மேலும் அறிய

மதுரையில் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து மூன்று இளம்பெண்கள் தற்கொலை!

24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து  3 இளம்பெண்கள் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'கொரோனா' என்ற கொடிய தொற்று காரணமாக பலரும் பாதிக்கப்பட்டனர். ஊரடங்கு காரணமாக வெளியில் செல்லமுடியாத பலரும் மன அழுத்தம் உள்ளிட்ட வேறு சில நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்கொலை சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மதுரை மாநகரில் மட்டும்  24மணி நேரத்தில் மூன்று இளம் பெண்கள் பல்வேறு காரணங்களுக்காக அடுத்தடுத்த தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மதுரையில் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து மூன்று இளம்பெண்கள் தற்கொலை!
மதுரை கரிமேடு பகுதியில் 17வயது இளம்பெண் காவியா  என்பவர் அடிக்கடி செல்போன் பயன்படுத்திவந்த காரணத்தால் பெற்றோர் கண்டித்ததன் விளைவாக வீட்டிலயே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதேபோன்று மதுரை வசந்தநகர் பகுதியை சேர்ந்த 15 வயது இளம்பெண் பிரியங்கா என்பவர் வீட்டிலிருந்து அடிக்கடி வெளியில் செல்லக்கூடாது என கண்டித்ததால் வீட்டிலயே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மதுரை சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளம்பெண் பவித்ரா என்பவர் திடிரென வீட்டிலயே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மதுரை மாநகர பகுதிக்குள்  24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து  3 இளம்பெண்கள் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடுகளிலயே முடங்கியுள்ள இளம்பெண்கள் , சிறுமிகளுக்கு மன நல ஆலோசனை வழங்கி  போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மதுரையில் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து மூன்று இளம்பெண்கள் தற்கொலை!
இது குறித்து நம்மிடம் மனநல ஆலோசகர் மற்றும் உளவியல் சிகிச்சையாளர் ப.ராஜ செளந்திரபாண்டியன்...," முன்பெல்லாம் வாழ்க்கையில் ஒரு பெரும் தோல்வியை  சந்தித்தவர்கள் மட்டுமே தற்கொலை செய்து கொண்டார்கள். அதேபோல் சிறு வயதினர் தற்கொலை செய்வது மிகவும் அரிதாகவே இருந்தது. இன்று சிறு சிறு விஷயங்களுக்கு கூட இளம் வயதினர் தற்கொலை செய்து  கொள்கின்றனர். வாழ்க்கையில் பிரச்னைகளை எதிர்த்து போராடக்கூடிய குணம் சற்று குறைந்தே காணப்படுகிறது.வீடுகளிலயே முடங்கியுள்ள இளம்பெண்கள் , சிறுமிகளுக்கு மன நல ஆலோசனை வழங்கி  போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
வீடுகளிலயே முடங்கியுள்ள இளம்பெண்கள் , சிறுமிகளுக்கு மன நல ஆலோசனை வழங்கி  போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
 
யூ ட்யூப் ஸ்டெப்ஸ், மூலிகை, வேதிப்பொருள் கலவை : குக்கர் சாராயத்தால் சிக்கிய ஆசாமிகள்
 
இதற்கு முக்கிய காரணம் பெற்றோர்களின் வளர்ப்பு முறை என்றே கூறலாம். பொதுவாக சொல்லப்போனால் 2k கிட்ஸ் சந்திக்க கூடிய பிரச்னைகளை சமாளிக்க முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் குழந்தைகளுக்கு நாம் சொல்லி தரவேண்டிய பல விஷயங்களை  சொல்லித் தராததே காரணமாகும். அது என்னவென்றால் தோல்வி, அவமானம் நிராகரிப்பு மற்றும் ஏமாற்றம். இவற்றை குழந்தைகளுக்கு கற்றுத்தர பெற்றோர்கள் மிகவும் தயங்குகிறார்கள். இதை தெரியாத ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பது சாத்தியமற்ற ஒரு விஷயமாகும். அதேபோல் ஒரு காலகட்டம் வரை அவர்களுக்கு அளவு கடந்த சுதந்திரம் கொடுத்துவிட்டு, திடீரென அவர்களிடம் அதை பறிக்கும் போது அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுவே அவர்களுக்கு தற்கொலை எண்ணத்தை தூண்டுகிறது. குழந்தைகளுக்கு தேவையான விஷயத்தை கற்றுத் தாருங்கள் அது அவர்களின் வாழ்வில் நல்ல ஒரு மாற்றத்தை உருவாக்கும்" என்றார்.
 
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Embed widget