மேலும் அறிய

கொடைக்கானல் : விளைச்சல் இருந்தும் விலையில்லாத ஏழைகளின் ஆப்பிள் : கடும் நஷ்டத்தின் விவசாயிகள்..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அதிகளவில் விளையும் ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காய் விளைச்சல் இருந்தும் விலையில்லாமல் விவசாயிகள் கடும் நட்டம் அடைந்துள்ளனர்.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்பொழுது பிளம்ஸ் சீசன் முடிவடையும்  நிலையில் ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காய் சீசன் தற்போது தொடங்கியுள்ளது . இந்த பேரிக்காய்கள்  மலைப் பிரதேசங்களில் மட்டும் அதிகமாக விளைவிக்கப்படுகின்றன, கொடைக்கானலில் முக்கிய விவசாயப்பகுதிகளான பள்ளங்கி. வில்பட்டி, பிரகாசபுரம், செண்பகனூர், பெரும்பள்ளம், சின்னபள்ளம் ஆகிய பகுதிகளில் அதிகப்படியாக பேரிக்காய்கள் பல ஏக்கர் பரப்பளவில்  விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு வருடமும் ஜூன்  மாதத்தில் தொடங்கும் பேரிக்காய் சீசன் தற்போது தொடங்கியுள்ள நிலையில் , சென்ற மாதங்களில் பெய்த மழையின் எதிரொலியால் பேரிக்காய்கள்  நல்ல விளைச்சலும் அடைந்துள்ளது. தற்போது கொடைக்கானல் மலை பகுதியில் பேரிக்காய்கள் விளைச்சல் நன்கு உள்ள நிலையில்  அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர். இயற்கையாகவே பல ஏக்கர் பரப்பளவில்  விளைகிறது இந்த பேரிக்காய்கள்  நாட்டு பேரி , ஊட்டி பேரி , வால் பேரி என பல்வேறு வகைகளில்  விளைகின்றன.

கொடைக்கானல் : விளைச்சல் இருந்தும் விலையில்லாத ஏழைகளின் ஆப்பிள் : கடும் நஷ்டத்தின் விவசாயிகள்..!

இங்கு விளைவிக்கப்படும் பேரிக்காய்களை தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடக, மும்பை  உள்ளிட்ட  பகுதிகளுக்கு  அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கொடைக்கானல் பகுதியில் உள்ள சில கிராமங்களில் உள்ள மலைகிராம விவசாயிகள் இது போன்ற சீசனில் மட்டுமே அதிகமாக லாபம் ஈட்டும் பணியில்  ஆர்வம் காட்டுவர். தற்போது உள்ள சூழலில்  தமிழகம்  முழுவதும் கொரோனா தொற்று காரணமாக  பொது முடக்கம் அமுல்படுத்தி உள்ள நிலையில் கொடைக்கானல் பகுதியில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் பேரிக்காய்கள்  கொரோனா வைரஸ் பரவும் அச்சத்தால் மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யமுடியாத நிலையிலும் அப்படி ஏற்றுமதியாகும் பேரிக்காய்கள் குறைந்த அளவே ஏற்றுமதியாகும்  சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல் : விளைச்சல் இருந்தும் விலையில்லாத ஏழைகளின் ஆப்பிள் : கடும் நஷ்டத்தின் விவசாயிகள்..!

பேரிக்காய்க்கு மருத்துவகுணம் இருப்பதால்  சர்க்கரை நோயை  கட்டுப்படுத்துகிறது , இதனால் பொதுமக்கள் அதிக அளவில் விரும்புகின்றனர். மேலும் இந்த வருடம் அதிக அளவில் மழை பெய்ததால் பேரிக்காயின் விளைச்சல் அதிகமாக இருந்துவருகிறது, தற்போது கொரோனா ஊரடங்கு அமுலில் இருப்பதால் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யமுடியாத காரணத்தினால் பழனி, திண்டுக்கல் ,மதுரை உள்ளிட்ட வெளியூர் பகுதிகளுக்கு மட்டும் பேரிக்காய்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.  இந்நிலையில்  கடந்த 2 வருடத்திற்கு முன்பு பேரிக்காய் ஒரு கிலோ 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில்,


கொடைக்கானல் : விளைச்சல் இருந்தும் விலையில்லாத ஏழைகளின் ஆப்பிள் : கடும் நஷ்டத்தின் விவசாயிகள்..!

கடந்த வருடமும், இந்த வருடமும் கொரோனா  ஊரடங்கு அமலில் இருந்து வருவதாலும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யமுடியாத காரணத்தினாலும்  ஒரு கிலோ  40 ரூபாய்க்கும் கீழ் நட்டத்திற்கே பேரிக்காய்கள் விற்பனை  செய்யப்படுவதாக விவசாயிகள் கவலையுடன் கூறுகின்றனர். கொரோனா ஊரடங்கு தளர்வுகளில் போக்குவரத்துத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டுமெனவும் ஏற்றுமதிகள் அதிகரித்தால் மட்டுமே விற்பனை அதிகரிக்கும் நிலையில் உரிய விலை கிடைக்கும் என பேரிக்காய் கொள்முதல் செய்யும் வியாபாரிகளும், விவசாயிகளும் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

தலைப்பு செய்திகள்

Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
மதுரை அரசுப் பள்ளியில் கொடியேற்றினாரா த.வெ.க., நிர்வாகி? - பூதாகரமாக வெடிக்கும் சர்ச்சை !
மதுரை அரசுப் பள்ளியில் கொடியேற்றினாரா த.வெ.க., நிர்வாகி? - பூதாகரமாக வெடிக்கும் சர்ச்சை !
பாப்பாபட்டி கிராம மக்கள் வழக்கு: 'ஜனநாயகம்' படத்திற்கு ஐகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
பாப்பாபட்டி கிராம மக்கள் வழக்கு: 'ஜனநாயகம்' படத்திற்கு ஐகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
Embed widget