மேலும் அறிய

தேனி: கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

பின்னர் சக்திவேலின் தலையை தனியாக துண்டித்து எடுத்து ஒரு பையில் வைத்து ஊருக்குள் எடுத்து வந்தார். அங்கு கிருஷ்ணன் வீட்டுக்கு சென்று பையில் எடுத்து வந்த சக்திவேலின் தலையை அங்கு வீசினார்.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள டி.மீனாட்சிபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பழனிசாமி என்ற முஸ்தபா மகன் சக்திவேல் (28). இவர், அதே ஊரில் உள்ள சுப்பையன் என்பவரின் தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி கூலிவேலை பார்த்து வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி சக்திவேல், அதே ஊரை சேர்ந்த தனது நண்பர்களான கிருஷ்ணன், கருப்பசாமி ஆகியோருடன் மதுபானம் வாங்கிவிட்டு தோட்டத்தில் மதுகுடிக்க சென்றார். தோட்டத்துக்கு செல்லும் வழியில் அதே ஊரை சேர்ந்த செல்லத்துரை (69) வந்து கொண்டிருந்தார். சக்திவேல் உள்பட 3 பேரும், செல்லத்துரையை மது குடிக்க அழைத்தனர். அவரும், அவர்களுடன் மது குடிக்கச் சென்றார்.

தேனி: கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை -  நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தோட்டத்துக்கு சென்றதும் செல்லத்துரைக்கு கொடுக்காமல் மற்ற 3 பேரும் மது குடித்தனர். இது செல்லத்துரைக்கு கோபத்தை ஏற்படுத்தியது. தன்னை அழைத்து வந்து மது கொடுக்காமல் இருப்பது குறித்து அவர் கேட்டார். அப்போது சக்திவேல் அவரை கேலி செய்து கையால் தாக்கினார். பின்னர், கருப்பசாமியை மீண்டும் மதுபானம் வாங்கி வருமாறு சக்திவேல் அனுப்பி வைத்தார். இதனால், கோபம் அடைந்த செல்லத்துரை அங்கிருந்து பழனிசாமியின் வீட்டுக்கு சென்றார். அவரிடம், சக்திவேல் தன்னை அவமானப்படுத்தியதால் அவனை கொல்லாமல் விடமாட்டேன் என்று மிரட்டினார். பின்னர் அவர் அங்கிருந்து சென்று விட்டார்.

தேனி: கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை -  நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

செல்லத்துரையால் தனது மகனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று எண்ணிய பழனிசாமி, தனது வீட்டில் இருந்து புறப்பட்டு தோட்டத்துக்கு சென்றார்.  அப்போது தோட்டத்தில் தனியாக இருந்த சக்திவேலை, செல்லத்துரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொண்டிருந்தார். அதை பார்த்து பழனிசாமி அதிர்ச்சி அடைந்தார். தனது மகனை காப்பாற்ற ஓடினார். அப்போது செல்லத்துரை அரிவாளை காட்டி அவரையும் கொன்று விடுவதாக மிரட்டினார். இதனால் அவர் அங்கிருந்து தப்பி ஊருக்குள் ஓடி வந்தார். இதையடுத்து சக்திவேலை வெட்டி செல்லத்துரை படுகொலை செய்தார்.

தேனி: கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை -  நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

பின்னர் சக்திவேலின் தலையை தனியாக துண்டித்து எடுத்து ஒரு பையில் வைத்து ஊருக்குள் எடுத்து வந்தார். அங்கு கிருஷ்ணன் வீட்டுக்கு சென்று பையில் எடுத்து வந்த சக்திவேலின் தலையை அங்கு வீசினார். அதைப் பார்த்து கிருஷ்ணன் அங்கிருந்து பதறியடித்து ஓடினார்.  இந்த சம்பவம் குறித்து தேவாரம் காவல் நிலையத்தில் பழனிசாமி புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லத்துரையை கைது செய்தனர்.

பின்னர் அவர் மீது, தேனி மாவட்ட கூடுதல் அமர்வு  நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், அரசு தரப்பில் வழக்கறிஞர் சுகுமாறன் ஆஜராகி வாதாடினார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட செல்லத்துரைக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.10,500 அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து செல்லத்துரையை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget