மேலும் அறிய

100 மரக்கன்றுகளை 20 நாட்களில் நடவேண்டும் - மரங்களை வெட்டிய ஊராட்சிக்கு நீதிமன்றம் நச் உத்தரவு...!

''மின்சார வழித்தடத்திற்கு இடையூறு என ஊராட்சி நிர்வாகம் கிளைகளை மட்டுமே வெட்ட அனுமதி அளித்த நிலையில், நாவல், வாகை, வேம்பு, அரச மரங்கள் என ஐந்து மரங்கள் வெட்டப்பட்டன''

பொதுநல நோக்கத்தில் ஐடி ஊழியர் நட்டு பராமரித்து வந்த மரங்களில், அவசியமின்றி ஐந்து மரங்களை வெட்டிய ஊராட்சி நிர்வாகம், பயன்தரக் கூடிய 100 மரக்கன்றுகளை 30 நாட்களுக்குள் நட்டு தொடர்ந்து பராமரிக்க வேண்டும். என தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மக்களில் பலருக்கும் மரம் நட வேண்டும் என்ற ஆசை இருக்கும், ஆனால் எங்கு நடுவது அதை எப்படி பராமரிப்பது என்று தெரியாமல் இருப்பர். இப்படி மரம் நடவு செய்ய விரும்பும் மர ஆர்வலர்கள் சொந்தமாக நிலம் இல்லாவிட்டாலும், அவர்கள் தங்களுக்கு உகந்த இடத்தில் மரம் நடும், அதனை பராமரித்து வருவர். அப்படி மரம் நட்டு, அதனைத் தொடர்ந்து  பராமரித்து வருபவர்களுக்கு அதன் கடுமை பற்றி தெரியும். தேனி மாவட்டத்தில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் நபர் மரம் வளர்க்கும் ஆர்வத்தில் நட்டுவைத்த மரத்தை தேவையின்றி வெட்டிய ஊராட்சி நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்து அதிலும் வெற்றி பெற்றுள்ளார் அந்த நபர். 


100 மரக்கன்றுகளை 20 நாட்களில் நடவேண்டும் - மரங்களை வெட்டிய ஊராட்சிக்கு நீதிமன்றம் நச் உத்தரவு...!

தேனி மாவட்டம் ஸ்ரீ ரெங்காபுரம் பள்ளித் தெருவை சேர்ந்தவர் 29 வயதாகும் சதீஷ்குமார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியர் ஆக பணிபுரிகிறார். தற்போது கொரோனா பரவல் காரணமாக வீட்டில் இருந்து பணி செய்து வருகிறார். இவர் தன் நண்பர்கள் 40 பேருடன் இணைந்து 2009ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் அன்று ஊராட்சியின் மைதானப் பகுதியில் 22 மரக்கன்றுகளை நட்டு பராமரித்தார். இந்த மரங்கள் செழிப்பாக வளர்ந்தன.


100 மரக்கன்றுகளை 20 நாட்களில் நடவேண்டும் - மரங்களை வெட்டிய ஊராட்சிக்கு நீதிமன்றம் நச் உத்தரவு...!

இந்நிலையில் ஜூலை 8ஆம் தேதி மின்சார வழித்தடத்திற்கு இடையூறு என, ஊராட்சி நிர்வாகம் கிளைகளை மட்டுமே வெட்ட அனுமதி அளித்த நிலையில், ஊராட்சி கூடுதல் கட்டடத்தில் இருந்து ஊராட்சி அலுவலகத்திற்கு செல்லும் ரோட்டில் நாவல், வாகை, வேம்பு, அரச மரங்கள் என ஐந்து மரங்கள் வெட்டப்பட்டன. இது குறித்து சதீஷ் குமார் ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டதற்கு முறையான பதில் இல்லை. இதனால் இவர் ஜூலை 12ஆம் தேதி  தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு 'ஆன்லைனில்' புகார் அனுப்பினார். இது குறித்து  வீரபாண்டி ஸ்டேஷனில் கடந்த ஜூலை 13ஆம் தேதியன்று விசாரணை நடந்து. ஆனால் இதற்கு முழுமையான தீர்வு காணப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஜூலை 15ஆம் தேதி தேனி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் சதீஷ்குமார். 

100 மரக்கன்றுகளை 20 நாட்களில் நடவேண்டும் - மரங்களை வெட்டிய ஊராட்சிக்கு நீதிமன்றம் நச் உத்தரவு...!

மக்கள் நீதிமன்ற நிரந்தர தீர்ப்பாயம், ஸ்ரீரெங்கபுரம் ஊராட்சித் தலைவர் பெருமாள், எழுத்தர் சுருளி, தேனி உதவி மின் பொறியாளர் புனிதபத்பநாபன், தாடிச்சேரி வி.ஏ.ஓ., ராமச்சந்திரன், நேரில் விளக்கம் அளிக்க 'சம்மன்' அனுப்பியது. மேலும்  தொடர் விசாரணை நிரந்தர மக்கள் நீதிமன்ற வளாகத்தில் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடந்தது. விசாரணையின் முடிவில், நீதிபதி முகமது ஜியாவுதீன், "அவசியம் இன்றி மரங்களை வெட்டுவதை தவிர்க்க வேண்டும். "வெட்டப்பட்ட ஐந்து மரங்களுக்கு ஈடாக ஊராட்சி நிர்வாகம், 100 மரக்கன்றுகளை ஒரு மாதத்திற்குள் நட்டு பராமரிக்க வேண்டும். அதனை வி.ஏ.ஓ. உறுதிப்படுத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்," என, தீர்ப்பளித்தார்.

தேவை இன்றி மரங்கள் வெட்டப்படுவதை தடுப்பதற்காக சமூக ஆர்வலர் எடுத்த நடவடிக்கையின் மூலம், ஊராட்சி நிர்வாகம் 100 மரக்கன்றுகளை நட வைத்த சம்பவம் அப்பகுதி இயற்கை ஆர்வலர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
Tomato Price: பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget