்பாடுகளிலிருந்து பாதுகாப்பது மிகவும் அத்தியாவசியமாகிறது.

இதற்காக, மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மைத் துறை சார்பில், விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்வதன் மூலம், இயற்கைச் சீற்றங்களால் பயிர் சேதமடையும்போது, இழப்பீட்டுத் தொகையைப் பெற்று, அடுத்தகட்டச் சாகுபடிக்குத் தயாராக முடியும்.

குறையும் காப்பீடு பதிவு: ஆட்சியர் கவலை

பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசித் தேதி நெருங்கி வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஒப்பிடுகையில், மிகக் குறைந்த அளவிலான நிலப்பரப்புக்கே இதுவரை காப்பீடு செய்யப்பட்டுள்ளது மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 68,000 ஹெக்டேரில், இத வரையிலும் 41,684 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு மட்டுமே விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்துள்ளனர். அதாவது, இலக்கில் பாதிக்கும் சற்று அதிகமான அளவுக்கே காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சுமார் 26,000 ஹெக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்கள் காப்பீடு செய்யப்படாமல் உள்ளன.

நவம்பர் 15 கடைசி நாள்

இந்தக் குறைந்த பதிவு எண்ணிக்கையைக் கருத்தில் கொண்ட மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விவசாயிகள் உடனடியாகச் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

"சம்பா மற்றும் தாளடிப் பருவ நெற்பயிர்களுக்குப் பயிர்க் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 15-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. நாளை மறுநாளுடன் காலக்கெடு நிறைவடைவதால், மீதமுள்ள அனைத்து விவசாயிகளும் எஞ்சிய பயிர்களுக்குத் தவறாமல் பயிர்க் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரீமியம் தொகை மற்றும் பதிவு முறை

பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியத் தொகையையும் ஆட்சியர் வெளியிட்டுள்ளார். விவசாயிகள், ஒரு ஏக்கருக்கான பயிர்க் காப்பீட்டு பிரீமியத் தொகையாக ரூ. 564/- ஐ செலுத்த வேண்டும்.

இந்தத் தொகையை விவசாயிகள் தங்களுக்கு அருகிலுள்ள பொது சேவை மையங்களில் (Common Service Centres - CSC) சென்று நவம்பர் 15-ஆம் தேதிக்குள் செலுத்தி, அதற்கான ஒப்புதல் சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

விவசாயிகள் காப்பீடு செய்யும்போது, நிலத்தின் சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்குப்புத்தக நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை எடுத்துச் சென்று, கட்டாயம் பயிர்க் காப்பீடு செய்திட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு அவசர வேண்டுகோள் 

குறிப்பாக, வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அவர்களின் பயிர்கள் தானாகவே காப்பீடு செய்யப்பட்டிருக்கும். பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் மற்றும் குத்தகைக்கு எடுத்துச் சாகுபடி செய்யும் விவசாயிகள் உடனடியாகப் பொது சேவை மையங்களை அணுகிப் பதிவு செய்ய வேண்டும். நவம்பர் 15-ஆம் தேதிக்குப் பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்பதால், விவசாயிகள் காலதாமதம் செய்யாமல் விரைந்து காப்பீடு செய்து, இயற்கை இடர்பாடுகளிலிருந்து தங்கள் விளைபயிர்களைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், கேட்டுக்கொண்டுள்ளார். காப்பீடு செய்யத் தவறும் பட்சத்தில், வரும் நாட்களில் ஏற்படும் மழை வெள்ளம் அல்லது வறட்சியால் பயிர் சேதம் அடைந்தால், அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகையைப் பெற முடியாமல் போகும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மருத்துவமனையில் மரணக் குழிகள்... உயிர் பயத்தில் நோயாளிகள்...
மருத்துவமனையில் மரணக் குழிகள்... உயிர் பயத்தில் நோயாளிகள்...
நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறும் சீர்காழி அரசு மருத்துவமனை: அதிருப்தியில் மக்கள்..!
நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறும் சீர்காழி அரசு மருத்துவமனை: அதிருப்தியில் மக்கள்..!
'செய்வினையை எடுக்கணும்' பெண்ணிடம் நூதன மோசடி - 20 வயது இளைஞர் கைது...!
'செய்வினையை எடுக்கணும்' பெண்ணிடம் நூதன மோசடி - 20 வயது இளைஞர் கைது...!
மயிலாடுதுறையில் பரபரப்பு...மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் குவிப்பு...!
மயிலாடுதுறையில் பரபரப்பு...மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் குவிப்பு...!
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Fuel Shortage: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? - நள்ளிரவில் பங்குகளில் குவிந்த மக்கள்
Fuel Shortage: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? - நள்ளிரவில் பங்குகளில் குவிந்த மக்கள்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி கொலை.. கனிமொழி எம்.பி., கடும் கண்டனம்!
இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி கொலை.. கனிமொழி எம்.பி., கடும் கண்டனம்!
Budget Cars: பட்ஜெட்டே ரொம்ப கம்மி தான்..! இதுல பராமரிப்பு செலவும் ஏகபோக மிச்சம் - டாப் 5 ஹேட்ச்பேக்குகள்
Budget Cars: பட்ஜெட்டே ரொம்ப கம்மி தான்..! இதுல பராமரிப்பு செலவும் ஏகபோக மிச்சம் - டாப் 5 ஹேட்ச்பேக்குகள்
விஜயுடன் கூட்டணியா? அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேட்டி!
விஜயுடன் கூட்டணியா? அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேட்டி!
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Embed widget