மேலும் அறிய

மயிலாடுதுறை TNPSC தேர்வு: ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு! நேரத்திற்கு வரவில்லை என்றால் அனுமதி இல்லை! முழு விவரம்.

மயிலாடுதுறையில் டி.என்.பி.எஸ்.சி. ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்‌.

மயிலாடுதுறை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் (தொழிற்பயிற்சி நிலை - II) பதவிகளுக்கான கணினி வழித் தேர்வு (CBT Mode) மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும் நவம்பர் 16, 2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இந்தத் தேர்வு மையத்தில் எந்தவிதமான சிரமமும் இன்றித் தேர்வர்கள் தேர்வை எழுதுவதை உறுதி செய்யும் விதமாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான மற்றும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், தெரிவித்துள்ளார்.

தேர்வு விவரங்கள் மற்றும் கால அட்டவணை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் (தொழிற்பயிற்சி நிலை - II) பதவிகளுக்கான கணினி அடிப்படையிலான இத்தேர்வு ஒரே நாளில் இருவேளைகளாக நடைபெறுகிறது.

* காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை 

* பிற்பகல் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 

மயிலாடுதுறை மாவட்டத்திற்கான தேர்வு மையமாக ஏ.வி.சி. பொறியியல் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம், தேர்வாணையத்துடன் இணைந்து செய்துள்ளது.

விரிவான ஏற்பாடுகள்: ஆட்சியர் உறுதி

தேர்வு மையத்தில் தேர்வர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதில் மாவட்ட நிர்வாகம் சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், தேர்வு அமைதியான முறையில் நடைபெறத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 * பாதுகாப்பு ஏற்பாடுகள்

 தேர்வு மையமான ஏ.வி.சி. பொறியியல் கல்லூரிக்குத் தேவையான பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்வு மையத்தின் நுழைவு வாயில் முதல் தேர்வுக்கூடங்கள் வரை கண்காணிப்பதற்காகக் காவலர்கள் பாதுகாப்புப் பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

* சிறப்புப் பேருந்து வசதி: தேர்வர்கள் சிரமமின்றி தேர்வு மையத்திற்கு வந்து சேருவதற்காக, மயிலாடுதுறை மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் இருந்து தேர்வு மையத்திற்குச் செல்லும் வகையில் சிறப்புப் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 * அடிப்படை வசதிகள்: கணினி வழித் தேர்வு என்பதால், தேர்வு முடியும் வரை எந்தவிதமான தடங்கலும் ஏற்படாமல் இருக்க, தேர்வு கூடத்திற்குத் தடையின்றி மின்சார வசதி வழங்குவதற்குத் தேவையான மாற்று ஏற்பாடுகள் (ஜெனரேட்டர்) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்வர்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

தேர்வர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்

தேர்வுக்கான விதிமுறைகள் மற்றும் நேரக் கட்டுப்பாடுகள் மிக முக்கியமானவை என்பதால், தேர்வர்கள் அவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

* கட்டாய வருகை நேரம்: முற்பகல் தேர்வு எழுதும் தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் கண்டிப்பாகத் தேர்வு மையத்திற்கு வருகை தர வேண்டும்.

* அனுமதிக்கான காலக்கெடு: காலை 9.00 மணிக்கு மேல் தேர்வு கூடத்திற்கு வரும் தேர்வர்களுக்கு கண்டிப்பாக அனுமதி வழங்கப்படாது.

* பிற்பகல் தேர்விற்கான நேரம்: பிற்பகல் தேர்வு எழுதுபவர்கள் மதியம் 2.00 மணிக்கு மேல் தேர்வு கூடத்திற்கு வர கண்டிப்பாக அனுமதி வழங்கப்படாது என்பதால், தேர்வர்கள் குறித்த நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு வருகை புரிந்திட வேண்டும்.

மின்னணு சாதனங்களுக்குத் தடை

தேர்வு அறையில் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறாமல் தடுப்பதற்காக, மின்னணு சாதனங்களுக்குத் தேர்வு மையத்திற்குள் அனுமதி இல்லை என்று ஆட்சியர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தேர்வர்கள் கைப்பேசி, கால்குலேட்டர், டிஜிட்டல் கடிகாரம் உள்ளிட்ட எவ்விதமான எலக்ட்ரானிக் சாதனங்களையும் தேர்வு கூடத்திற்குள் எடுத்து வர அனுமதி இல்லை. தேர்வுக்கான ஹால் டிக்கெட் மற்றும் அனுமதிக்கப்பட்ட எழுதுபொருட்களை மட்டுமே தேர்வர்கள் எடுத்து வர வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தேர்வர்கள் அனைவரும் அரசு விதிமுறைகளின்படி, தேர்வை நேர்மையாகவும், அமைதியான முறையிலும் எழுதி, வெற்றி பெற மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Embed widget