பழனி தண்டபாணி மடம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!
வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பழனி தண்டபாணி மட விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கு – சிபிசிஐடி நிலை அறிக்கை தாக்கல் செய்ய மதுரை அமர்வு உத்தரவு.
சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.
பழனி தண்டபாணி மடத்திற்கு சொந்தமான சொத்துகள் மற்றும் பத்திரப்பதிவு தொடர்பான முறைகேடு புகார்கள் குறித்து நடைபெற்று வரும் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், இன்று மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தன. அதிமுக முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால், அன்னபூரணி சிவக்குமார் மற்றும் பழனி நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி பிரதீப் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில், இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.
ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த மனுக்களை நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, வழக்கின் தற்போதைய விசாரணை நிலை குறித்து சிபிசிஐடி தரப்பில் விரிவான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Before You Go
Cauvery Issue : "நாங்களே வறட்சியில் இருக்கோம்! ஹெலிகாப்டர்ல வந்து பாருங்க" விஜய்க்கு DKS அழைப்பு!
ட்ரெண்டிங் செய்திகள்






















