மேலும் அறிய

தேனி மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழை - பல லட்சம் மதிப்பிலான மரங்கள் சேதம்

பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான வாழை, பப்பாளி, முருங்கை, தென்னை உள்ளிட்ட விவசாய பயிர்கள் ஒடிந்து சேதம்.

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி , பெரியகுளம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும்  தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய நகரமான கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளையொட்டியுள்ள கம்பம், கூடலூர், உத்தமபாளையம், காமய கவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையின் காரணமாக பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்துள்ளது.  நீண்ட நாட்களாக வெயிலின் தாக்கம் சுட்டெரித்து கொண்டிருந்த நிலையில் திடீரென பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தேனி மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழை - பல லட்சம் மதிப்பிலான மரங்கள் சேதம்

பலத்த காற்றுக்கு மரங்கள் சாய்ந்து சேதம்

இந்த நிலையில்  பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரம் பகுதியில் நேற்று மாலை பலத்த சூராவளி காற்றுடன் சாரல் மழை பெய்தது. அப்பொழுது வீசிய பலத்த சூராவளி காற்றால்  குள்ளப்புரம், சங்கரமூர்த்திபட்டி, ஒத்த வீடு   உள்ளிட்ட பகுதிகளில் 3,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள், இரண்டு ஏக்கரில் நடவு செய்யப்பட்டு இருந்த பப்பாளி மரங்கள், மேலும் 3 ஏக்கரில் முருங்கை மரங்கள்  மற்றும் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தது.


தேனி மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழை - பல லட்சம் மதிப்பிலான மரங்கள் சேதம்

இந்நிலையில் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகள் கூறுகையில், "சூறாவளி காற்றால் இரண்டு மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பிஞ்சு வாழை தார்கள் ஒடிந்து சேதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் பப்பாளி மரங்கள் காய் பலம் பிஞ்சு உள்ளிட்டவைகளும் ஒடிந்து சேதம் அடைந்ததோடு முருங்கை மரங்கள், தென்னை மரங்கள் காய்களுடன்  ஒடிந்து சேதம் ஏற்பட்டது. மேலும் சூறாவளி காற்றால் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான  வாழை, பப்பாளி, முருங்கை, தென்னை  உள்ளிட்ட விவசாய விலை பொருட்கள்  ஒடிந்து சேதம் ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசு ஊழிய கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கம்பம் பகுதியில் பலத்த காற்றுக்கு ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் ஒடிந்து சேதம்

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த விவசாயி முத்தையா மற்றும் அவரது மகன் கூடலிங்கம் ஆகியோர் கம்பம் கூடலூர் சாலையில் உள்ள பெண்கள் கல்லூரிக்கு பின்புறம் உள்ள சாளமலை ஈஸ்வரன்கோவில் பகுதியில் உள்ள தனுஷ்கோடி என்பவரது தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து வாழை விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது சுமார் 10 ஆயிரம் நாழிப்பூவன் வாழை பயிர் செய்து விவசாயத்தை கவனித்து வந்துள்ளனர். இந்நிலையில், இன்று மாலை கம்பம், கூடலூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.



தேனி மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழை - பல லட்சம் மதிப்பிலான மரங்கள் சேதம்

இந்த பலத்த காற்றில், விவசாயி முத்தையாவின் பத்து மாத வளர்ச்சியடைந்த ஆயிரக்கணக்கான வாழைகள் ஒடிந்து சேதமானது. சேதமடைந்த வாழைகள் அனைத்தும் இன்னும் ஓரிரு மாதத்தில் பலன் எடுக்கும் பருவத்தில் இருந்ததால் விவசாயிக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயி கூட லிங்கம் கூறுகையில்,  “பக்குவமாய் பாதுகாத்து வளர்த்து வந்த வாழைகள் இன்னும் ஓரிரு மாதத்தில் பலன் எடுக்கும் பருவத்தில் இருந்தபோது திடீரென பெய்த மழையால் ஆயிரக்கணக்கான வாழைகள் ஒடிந்து சேதமாகி உள்ளது. இதனால் லட்டசக்கணக்கான ருபாய் இழப்பு ஏற்பட்டள்ளது. அரசு இதை கருத்தில்கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
TVK Vijay : “தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
“தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?BJP MP Bajan in Vande Bharat : ஓடும் ரயிலில் பஜனை! பாஜக MP-யின் சர்ச்சை வீடியோVCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
TVK Vijay : “தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
“தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
Aadhav Arjuna :  “ஆதவிற்கு உள்நோக்கமா?” திருமாவிடம் அர்ஜூனா கொடுத்த பரபரப்பு விளக்கம் இதுதான்..!
“ஆதவிற்கு உள்நோக்கமா?” திருமாவிடம் அர்ஜூனா கொடுத்த விளக்கம் இதுதான்..!
மசாஜ் சென்டர் சோதனை - ஜன்னல் வழியாக தப்ப முயன்ற பெண்கள்: சென்னையில் பரபரப்பு
மசாஜ் சென்டர் சோதனை - ஜன்னல் வழியாக தப்ப முயன்ற பெண்கள்: சென்னையில் பரபரப்பு
Nitin Gadkari: பிரதமர் ஆக ஆசையா? மோடிகிட்ட கேளுங்க? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நச் பதில்
Nitin Gadkari: பிரதமர் ஆக ஆசையா? மோடிகிட்ட கேளுங்க? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நச் பதில்
Breaking News LIVE 27th Sep 2024: இன்றுடன் முடிவடைகிறது காலாண்டுத் தேர்வு! நாளை முதல் தொடங்குது விடுமுறை!
Breaking News LIVE 27th Sep 2024: இன்றுடன் முடிவடைகிறது காலாண்டுத் தேர்வு! நாளை முதல் தொடங்குது விடுமுறை!
Embed widget