மேலும் அறிய

"நிதிஷ் குமார் போல் அல்ல; எந்த நெருக்கடியும் இல்லாமல் முதல்வர் பதவியை துறந்தவர் காமராஜர்" - திருமாவளவன்

முதல்வர் பதவிக்காக கூட்டணியை விட்டு விலகிச் சென்ற நிதீஷ் குமார் போல் அல்லாமல் எந்த நெருக்கடியும் இல்லாமல் முதல்வர் பதவியை துறந்தவர் காமராஜர் - விசிக தலைவர் தொல் திருமாவளவன் பேச்சு

மதுரை எஸ்.வி.என்., கல்லூரியில் நாடார் மகாஜன சங்கத்தின் 72- வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் எம்.பி., திருமாவளவன் உரையாற்றினார்.
 
”பெருந்தலைவர் காமராஜரை பற்றி உங்கள் இடத்தில் பேசுவது கொல்லர் தெருவில் ஊசி விற்பதை போன்றது. என்னை விட மகாஜன சங்கத்தின் வயது அதிகம் 72வது  ஆண்டாக இந்த மாநாடு நடை பெறுகிறது. இந்த மாநாட்டின் நோக்கம் நாடார் சமுதாயத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்ற கருப்பொருளை வரவேற்கிறேன். திருச்சியில் நடைபெற்ற விசிக மாநாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அரசுத் துறையிலும் அரசியலிலும் சரியான முறையில் இட ஒதுக்கீடு வழங்க முடியும். 

 
எனவே ஒன்றிய அரசு விரைந்து சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வெல்லும் ஜனநாயக மாநாட்டில் விசிக கோரிக்கை வைத்துள்ளது என்றார். நாடார் சமூகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்கனவே நாடார் சமூகத்தைச் சேர்ந்த மூன்று முக்கிய நிர்வாகிகளை அறிவித்துள்ளது. பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக விசிகவில் இணையும் போது அவர்களுக்கான பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் திமுக,அதிமுகவில் உள்ளது போல விசிகவில் பெரும்பாலானோர் இல்லை என்பது எதார்த்தமான உண்மை. பிரதிநிதித்துவம் என்பது எல்லா தளங்களிலும் தேவைப்படுகிறது.இதுதான் சமூக நீதி நாடார் சமுதாயத்திற்கு எல்லா அரசியல் கட்சிகளிலும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்பது சாதியின்பால் ஏற்பட்டது அல்ல சமூகநீதியின்பால் ஏற்பட்டது என்பதை விடுதலை சிறுத்தைகள் உணர்கிறது என இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

 
 அகில இந்திய அளவில் தலைவராக உயர்ந்தவர் காமராஜர். எத்தனை ஆட்சி மாறினாலும் எத்தனை கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் உருவானாலும் கல்வி என்றால் காமராஜர் பெயரை உச்சரித்து விட்டு தான் அதைப்பற்றி பேச முடியும். முதலமைச்சர் பதவியில் இருக்கும் போதே அந்தப் பதவியை ராஜினாமா செய்தவர் காமராஜர். காமராஜர் வகித்த பதவி கவுன்சிலர் பதவியோ, ஒன்றிய கவுன்சிலர் பதவி, ஒன்றிய பெருந்தலைவர் பதவியோ, எம்பி பதவியோ அல்ல முதல்வர் பதவி முதல்வராக இருப்பவர்கள் தாங்கள் தொடர்ந்து அப்ப பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக பீகார் மாநிலத்தில் முதல்வராக இருக்கும் நிதீஷ் குமார் இந்தியா கூட்டணியை விட்டு வெளியேறவும் இதிலிருந்து விலகி இன்று பாஜகவை தேடிச்செல்லும் நிலைக்கு வந்துள்ளார்.


 
 
இதேபோல் மகாராஷ்டிராவில்  ஏக்நாத் ஷிண்டே உத்தவ்தாக்கரேக்கு எதிராக கட்சியை இரண்டாகப் பிளந்து பாஜக ஆதரவோடு முதல்வராகி விட்டார். இப்படி பல்வேறு அரசியல் நிகழ்வுகள் அரசியல் துரோகங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் எந்த நெருக்கடியும் இல்லாத நேரத்திலும் கட்சியை வலுப்படுத்த வேண்டும் மக்களை சந்திக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தவர் காமராஜர். அவரை பின்பற்றி தான் லால் பகதூர் சாஸ்திரி,மொரார்ஜி தேசாய் போன்றவர்கள் அரசியல் பணியாற்றினார்கள்.  காமராஜர் தலைவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக திகழ்ந்தவர் முன்னோடி என்றால் முன்நின்று நடத்த வேண்டும் மற்றவர்களை முன்னாடி அனுப்பி பின்னால் இருந்து இயக்குபவர் அல்ல. போரடுவதிலும் மக்கள் பணி செய்வதிலும் முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதற்கு  உதாரணமாக திகழ்ந்தவர் காமராஜர் எனக் கூறிய திருமாவளவன் நாடார் சமுதாயத்தினர் வணிகத்திலும், கல்வி நிறுவனங்களிலும் மிகப்பெரிய வளர்ச்சி பெற்று உள்ளது. என்பது யாராலும் மறுக்க முடியாது அப்படிப்பட்ட நீங்கள் அரசியலிலும் எல்லா அரசியல் கட்சிகளிலும் பங்கேற்று மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துவதாக” கூறினார்‌.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Haryana BJP : முரண்டு பிடித்த சீனியர்கள் தூக்கியடித்த ஹரியானா பாஜக..குதூகலத்தில் காங்கிரஸ்PTR Palanivel Thiyagarajan :உதயநிதி விழாவை புறக்கணித்த PTR?இரவில் நடந்த சந்திப்பு!அறிவாலயம் EXCLUSIVEDindigul Rowdy Murder : பிரபல ரவுடி வெட்டிக்கொலை!திமுக பிரமுகர் கொலையில் தொடர்பு?Mallikarjun Kharge Fainted : மயங்கி விழுந்த கார்கே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Must Visit Temples: தென்னிந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 திருத்தலங்கள் - லிஸ்ட் இதோ, உங்க ஃபேவரட் எது?
Must Visit Temples: தென்னிந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 திருத்தலங்கள் - லிஸ்ட் இதோ, உங்க ஃபேவரட் எது?
Embed widget