மேலும் அறிய

கொடைக்கானல் : விளைச்சல் இருந்தும் விலையில்லாத ஏழைகளின் ஆப்பிள் : கடும் நஷ்டத்தின் விவசாயிகள்..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அதிகளவில் விளையும் ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காய் விளைச்சல் இருந்தும் விலையில்லாமல் விவசாயிகள் கடும் நட்டம் அடைந்துள்ளனர்.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்பொழுது பிளம்ஸ் சீசன் முடிவடையும்  நிலையில் ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காய் சீசன் தற்போது தொடங்கியுள்ளது . இந்த பேரிக்காய்கள்  மலைப் பிரதேசங்களில் மட்டும் அதிகமாக விளைவிக்கப்படுகின்றன, கொடைக்கானலில் முக்கிய விவசாயப்பகுதிகளான பள்ளங்கி. வில்பட்டி, பிரகாசபுரம், செண்பகனூர், பெரும்பள்ளம், சின்னபள்ளம் ஆகிய பகுதிகளில் அதிகப்படியாக பேரிக்காய்கள் பல ஏக்கர் பரப்பளவில்  விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு வருடமும் ஜூன்  மாதத்தில் தொடங்கும் பேரிக்காய் சீசன் தற்போது தொடங்கியுள்ள நிலையில் , சென்ற மாதங்களில் பெய்த மழையின் எதிரொலியால் பேரிக்காய்கள்  நல்ல விளைச்சலும் அடைந்துள்ளது. தற்போது கொடைக்கானல் மலை பகுதியில் பேரிக்காய்கள் விளைச்சல் நன்கு உள்ள நிலையில்  அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர். இயற்கையாகவே பல ஏக்கர் பரப்பளவில்  விளைகிறது இந்த பேரிக்காய்கள்  நாட்டு பேரி , ஊட்டி பேரி , வால் பேரி என பல்வேறு வகைகளில்  விளைகின்றன.

கொடைக்கானல் : விளைச்சல் இருந்தும் விலையில்லாத ஏழைகளின் ஆப்பிள் : கடும் நஷ்டத்தின் விவசாயிகள்..!

இங்கு விளைவிக்கப்படும் பேரிக்காய்களை தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடக, மும்பை  உள்ளிட்ட  பகுதிகளுக்கு  அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கொடைக்கானல் பகுதியில் உள்ள சில கிராமங்களில் உள்ள மலைகிராம விவசாயிகள் இது போன்ற சீசனில் மட்டுமே அதிகமாக லாபம் ஈட்டும் பணியில்  ஆர்வம் காட்டுவர். தற்போது உள்ள சூழலில்  தமிழகம்  முழுவதும் கொரோனா தொற்று காரணமாக  பொது முடக்கம் அமுல்படுத்தி உள்ள நிலையில் கொடைக்கானல் பகுதியில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் பேரிக்காய்கள்  கொரோனா வைரஸ் பரவும் அச்சத்தால் மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யமுடியாத நிலையிலும் அப்படி ஏற்றுமதியாகும் பேரிக்காய்கள் குறைந்த அளவே ஏற்றுமதியாகும்  சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல் : விளைச்சல் இருந்தும் விலையில்லாத ஏழைகளின் ஆப்பிள் : கடும் நஷ்டத்தின் விவசாயிகள்..!

பேரிக்காய்க்கு மருத்துவகுணம் இருப்பதால்  சர்க்கரை நோயை  கட்டுப்படுத்துகிறது , இதனால் பொதுமக்கள் அதிக அளவில் விரும்புகின்றனர். மேலும் இந்த வருடம் அதிக அளவில் மழை பெய்ததால் பேரிக்காயின் விளைச்சல் அதிகமாக இருந்துவருகிறது, தற்போது கொரோனா ஊரடங்கு அமுலில் இருப்பதால் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யமுடியாத காரணத்தினால் பழனி, திண்டுக்கல் ,மதுரை உள்ளிட்ட வெளியூர் பகுதிகளுக்கு மட்டும் பேரிக்காய்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.  இந்நிலையில்  கடந்த 2 வருடத்திற்கு முன்பு பேரிக்காய் ஒரு கிலோ 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில்,


கொடைக்கானல் : விளைச்சல் இருந்தும் விலையில்லாத ஏழைகளின் ஆப்பிள் : கடும் நஷ்டத்தின் விவசாயிகள்..!

கடந்த வருடமும், இந்த வருடமும் கொரோனா  ஊரடங்கு அமலில் இருந்து வருவதாலும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யமுடியாத காரணத்தினாலும்  ஒரு கிலோ  40 ரூபாய்க்கும் கீழ் நட்டத்திற்கே பேரிக்காய்கள் விற்பனை  செய்யப்படுவதாக விவசாயிகள் கவலையுடன் கூறுகின்றனர். கொரோனா ஊரடங்கு தளர்வுகளில் போக்குவரத்துத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டுமெனவும் ஏற்றுமதிகள் அதிகரித்தால் மட்டுமே விற்பனை அதிகரிக்கும் நிலையில் உரிய விலை கிடைக்கும் என பேரிக்காய் கொள்முதல் செய்யும் வியாபாரிகளும், விவசாயிகளும் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
ஏ.ஆர்.ரஹ்மான் பாரபட்சமும், வெறுப்பும் கொண்ட மனிதர்.. கங்கனா ரணாவத் பகீர் குற்றச்சாட்டு!
ஏ.ஆர்.ரஹ்மான் பாரபட்சமும், வெறுப்பும் கொண்ட மனிதர்.. கங்கனா ரணாவத் பகீர் குற்றச்சாட்டு!
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
Embed widget