மேலும் அறிய

டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்

ஒரு நாளைக்கு 25 லட்சம் இலைகள் அறுவடை செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால் நேற்று தஞ்சை மாவட்டத்தில் பெய்த அடைமழை காரணமாக விவசாய பணிகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டன.

தஞ்சாவூர்: டிட்வா புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்த மழையின் காரணமாக 25 லட்சம் வாழை இலை அறுவடை மழையால் முற்றிலும் முடங்கியது. முகூர்த்த நாள் என்பதால் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதியான திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, கண்டியூர், மேலத்திருப்பூந்துருத்தி, வளப்பக்குடி, வடுகக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளைவிக்கப்படும் வாழைத்தார் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதே போல் வாழை இலைகள் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கும், தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.


டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்

இந்த பகுதிகளில இருந்து ஒரு நாளைக்கு 25 லட்சம் இலைகள் அறுவடை செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால் நேற்று தஞ்சை மாவட்டத்தில் பெய்த அடைமழை காரணமாக விவசாய பணிகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக வாழை இலை அறுவடைகள் முற்றிலும் முடங்கின. இதனால் தொழிலாளர்களும் வேலை இழந்தனர்.

சென்னையில் பலத்த மழை பெய்யும் என்பதால் நேற்று வாழை இலைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டதாலும், மழையாலும் வாழை இலைகள் அறுவடை செய்யப்படவில்லை. 25 லட்சம் இலைகள் அறுவடை செய்யப்படவில்லை. இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முகூர்த்த நாள் என்பதால் வாழை இலைகள் விலையும் கடுமையாக உயர்ந்தன. வழக்கமாக ஏடு இலை ஒன்று ரூ.2 முதல் ரூ.3 வரையும், நுனி இலை ரூ.3 முதல் 4 வரையும் விற்பனை செய்யப்படும். 

ஆனால் நேற்று ஏடு இலை ரூ.4 முதல் ரூ.5 வரையும், நுனி இலை ரூ.6 முதல் ரூ.7 வரையும் விற்பனை செய்யப்பட்டது. ஒரு இலை ரூ.2 வரை விலை உயர்ந்து காணப்பட்டது.

இதுகுறித்து வாழை விவசாயி மதியழகன் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் இருந்து 25 லட்சம் வாழை இலைகள் தினமும் அறுவடை செய்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் நேற்று மழை காரணமாக அறுவடை செய்யப்படவில்லை. இதனால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் வேலை இழந்தனர். வாழை இலை அறுவடை செய்யப்படாததாலும், முகூர்த்த நாள் என்பதாலும் இலைகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வாழைத்தார் விலை குறைந்து விட்டது. கிலோ ரூ.8க்கு விற்பனையானது. மழைக்கு முன்னாடி கிலோ ரூ.20க்கு விற்பனையானது. இதனால் வாழை விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். மழை தொடர்ந்தால் மேலும் பாதிப்புகள் ஏற்படும். வாழை இலைகளை வெளியூருக்கு அனுப்ப முடியாமல் தவித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

46 ஆடுகள் உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கீழ கக்கரைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் இயேசு. இவர் 300க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் 20 மாடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் தொடர்ந்து இரண்டு நாள் பெய்த கனமழை காரணமாக 48 ஆடுகள் உயிரிழந்துள்ளன.

இதுகுறித்து தகவலறிந்த கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்து வருகின்றனர். உயிரிழந்த 48 ஆடுகளின் மதிப்பு 6 லட்சம் என கூறப்படுகிறது. எனவே உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
DMK: திமுக கோட்டையாக மாறிய திருவண்ணாமலை.. சீருடையில் வந்த ஒன்றரை லட்சம் தொண்டர்கள் - பலத்த பாதுகாப்பு
DMK: திமுக கோட்டையாக மாறிய திருவண்ணாமலை.. சீருடையில் வந்த ஒன்றரை லட்சம் தொண்டர்கள் - பலத்த பாதுகாப்பு
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
DMK: திமுக கோட்டையாக மாறிய திருவண்ணாமலை.. சீருடையில் வந்த ஒன்றரை லட்சம் தொண்டர்கள் - பலத்த பாதுகாப்பு
DMK: திமுக கோட்டையாக மாறிய திருவண்ணாமலை.. சீருடையில் வந்த ஒன்றரை லட்சம் தொண்டர்கள் - பலத்த பாதுகாப்பு
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Australia Gun Shoot: அடப்பாவமே.! ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி, பலர் காயம்
அடப்பாவமே.! ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி, பலர் காயம்
Case Against Trump's Order: ட்ரம்ப்புக்கு எதிராக ஒன்றுதிரண்ட 20 மாகாணங்கள்; H-1B கட்டணம், கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு
ட்ரம்ப்புக்கு எதிராக ஒன்றுதிரண்ட 20 மாகாணங்கள்; H-1B கட்டணம், கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
Christmas 2025: சாண்டா கிளாஸின் உண்மையான அர்த்தம் என்ன? - கிறிஸ்துமஸ் உணர்த்தும் ஆழமான ஆன்மீக செய்தி என்ன?
சாண்டா கிளாஸின் உண்மையான அர்த்தம் என்ன? -கிறிஸ்துமஸ் உணர்த்தும் ஆழமான ஆன்மீக செய்தி என்ன?
Embed widget