மேலும் அறிய

தேனி: பண்ணைப்புரத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து இரு சிறுமிகள் உயிரிழந்த சோகம்

 உத்தமபாளையம் அருகே பண்ணைப்புரம் பேரூராட்சி சுகாதார வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து இரு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பண்ணைப்புரம் பாவலர் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகள் நிகிதா ஸ்ரீ (7). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே ஊரை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மகள் சுபஸ்ரீ (6). ஜெகதீசன் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் உடும்பன்சோலையில் தனது மனைவியுடன் தங்கியிருந்து ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

Ponniyin Selvan Twitter Review: எல்லாமே பிரமாண்டம்.. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா? பொன்னியின் செல்வன் ட்விட்டர் விமர்சனம் இதோ!


தேனி: பண்ணைப்புரத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து இரு சிறுமிகள் உயிரிழந்த சோகம்

சுபஸ்ரீ பண்ணைப்புரத்தில் உள்ள தனது தாத்தா வீட்டில் வசித்து வந்த நிலையில், இவரும் அதே பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்துள்ளனர். நேற்று மாலை சுபஸ்ரீ, நிகிதாஸ்ரீ ஆகிய இருவரும் அங்குள்ள 7-வது வார்டில் உள்ள பெண்கள் கழிப்பறை அருகே வேப்பமரத்திற்கு கீழே விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அருகே அமைக்கப்பட்டிருந்த கழிவுநீர் தொட்டி (செப்டிக் டேங்) மீதும் ஏறி விளையாடினர். இதில் கழிவுநீர் தொட்டியின் மூடி பழுதாகி இருந்ததால் அதன் மீது மிதித்ததில் மூடி உடைந்து எதிர்பாராதவிதமாக சிறுமிகள் 2 பேரும் தொட்டிக்குள் தவறி விழுந்தனர்.

IND vs SA T20 : டி20 அப்டேட் இதோ இங்கே.. பும்ராவிற்கு பதில் களமிறங்கப் போவது யார் தெரியுமா?


தேனி: பண்ணைப்புரத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து இரு சிறுமிகள் உயிரிழந்த சோகம்

இதை அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவா்கள் பாா்த்து பொதுமக்களிடம் கூறினர். இதையடுத்து அங்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர். பின்னர் இளைஞா்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த சிறுமிகளை மீட்டனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

Viral Video : மூழ்கும் வீடுகள்.. பதைபதைப்பு காட்சிகள்.. புளோரிடா மாகாணத்தையே உருக்குலைத்த இயான் புயல்..


தேனி: பண்ணைப்புரத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து இரு சிறுமிகள் உயிரிழந்த சோகம்

இதையடுத்து சிறுமிகளின் உடலை பாா்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இதற்கிடையே கழிவுநீர் தொட்டியை சீரமைக்காததால் சிறுமிகள் உயிரிழந்ததாக கூறி பொதுமக்கள் பண்ணைப்புரம் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உத்தமபாளையம் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து 2 சிறுமிகள் பலியான சம்பவம் உத்தமபாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget