மேலும் அறிய

4ஆவது முறையாக 142 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை

’’கடந்த மாதம் 29 ஆம் தேதி கேரள நீர்பாசன துறை அமைச்சர் ரோஸின் அகஸ்டின் தலைமையிலான அதிகாரிகள் தமிழகத்திற்கு தெரியாமல் அணையில் 136 அடி இருக்கும் போதே தண்ணீரை திறந்து விட்டதாக புகார் எழுந்தது’’

தமிழக-கேரள இரு மாநில எல்லையில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையின் நீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது முல்லை பெரியாறு அணை. முல்லை பெரியாறு அணையின் மொத்த நீர்மட்டம் 155 அடி ஆகும் 142 அடி வரை தண்ணீர் தேக்கி கொள்ளலாம் என்றும், பேபி அணையை பலப்படுத்தி விட்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்றும் கடந்த 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வரலாற்று மிக்க சிறப்பு தீர்ப்பு அளித்தது.


4ஆவது முறையாக 142 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை

இதனை தொடர்ந்து அணையில் இதுவரையில் 3 முறை 142 அடி வரையில் தண்ணீர் தேக்கப்பட்டது. கடந்த மாதம் முல்லை பெரியாறு  நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் கன மழையால் அணையின் நீர் மட்டம் விரைவாக உயர தொடங்கியது. இந்த நிலையில் கடந்த மாதம் 29 ஆம் தேதி கேரள நீர்பாசன துறை அமைச்சர் ரோஸின் அகஸ்டின் தலைமையிலான அதிகாரிகள் தமிழகத்திற்கு தெரியாமல் அணையில் 136 அடி இருக்கும் போதே தண்ணீரை திறந்து விட்டதாக புகார் எழுந்தது. இதற்கு பதில் அளித்த தமிழக நீர்பாசன துறை அமைச்சர் துரைமுருகன் Rule Curve விதிமுறைப்படிதான் தண்ணீர் திறந்து விடப்பட்டது என பதிலளித்தார்.


4ஆவது முறையாக 142 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை

தற்போது தொடரும் வடகிழக்குப் பருவமழையால் பெரியாறு அணை இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.55 மணிக்கு 142 அடியை எட்டியது. இதையடுத்து, அணையில் இருந்து விநாடிக்கு 2300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டமானது 142 அடியை எட்டியவுடன் அபாய ஒலி அடித்து இறுதிகட்ட எச்சரிக்கை விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 142 அடிக்கு மேல் அணைக்கு வரும் நீரானது முழுவதுமாக உபரிநீராக திறந்துவிடப்படும். தற்பொழுது நீா் இருப்பு 7,666 (7.6 டி.எம்.சி) மில்லியன் கன அடியாக உள்ளது. 


4ஆவது முறையாக 142 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை

பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்த்தேக்க கடந்த 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து 2014, 2015 மற்றும் 2018ம் ஆண்டுகளில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டோடு நான்காவது முறையாக அணை 142 அடியை எட்டியதால் ஐந்து மாவட்ட பொது மக்கள், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  பெரியாறு அணையின் உறுதித்தன்மை தொடர்ந்து நிறுபிக்கப்பட்டு வருவதால் பேபி அணையை பலப்படுத்தி அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுவடைந்து வருகின்றது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
Gold Silver Rates Dec.22nd: ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
Mahindra Scorpio N: புத்தாண்டில் மஹிந்த்ராவின் சம்பவம் - ஸ்கார்ப்பியோ அப்க்ரேட், என்ன இருக்கு? எப்படி வரும்?
Mahindra Scorpio N: புத்தாண்டில் மஹிந்த்ராவின் சம்பவம் - ஸ்கார்ப்பியோ அப்க்ரேட், என்ன இருக்கு? எப்படி வரும்?
தானத்தில் தழைத்தோங்கும் தமிழ்நாடு.. 5 ஆண்டுகளில் உடல் உறுப்பு தானத்தில் மாஸ் காட்டிய தமிழகம்!
தானத்தில் தழைத்தோங்கும் தமிழ்நாடு.. 5 ஆண்டுகளில் உடல் உறுப்பு தானத்தில் மாஸ் காட்டிய தமிழகம்!
Embed widget