மேலும் அறிய

முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு 4 வாரங்களில் அனுமதி அளிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்

அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு பணியாளர்கள் சென்று வர அனுமதிப்பது, படகுகள் செல்வது, சாலை அமைப்பது, மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாடு அரசு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக மரங்களை வெட்டுவதற்கு மத்திய மற்றும் கேரள அரசுகள் 4 வாரங்களில் அனுமதி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு 4 வாரங்களில் அனுமதி அளிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்

தமிழக, கேரளா எல்லையை இணைக்கும் ஒரு முக்கிய மாவட்டமாக பார்க்கப்படுவதும் தேனி மாவட்டம். தேனி மாவட்டத்தின் பிரதான தொழிலாக விளங்குவது விவசாயம். இப்பகுதியில் நெல், தென்னை, திராட்சை, வாழை உள்ளிட்ட பயிர்களின் விவசாயம் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. மேலும் காய்கறிகளின் உற்பத்தியும் அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் விவசாயத்திற்கு உயிர்நாடியாக விளங்குகிறது முல்லைப் பெரியாறு அணை. முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தொடர்ந்து பல்வேறு முரணான கருத்துக்களையும்,எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகள், தனிநபர்கள் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணையில் உள்ளன. இந்நிலையில், மழைக்காலம் தொடங்கும் முன் முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உரிய உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல் செய்தது.  அந்த மனுவில், அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு பணியாளர்கள் சென்று வர அனுமதிப்பது, படகுகள் செல்வது, சாலை அமைப்பது, மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. 


முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு 4 வாரங்களில் அனுமதி அளிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்

அப்போது, நீதிபதிகள், "பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில் முன்னேற்றம் உள்ளதா?" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு கேரள அரசு தரப்பு வழக்கறிஞர், 'வல்லக்கடவு சாலையை சீரமைக்க வேண்டும். ஆனால் தமிழ்நாடு அரசு உரிய முறையில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவில்லை' என்று கூறினார்.  அப்போது தமிழ்நாடு அரசு வழக்கறிஞர், 'மரங்களை வெட்ட கேரள அரசு முன்பு அனுமதி அளித்தது. ஆனால், தற்போது மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கோர வேண்டும் என கூறுகிறது. அதற்கும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார். மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், 'தமிழ்நாடு அரசின் மனுவை பரிசீலித்து வருகிறோம். விரைந்து முடிவெடுக்க வேண்டும்' என்று கூறினார். 


முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு 4 வாரங்களில் அனுமதி அளிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்

இதையடுத்து, நீதிபதிகள், 'அணை பராமரிப்புக்கு மரங்களை வெட்ட அனுமதி வழங்க கேரளாவுக்கும், மத்திய அரசுக்கும் கால நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்படும்' என்று தெரிவித்தனர். மேலும், 'மராமத்து பணிகளை நடத்த ஏதுவாக வல்லக்கடவு சாலையை கேரள அரசே ஏன் சீரமைக்கக் கூடாது? பணியாளர்கள் செல்ல 2-வது படகு ஒன்றை தமிழ்நாடு அரசுக்கு கேரளா அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினர்.  அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், 'சாலையை கேரள அரசு சீரமைத்தால், அதற்கான செலவை ஏற்கிறோம்' என்று கூறினார். இதையடுத்து, நீதிபதிகள், 'மரங்களை வெட்ட 4 வாரத்தில் அனுமதி வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் கேரள அரசே வல்லகடவு சாலையை சீரமைக்க வேண்டும். படகு ஒன்றையும் தமிழ்நாடு அரசுக்கு கொடுக்க வேண்டும். எஞ்சிய பிரச்னைகள் குறித்து முடிவு செய்ய அணையின் மேற்பார்வைக்குழு உடனடியாக கூடி 4 வாரத்தில் முடிவுகள் எடுக்க வேண்டும்' என்று தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

நிதிஷ்குமார் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கதிதான், நாளைக்குப் பழனிசாமிக்கும் - எச்சரித்த தமிழக முதல்வர் !
நிதிஷ்குமார் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கதிதான், நாளைக்குப் பழனிசாமிக்கும் - எச்சரித்த தமிழக முதல்வர் !
போக்சோ சட்டம்: இளைஞருக்கு அதிர்ச்சி தீர்ப்பு ரத்து.. அரசு பள்ளிகளில் விழிப்புணர்வு அவசியம் - மதுரை அமர்வு உத்தரவு !
போக்சோ சட்டம்: இளைஞருக்கு அதிர்ச்சி தீர்ப்பு ரத்து.. அரசு பள்ளிகளில் விழிப்புணர்வு அவசியம் - மதுரை அமர்வு உத்தரவு !
பள்ளி மாணவர்கள்: தொல்லியல் தடங்களை கண்டறிய உதவுங்கள்.. ராமநாதபுரம் ஆய்வாளர் அழைப்பு !
பள்ளி மாணவர்கள்: தொல்லியல் தடங்களை கண்டறிய உதவுங்கள்.. ராமநாதபுரம் ஆய்வாளர் அழைப்பு !
Madurai Hc ; நியோமேக்ஸ் மோசடி: பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கிடைக்கும் வகையில் செயல்பட்ட அரசுக்கு நீதிபதி பாராட்டு !
Madurai Hc ; நியோமேக்ஸ் மோசடி: பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கிடைக்கும் வகையில் செயல்பட்ட அரசுக்கு நீதிபதி பாராட்டு !
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
Governor Salary: ஒரே நபர்.. மூன்று பதவிகள்! ஆளுநர்களின் சம்பள ரகசியம் இதுதான்
Governor Salary: ஒரே நபர்.. மூன்று பதவிகள்! ஆளுநர்களின் சம்பள ரகசியம் இதுதான்
TVK Vijay: ‘எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” - மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு... முதல்முறையாக வாய் திறந்த விஜய்
‘எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” - மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு... முதல்முறையாக வாய் திறந்த விஜய்
Tata Offers: 3.30 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. டாடா கார்களுக்கு மார்ச் மாத தள்ளுபடி - எந்த காருக்குப்பா?
Tata Offers: 3.30 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. டாடா கார்களுக்கு மார்ச் மாத தள்ளுபடி - எந்த காருக்குப்பா?
TVK Vijay: அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்த விஜய்.. ஆனந்த கண்ணீர் வடித்த பெண்கள் - வீடியோவை பாருங்க!
TVK Vijay: அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்த விஜய்.. ஆனந்த கண்ணீர் வடித்த பெண்கள் - வீடியோவை பாருங்க!
விஜய் அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500, இலவச சிலிண்டர்கள் & மேலும் பல!
விஜய் அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500, இலவச சிலிண்டர்கள் & மேலும் பல!
TVK Vijay: விஜய்க்கு போட்டியாக களமிறங்கப்போகும் விசிக? தளபதிக்கு எதிராக இறங்கப்போவது இவரா?
TVK Vijay: விஜய்க்கு போட்டியாக களமிறங்கப்போகும் விசிக? தளபதிக்கு எதிராக இறங்கப்போவது இவரா?
Election 2026: பதற்றமான ஏரியாக்கள் எது? லிஸ்ட் எடுக்கும் போலீஸ்! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி 'பிளான்'!
Election 2026: பதற்றமான ஏரியாக்கள் எது? லிஸ்ட் எடுக்கும் போலீஸ்! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி 'பிளான்'!
Embed widget