மேலும் அறிய

பூட்டுக்கு பெயர் போன திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று 36 ஆவது பிறந்தநாள்...!

’’திண்டுக்கல் அண்ணா மாவட்டம் என்ற பெயராலும், சில காலம் காய்தே மில்லத் மாவட்டம் என்ற பெயராலும் மற்றும் மன்னர் திருமலை மாவட்டம் என்ற பெயராலும் அழைக்கப்பட்டு வந்தது’’

மா, பலா, வாழை என முக்கனிகள் விளைந்து, முத்திரை பதிக்கும் பழனியிலே, மலைகளின் இளவரசியான கொடைக்கானலை தன்னகத்தே கொண்ட திண்டுக்கல் மாவட்டம் இன்று 36 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மதுரை மாவட்டத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டை கிளவியாக இருந்த திண்டுக்கல் மாவட்டத்தை  பிரித்து 1985ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தனி மாவட்டமாக அறிவித்து முதல் மாவட்ட ஆட்சியர் எம்.மாதவன் நம்பியாரை அறிவித்தார் அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆர். திண்டுக்கல் மாவட்டம் சில காலம் திண்டுக்கல் அண்ணா மாவட்டம் என்ற பெயராலும், சில காலம் காய்தே மில்லத் மாவட்டம் என்ற பெயராலும் மற்றும் மன்னர் திருமலை மாவட்டம் என்ற பெயராலும் அழைக்கப்பட்டன.

பூட்டுக்கு பெயர் போன திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று 36 ஆவது பிறந்தநாள்...!

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை, கொடைக்கானல் மலை, பழனி மலை ஆகிய முக்கிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன. மேலும் ஆடலூர், பன்றி மலை, கந்தமலை என மலைகளால் சூழப்பட்டுள்ளது. பார்க்க ரம்மியமாக விவசாயமே முக்கிய தொழிலாகவும், சிறு தொழில் நிறுவனங்களையும் கொண்டு தக்க பெருமையுடன் திண்டுக்கல்  மாவட்டம் விளங்குகிறது.


பூட்டுக்கு பெயர் போன திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று 36 ஆவது பிறந்தநாள்...!

திண்டுக்கல் நகரம் இரும்பு பூட்டுகள், மற்றும் இரும்பு பாதுகாப்பு பெட்டகங்கள் உற்பத்தி செய்வதில் பெயர் பெற்ற நகரமாகும் விளங்குகிறது. கூட்டுறவு துறையின் கீழ் ஒரு பூட்டு உற்பத்தி பிரிவு செயல்படுகிறது. திண்டுக்கல்லில் குறிப்பிட்டுள்ள மற்றொரு தொழில் தோல் பதனிடுதல் ஆகும். மதுரை-திண்டுக்கல் சாலையில் திண்டுக்கல் நகரிலிருந்து 11 கி.மீ தூரத்தில் சின்னாளபட்டி உள்ளது.  கைத்தறி தொழிலில் பெயர் பெற்று விளங்குகின்றது. சின்னாளபட்டியில் தயாரிக்கப்படும் ஆர்ட்-சில்ஸ்க் சாரிஸ் மற்றும் சுங்கடி சேலைகள் ஆகியவை இந்தியா முழுவதும் புகழ் பெற்று விளங்குகிறது. மாங்காய் விளைச்சலுக்கு நத்தமும் ,பூ விளைச்சலுக்கு நிலக்கோட்டையும் சிறப்பு பெற்றதாகும்.


பூட்டுக்கு பெயர் போன திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று 36 ஆவது பிறந்தநாள்...!

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் மாநில அளவில் அதிக வருவாய் ஈட்டும் கோயிலாக உள்ளது. தைப்பூசம், ஆடி-கிருதிகை, பாங்குனி உத்திரம், சூரசம்ஹாரம், வைகாசி விசாகம் மற்றும் மாதாந்திர கார்த்திகை போன்ற பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். 

பூட்டுக்கு பெயர் போன திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று 36 ஆவது பிறந்தநாள்...!

பழனி முருகன் கோயிலைத் தவிர 25 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள திருமலைக்கேணி முருகன் கோயிலும் வளர்ந்து வரும் யாத்திரை மையமாக மாறி வருகிறது. திண்டுக்கல் நகரிலுள்ள அபிராமி அம்மன் கோயில் மற்றும் தெத்துபட்டியில் உள்ள ராஜா காளியம்மன் கோயில் ஆகியவை மாவட்டத்தின் முக்கிய கோயில்களாக உள்ளன. 

பூட்டுக்கு பெயர் போன திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று 36 ஆவது பிறந்தநாள்...!

திண்டுக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான உலகபுகழ் பெற்ற கொடைக்கானல், கோடைக்கால வாசஸ்தலமாக திகழ்கிறது இது 2133 மீட்டர் உயரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள கொடைக்கானல் பகுதி “மலைகளின் இளவரசி” என அழைக்கப்படுகிறது. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலரை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கொடைக்கானலுக்கு வருவது வழக்கமாக உள்ளது. 

தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!

தலைப்பு செய்திகள்

விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget