மேலும் அறிய
சீமைக்கருவேல அகற்றும் இடங்களில் நாட்டு மரங்கள்: உயர் நீதிமன்றம் அதிரடி முடிவு!
வழக்கறிஞர்கள் தன்னார்வலர்களாக ஈடுபடுவது பாராட்டுக்குரியது என குறிப்பிட்டு, தலைமை நீதிபதியிடம் அனுமதி பெற்று சிறப்பு அமர்வுக்கு மாற்ற உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைத்தனர்

மதுரைக் கிளை
தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படும் இடங்களில், நாட்டுவகை மரங்களை நட்டுத் வளர்க்கக் கோரிய வழக்கு, தலைமை நீதிபதியிடம் அனுமதி பெற்று இந்த வழக்கையும் வனம் தொடர்பான சிறப்பு அமர்வுக்கு மாற்ற மதுரை அமர்வு உத்தரவு
நாட்டுவகை மரங்களை வளர்க்க உத்தரவிடக்கோரி பொதுநல வழக்கு
நெல்லையைச் சேர்ந்த ஜீவரத்தினம் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், "தமிழகத்தில் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வரும் சூழலில், சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படும் இடங்களில், நாட்டுவகை மரங்களை வளர்க்க உத்தரவிடக்கோரி பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
வழக்கறிஞர்களும் முன்வந்து இப்பணியில் தங்களை இணைத்துள்ளனர்"
இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், "ஏற்கனவே சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகள் சிறப்பு அமர்வு முன்பாக நிலுவையில் உள்ளது. வழக்கறிஞர்களும் முன்வந்து இப்பணியில் தங்களை இணைத்துள்ளனர்" என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், " வழக்கறிஞர்கள் தன்னார்வலர்களாக ஈடுபடுவது பாராட்டுக்குரியது என குறிப்பிட்டு, தலைமை நீதிபதியிடம் அனுமதி பெற்று சிறப்பு அமர்வுக்கு மாற்ற உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைத்தனர்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















