விருதுநகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பாஸ் முகாம்.. அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!
விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி ஆன்லைன் பஸ் பாஸ் வழங்கிடுவதற்கு ஏதுவாக 27.01.2026 முதல் 30.01.2026 வரையிலான நாட்களில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. - விருதுநகர் என மாவட்ட ஆட்சியர் தகவல்.
மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி ஆன்லைன் பஸ் பாஸ்
விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி ஆன்லைன் பஸ் பாஸ் வழங்கிடுவதற்கு ஏதுவாக 27.01.2026 முதல் 30.01.2026 வரையிலான நாட்களில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டம் முழுவதும் பயணம் செய்வதற்கும் மற்றும் இதர மாற்றுத்திறனாளிகளுக்கு (கல்வி பயில்பவர்கள் / பணிபுரிபவர்கள்) ஒரே வழித்தடத்தில் இலவசமாக பயணம் செய்வதற்கும் கீழ்க்கண்ட தேசிய அடையாள அட்டை நகல் அனைத்து பக்கங்கள், UDID CARD நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம் – 2, கல்வி நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது வேறு துறைகள் மூலமாகவோ இலவச பயணச் சலுகை வழங்கப்படவில்லை எனச் சான்று, பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் மேற்கண்ட நாட்களில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.























