Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi Arrest : தஞ்சை திமுக போராட்டத்தில் நடிகை திரிஷா தொடர்பாக சர்ச்சை கருத்து கூறியதாக உதயநிதியை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தவெக கொடுத்த புகார் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

காவிரி போராட்டம் - உதயநிதி சர்ச்சை கருத்து
காவிரி நீர் தொடர்பாக கர்நாடக அரசு கண்டித்து திமுக சார்பாக நேற்று தஞ்சையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் திமுக இளைஞர் அணி செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான உதயநிதி, நடிகை திரிஷா தொடர்பாக இரட்டை அர்த்தத்தில் பேசிய கருத்து சரச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தவெக மகளிர் அணி நிர்வாகி பைரவி அளித்த புகாரில், தஞ்சாவூர் நகரில் பனகல் கட்டிடம் அருகில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின்,
தவெக புகாரில் என்ன இருக்கு.?
காவிரி பிரச்சனை பற்றி பேச ஆரம்பித்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் பற்றி மிக கேவலமாகவும் அநாகரிகமாகவும் பேசவே நா கூசுகின்ற வகையில் வார்த்தைகளை ஆபாசமான வார்த்தைகளை எல்லோர் முன்னிலையிலும் பேசி தமிழ்நாடு முதலமைசரை கொள்கை ரீதியாக எதிர்க்க துணிவின்றி தரமற்ற வார்த்தைகளை பேசியிருக்கிறார். மேற்படி கண்டன ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது மொத்தம் 42 டிஎம்சி தண்ணீர் நமக்கு வந்திருக்கணும் ஆனா இன்னைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரல ஆனா இத பத்தி இங்க இருக்கக்கூடிய முதலமைச்சர் வாயை திறந்து பேசறாரா? பேச மாட்டேங்கிறார் அவருக்கு இருக்கக்கூடிய ஒரே கவலை என்ன?" என்று அவர் கூறும் போது கூட்டத்தில் இருந்தவர்களிடமிருந்து த்ரிஷா த்ரிஷா' என சத்தம் வரவே 'திமுக மேல என்ன பொய் வழக்கு போடலாம் பொய் கேஸ் போடலாம்' என்று அவர் பேசியபோது
உதயநிதியின் சர்ச்சை கருத்து
மீண்டும் 'த்ரிஷா த்ரிஷா எனும் சத்தம் அங்கு கூடியுருந்தவர்களிடமிருந்து அதிகரிக்கவே அந்த சத்தமிட்டவர்களை நோக்கி அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக எங்க தண்ணி வருதோ இல்லையோ, அங்க தண்ணி வரணும் என்று அவர் ஆபாசமான அர்த்தத்தோடு கூறும் போது கூட்டத்திலிருந்தவர்கள் ஆரவாரத்தோடு சத்தம் போட்டதை கேட்டு அதை ஆமோதிக்கும் வகையில் நகைத்துக்கொண்டே காவிரியை சொன்னேன் என்று பேசி இருக்கிறார்.
இவர்களின் இந்த செயலானது வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்டதாக தெரிகிறது இவ்வாறு முதலமைச்சர் அவர்களை உதயநிதி அவர்கள் குறிப்பிட்டு பேசுகையில் பாலியல் ரீதியாக உள்நோக்கத்தோடு நடிகை த்ரிஷா அவர்களை கொச்சைப்படுத்தும் விதமாகவும் பெண்மையை களங்கப்படுத்தி மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவும் பேசியுள்ளார்.
உதயநிதி மீது நடவடிக்கை எடுங்க..
இந்த அநாகரிகமான செயலைத் தெரிந்துகொண்டு ஏராளமான பெண்கள் என்னிடம் வந்து உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவருடன் அருவருக்கதக்க வகையில் பேசியது மற்றும் நடந்துகொண்டது என்னை போல அவர்களுடைய மனதையும் ஆழமாக புண்படுத்தியுள்ளதாகவும், அதற்கு உடனடியாக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரிய கலவரத்தை ஏற்படுத்தும் எனவும் கொந்தளித்தனர். இவரது பேச்சை கேட்டு கொந்தளித்த பலரும் தற்போது தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் எனவே இது தொடர்பாக சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
திமுக ஐடி விங்க நிர்வாகி கைது
இவ்வாறு காவிரி நதிநீர் விவசாயிகள் பிரச்சனை எனும் பெயரில் பெயருக்கு ஒரு ஆர்பாட்டத்தை அறிவித்துவிட்டுஅதனை தவிர்த்து சபை நாகரிகமின்றி பொதுவெளியில் நவெக அரசை இழிவு படுத்துவதாக ஒட்டுமொத்த பெண் சமுதாயத்தையும் இழுவுபடுத்தி ஆபாசமாகப் பேசி அந்த ஆபாசம் கலந்த விடியோவை திமுக ஐடி விங் ன் எக்ஸ் தளத்தில் விடியோவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு அந்த வீடியோவானது பொதுமக்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் பரவலாக பரவி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய குற்ற செயல்களில் ஈடுபட்ட மேற்படி திமுக இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின்,திமுக ஐடி விங் பொறுப்பாளர்கள் மற்றும் மேற்கண்ட அறுவருப்பான நிகழ்வை குற்றமுறு நோக்கத்துடன் கூட்டுசதி செய்து திட்டமிட்டு செயல்படுத்திய அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி இப்புகார் மனுவை அளிக்கிறேன் என அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















