Madurai: மதுரையில் காலையிலேயே அதிர்ச்சி சம்பவம்.. டிபன்பாக்ஸ் குண்டு வீச்சு - போலீசார் விசாரணை
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு நவீன்குமார் என்பவர் மீது டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டதில் அவர் காயமடைந்தார்.

மதுரை அருகே காரின் அருகே நின்று கொண்டிருந்தவர்கள் மீது டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு நவீன்குமார் என்பவர் மீது டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டதில் அவர் காயமடைந்தார். அவருக்கு அருகே நின்று கொண்டிருந்த கண்ணன் என்ற ஆட்டோ ஓட்டுநரும் காயம் அடைந்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த கீழவளவு காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த இருவரையும் போலீசார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மதுரையில் அதிகாலையில் நடைப்ற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















