காதலன் இறந்த சோகம்! காதலி எடுத்த விபரீத முடிவு.. திருப்பத்தூரில் பரபரப்பு
காதலன் இரண்டு மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டு இறந்த துக்கத்தில் இருந்த காதலியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

காதலன் இறந்த துக்கத்தில் காதலி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது
திருப்பத்தூர் தில்லை நகர் பகுதியை சேர்ந்த கலைவாணி மகள் ஷாலினி(19) என்பவர் 12ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.உறவினர்கள் திருப்பத்தூர் நகர போலீசருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர போலீசார் ஷாலினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருப்பத்தூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஷாலினி வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த லோகேஷ்(24) என்பவரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அந்த வாலிபர் வயிற்று வலியின் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரும் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார்.
மனவேதனையில் தனிமையில் இருந்த ஷாலினி நேற்று தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. காதலன் இரண்டு மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டு இறந்த துக்கத்தில் இருந்த காதலியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)






















