விருதுநகர் மக்கள் கவனத்திற்கு... வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC குரூப்-1 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு !
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த TNPSC குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகும் தகுதியுடைய தேர்வர்கள் அனைவரும் இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC குரூப்-1 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு: மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தகவல்.
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தவுள்ள குரூப்-1 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. தொடர் இலவசப் பயிற்சிகள்: விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டம் வாயிலாக TNPSC, TNUSRB, SSC மற்றும் RRB போன்ற பல்வேறு தேர்வு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்குத் தொடர்ந்து இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கான அனைத்துப் புத்தகங்கள் அடங்கிய நவீன நூலகம் மற்றும் அதிவேக ஒய்-பை (Wi-Fi) வசதியுடன் கூடிய கணினி ஆய்வகம் மாணவர்களின் பயன்பாட்டிற்காகச் செயல்பட்டு வருகிறது.
குரூப்-1 தேர்வு மற்றும் பயிற்சித் தொடக்கம்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) குரூப்-1 பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை வரும் 23.06.2026 அன்று வெளியிடப்படவுள்ளது. இத்தேர்வின் முதல்நிலைத் தேர்வுக்குத் (Preliminary Exam) தயாராகும் தேர்வர்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள், வரும் *08.06.2026 (திங்கள் கிழமை)* முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்கப்படவுள்ளன. சிறப்பம்சங்கள்: இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த மற்றும் திறன் வாய்ந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளன. மேலும், தேர்வர்களுக்கு விலையில்லாப் பாடக்குறிப்புகள் (Study Materials) வழங்கப்படுவதோடு, பாடவாரியான தேர்வுகள் மற்றும் முழு மாதிரித் தேர்வுகள் (Mock Tests) தொடர்ச்சியாக நடத்தப்படும்.
பதிவு செய்யும் முறைகள்: இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள தேர்வர்கள் கீழே உள்ள வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம்:
1. கூகுள் லிங்க்: https://forms.gle/zuHWWSgJEzK7WMNR9 என்ற இணையப் பக்கத்தில் பதிவு செய்யலாம்.
2. மின்னஞ்சல்: studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்களை அனுப்பலாம்.
3. நேரடிப் பதிவு: விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம்.
எனவே, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த TNPSC குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகும் தகுதியுடைய தேர்வர்கள் அனைவரும் இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்




















