மேலும் அறிய

டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்

ஒரு நாளைக்கு 25 லட்சம் இலைகள் அறுவடை செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால் நேற்று தஞ்சை மாவட்டத்தில் பெய்த அடைமழை காரணமாக விவசாய பணிகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டன.

தஞ்சாவூர்: டிட்வா புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்த மழையின் காரணமாக 25 லட்சம் வாழை இலை அறுவடை மழையால் முற்றிலும் முடங்கியது. முகூர்த்த நாள் என்பதால் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதியான திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, கண்டியூர், மேலத்திருப்பூந்துருத்தி, வளப்பக்குடி, வடுகக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளைவிக்கப்படும் வாழைத்தார் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதே போல் வாழை இலைகள் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கும், தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.


டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்

இந்த பகுதிகளில இருந்து ஒரு நாளைக்கு 25 லட்சம் இலைகள் அறுவடை செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால் நேற்று தஞ்சை மாவட்டத்தில் பெய்த அடைமழை காரணமாக விவசாய பணிகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக வாழை இலை அறுவடைகள் முற்றிலும் முடங்கின. இதனால் தொழிலாளர்களும் வேலை இழந்தனர்.

சென்னையில் பலத்த மழை பெய்யும் என்பதால் நேற்று வாழை இலைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டதாலும், மழையாலும் வாழை இலைகள் அறுவடை செய்யப்படவில்லை. 25 லட்சம் இலைகள் அறுவடை செய்யப்படவில்லை. இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முகூர்த்த நாள் என்பதால் வாழை இலைகள் விலையும் கடுமையாக உயர்ந்தன. வழக்கமாக ஏடு இலை ஒன்று ரூ.2 முதல் ரூ.3 வரையும், நுனி இலை ரூ.3 முதல் 4 வரையும் விற்பனை செய்யப்படும். 

ஆனால் நேற்று ஏடு இலை ரூ.4 முதல் ரூ.5 வரையும், நுனி இலை ரூ.6 முதல் ரூ.7 வரையும் விற்பனை செய்யப்பட்டது. ஒரு இலை ரூ.2 வரை விலை உயர்ந்து காணப்பட்டது.

இதுகுறித்து வாழை விவசாயி மதியழகன் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் இருந்து 25 லட்சம் வாழை இலைகள் தினமும் அறுவடை செய்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் நேற்று மழை காரணமாக அறுவடை செய்யப்படவில்லை. இதனால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் வேலை இழந்தனர். வாழை இலை அறுவடை செய்யப்படாததாலும், முகூர்த்த நாள் என்பதாலும் இலைகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வாழைத்தார் விலை குறைந்து விட்டது. கிலோ ரூ.8க்கு விற்பனையானது. மழைக்கு முன்னாடி கிலோ ரூ.20க்கு விற்பனையானது. இதனால் வாழை விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். மழை தொடர்ந்தால் மேலும் பாதிப்புகள் ஏற்படும். வாழை இலைகளை வெளியூருக்கு அனுப்ப முடியாமல் தவித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

46 ஆடுகள் உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கீழ கக்கரைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் இயேசு. இவர் 300க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் 20 மாடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் தொடர்ந்து இரண்டு நாள் பெய்த கனமழை காரணமாக 48 ஆடுகள் உயிரிழந்துள்ளன.

இதுகுறித்து தகவலறிந்த கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்து வருகின்றனர். உயிரிழந்த 48 ஆடுகளின் மதிப்பு 6 லட்சம் என கூறப்படுகிறது. எனவே உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Embed widget