மேலும் அறிய

தேனி தொகுதியை டிடிவி தினகரனுக்கு விட்டுக்கொடுத்தது ஏன்? - ஓபிஎஸ் ஓபன் டாக்!

வரும் மக்களவைத் தேர்தலில் டிடிவி தினகரனுக்கு நன்றி கடனாகதேனி தொகுதியை கொடுத்தோம். பெரியகுளத்தில் நடந்த ஆதரவாளர்கள் கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் பேச்சு

சொந்த ஊரில் ஓபிஎஸ் :

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு கட்சிக்கொடி மற்றும் கட்சி பெயர் பயன்படுத்தக்கூடாது என்ற நிலையில், தற்போது பாஜக கூட்டணியில் சுயேட்சையாக இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட பாஜக தலைமையிடம் பேசி முடிவெடுக்கப்பட்டு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.


தேனி தொகுதியை  டிடிவி தினகரனுக்கு விட்டுக்கொடுத்தது ஏன்? - ஓபிஎஸ் ஓபன் டாக்!

பூஜை போட்டு வேலையை துவங்கிய ஓபிஎஸ் :

இதனிடையே  ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளதத்தில் உள்ள இல்லத்திற்கு வருகை தந்த அவர் இன்று பெரியகுளத்தில் உள்ள வரதராஜர் பெருமாள் திருக்கோவிலுக்கு ஆதரவாளர்களுடன் சிறப்பு பூஜையில் ஈடுபட்டு வழிபாடு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பெரியகுளம் கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில்  அவரது ஆதரவாளர்களிடம் பேசியதாவது,

”வரும் நாடாளுமன்ற தேர்தலில் தொண்டர்களை களம் இறக்கினால் மிகப்பெரும் பொருளாதார செலவு ஏற்படும். அந்த செலவுகளுக்கு  பின்னாலும் பல்வேறு சோதனைகளை தொண்டர்கள் சந்திக்க வேண்டி வரும். எனவே  தொண்டர்களை சோதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்பதற்காகத்தான் இந்த மாபெரும் பொறுப்பை நானே ஏற்று  மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறேன்.


தேனி தொகுதியை  டிடிவி தினகரனுக்கு விட்டுக்கொடுத்தது ஏன்? - ஓபிஎஸ் ஓபன் டாக்!

ஆதரவாளர்கள் சந்திப்பு கூட்டம்:

கடந்த 1999,ல் பெரியகுளம் மக்களவை தொகுதியில் டிடிவி தினகரன் வெற்றி பெற்று எம்.பியானார். நலத்திட்டங்கள் மூலம் தாராள மனப்பான்மையை கற்றுக் கொடுத்தவர். அடுத்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவினாலும் அவரது எண்ணம், செயல், இதயம் தேனியை சுற்றியே இருந்தது என்பதை நான் நன்றாகவே அறிவேன்.அதன்படி தேனி  தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட நாங்கள்  அபிப்ராயம் தெரிவித்தோம். அதன்படி தேனி மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாய கூட்டணி ஆதரவுடன் போட்டியிடும் டிடிவியை வெற்றி பெறச் செய்ய பாடுபட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிட வேண்டும் என்று கூட்டணி தலைமை, தொண்டர்கள் விரும்பினர். “நான் எங்கு போய் நிற்பேன்.


தேனி தொகுதியை  டிடிவி தினகரனுக்கு விட்டுக்கொடுத்தது ஏன்? - ஓபிஎஸ் ஓபன் டாக்!

தேனி தொகுதியை விட்டுக்கொடுத்ததாக ஓபிஎஸ் பேச்சு:

தேனியில் தானே நான் நிற்க வேண்டும்" என்று டிடிவி தினகரனும் தேனியை விரும்பியதால். நமது நன்றி கடனாக தேனி தொகுதியை அவருக்கு தந்திருக்கிறோம். நான் எங்கு போட்டியிட வேண்டும் என்பதை ரகசியமாக வைத்திருந்தேன். நீதி கேட்க ராமநாதபுரம் தான் சரியான தொகுதி என்று முடிவு செய்தேன். சரியான விடை அவர்களால் தான் தர முடியும். அதிமுக உண்மை தொண்டர்களின் உரிமையை காக்கும் இந்த  போராட்டம் வெற்றியடைந்து அது ஒரு சக்தியாக வெளிப்படும் தொகுதி ராமநாதபுரம் தான். நான் ராமநாதபுரம் சென்றாலும் என் இதயம் இங்கு தான் இருக்கும். டிடிவி தினகரனை அமோக வெற்றியடைய செய்ய வேண்டும் என தனது ஆதரவாளர்களிடம்” ஓபிஎஸ் பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Amitabh Bachchan Rajinikanth: 32 ஆண்டுகள் கேப், வேட்டையனில் அமிதாப் பச்சன் - ரஜினி காம்போ, முந்தைய கூட்டணி எப்படி?
Amitabh Bachchan Rajinikanth: 32 ஆண்டுகள் கேப், வேட்டையனில் அமிதாப் பச்சன் - ரஜினி காம்போ, முந்தைய கூட்டணி எப்படி?
Breaking News LIVE OCT 9: போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்கள் கைது
போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்கள் கைது
Salesman, Packer Recruitment: நேர்காணல் மட்டுமே; ரூ.29 ஆயிரம் ஊதியம்- தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
Salesman, Packer Recruitment: நேர்காணல் மட்டுமே; ரூ.29 ஆயிரம் ஊதியம்- தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
ஜம்மு காஷ்மீர் தேர்தல் வெற்றி: இது தொடக்கம்தான் - இந்தியா கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்
ஜம்மு காஷ்மீர் தேர்தல் வெற்றி: இது தொடக்கம்தான் - இந்தியா கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thalavai Sundaram Removed From ADMK | தளவாய் நீக்கப்பட்டது ஏன்?தூக்கியடித்த EPS..தூண்டில் போடும் BJPPolice Attack Old Man | வியாபாரியை அறைந்த SI காலில் விழுந்த முதியவர் பரபரப்பு CCTV காட்சிJammu & Kashmir Election Results : சொல்லி அடித்த ராகுல்! மண்ணை கவ்விய பாஜக!மோடி சறுக்கியது எப்படி?Thalavai Sundaram Removed From ADMK:  தளவாய் சுந்தரம் நீக்கம்!எடப்பாடி  அதிரடி..பாஜகவுடன் நெருக்கமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amitabh Bachchan Rajinikanth: 32 ஆண்டுகள் கேப், வேட்டையனில் அமிதாப் பச்சன் - ரஜினி காம்போ, முந்தைய கூட்டணி எப்படி?
Amitabh Bachchan Rajinikanth: 32 ஆண்டுகள் கேப், வேட்டையனில் அமிதாப் பச்சன் - ரஜினி காம்போ, முந்தைய கூட்டணி எப்படி?
Breaking News LIVE OCT 9: போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்கள் கைது
போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்கள் கைது
Salesman, Packer Recruitment: நேர்காணல் மட்டுமே; ரூ.29 ஆயிரம் ஊதியம்- தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
Salesman, Packer Recruitment: நேர்காணல் மட்டுமே; ரூ.29 ஆயிரம் ஊதியம்- தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
ஜம்மு காஷ்மீர் தேர்தல் வெற்றி: இது தொடக்கம்தான் - இந்தியா கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்
ஜம்மு காஷ்மீர் தேர்தல் வெற்றி: இது தொடக்கம்தான் - இந்தியா கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்
சாம்சங் தொழிலாளர் போராட்டம்; 'ஒடுக்கும் அரசு- மே தினத்தில் மட்டும் சிவப்பு சட்டை அணியும் ஸ்டாலின்'- ஈபிஎஸ் கண்டனம்
சாம்சங் தொழிலாளர் போராட்டம்; 'ஒடுக்கும் அரசு- மே தினத்தில் மட்டும் சிவப்பு சட்டை அணியும் ஸ்டாலின்'- ஈபிஎஸ் கண்டனம்
Vettaiyan : வேட்டையன் டைட்டிலை மாற்ற வேண்டும்...கடுப்பான தெலுங்கு ரசிகர்கள்..என்ன காரணம் ?
Vettaiyan : வேட்டையன் டைட்டிலை மாற்ற வேண்டும்...கடுப்பான தெலுங்கு ரசிகர்கள்..என்ன காரணம் ?
சேதுபதி கட்டிய கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கல்வெட்டு கண்டுபிடிப்பு
சேதுபதி கட்டிய கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கல்வெட்டு கண்டுபிடிப்பு
சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் கைது;  அரசின் தொழிலாளர் விரோதப்போக்கு அம்பலம் - அன்புமணி கண்டனம்
சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் கைது; அரசின் தொழிலாளர் விரோதப்போக்கு அம்பலம் - அன்புமணி கண்டனம்
Embed widget