மேலும் அறிய

தேனி: கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

பின்னர் சக்திவேலின் தலையை தனியாக துண்டித்து எடுத்து ஒரு பையில் வைத்து ஊருக்குள் எடுத்து வந்தார். அங்கு கிருஷ்ணன் வீட்டுக்கு சென்று பையில் எடுத்து வந்த சக்திவேலின் தலையை அங்கு வீசினார்.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள டி.மீனாட்சிபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பழனிசாமி என்ற முஸ்தபா மகன் சக்திவேல் (28). இவர், அதே ஊரில் உள்ள சுப்பையன் என்பவரின் தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி கூலிவேலை பார்த்து வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி சக்திவேல், அதே ஊரை சேர்ந்த தனது நண்பர்களான கிருஷ்ணன், கருப்பசாமி ஆகியோருடன் மதுபானம் வாங்கிவிட்டு தோட்டத்தில் மதுகுடிக்க சென்றார். தோட்டத்துக்கு செல்லும் வழியில் அதே ஊரை சேர்ந்த செல்லத்துரை (69) வந்து கொண்டிருந்தார். சக்திவேல் உள்பட 3 பேரும், செல்லத்துரையை மது குடிக்க அழைத்தனர். அவரும், அவர்களுடன் மது குடிக்கச் சென்றார்.

தேனி: கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தோட்டத்துக்கு சென்றதும் செல்லத்துரைக்கு கொடுக்காமல் மற்ற 3 பேரும் மது குடித்தனர். இது செல்லத்துரைக்கு கோபத்தை ஏற்படுத்தியது. தன்னை அழைத்து வந்து மது கொடுக்காமல் இருப்பது குறித்து அவர் கேட்டார். அப்போது சக்திவேல் அவரை கேலி செய்து கையால் தாக்கினார். பின்னர், கருப்பசாமியை மீண்டும் மதுபானம் வாங்கி வருமாறு சக்திவேல் அனுப்பி வைத்தார். இதனால், கோபம் அடைந்த செல்லத்துரை அங்கிருந்து பழனிசாமியின் வீட்டுக்கு சென்றார். அவரிடம், சக்திவேல் தன்னை அவமானப்படுத்தியதால் அவனை கொல்லாமல் விடமாட்டேன் என்று மிரட்டினார். பின்னர் அவர் அங்கிருந்து சென்று விட்டார்.

தேனி: கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

செல்லத்துரையால் தனது மகனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று எண்ணிய பழனிசாமி, தனது வீட்டில் இருந்து புறப்பட்டு தோட்டத்துக்கு சென்றார்.  அப்போது தோட்டத்தில் தனியாக இருந்த சக்திவேலை, செல்லத்துரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொண்டிருந்தார். அதை பார்த்து பழனிசாமி அதிர்ச்சி அடைந்தார். தனது மகனை காப்பாற்ற ஓடினார். அப்போது செல்லத்துரை அரிவாளை காட்டி அவரையும் கொன்று விடுவதாக மிரட்டினார். இதனால் அவர் அங்கிருந்து தப்பி ஊருக்குள் ஓடி வந்தார். இதையடுத்து சக்திவேலை வெட்டி செல்லத்துரை படுகொலை செய்தார்.

தேனி: கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

பின்னர் சக்திவேலின் தலையை தனியாக துண்டித்து எடுத்து ஒரு பையில் வைத்து ஊருக்குள் எடுத்து வந்தார். அங்கு கிருஷ்ணன் வீட்டுக்கு சென்று பையில் எடுத்து வந்த சக்திவேலின் தலையை அங்கு வீசினார். அதைப் பார்த்து கிருஷ்ணன் அங்கிருந்து பதறியடித்து ஓடினார்.  இந்த சம்பவம் குறித்து தேவாரம் காவல் நிலையத்தில் பழனிசாமி புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லத்துரையை கைது செய்தனர்.

பின்னர் அவர் மீது, தேனி மாவட்ட கூடுதல் அமர்வு  நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், அரசு தரப்பில் வழக்கறிஞர் சுகுமாறன் ஆஜராகி வாதாடினார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட செல்லத்துரைக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.10,500 அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து செல்லத்துரையை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
Embed widget