மேலும் அறிய

திண்டுக்கல் ஆட்சியர் வீட்டின் முன் மாணவிகள் தர்ணா-தாளாளர் ஜோதி முருகன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் முத்தனம்பட்டி தனியார் நர்சிங் தாளாளர் பாலியல் வழக்கில் இருப்பதால் கல்லூரியை அரசே ஏற்று நடத்த கோரி மாணவர்கள் ஆட்சியர் வீடு முன்பு சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்லை அடுத்த முத்தனம்பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரியின் தாளாளராக இருப்பவர் ஜோதிமுருகன். இந்த கல்லூரியில் தென்மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இந்த நிலையில் தாளாளர் ஜோதிமுருகன், கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதற்கு விடுதி வார்டன் அர்ச்சனா உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ-மாணவிகள் கடந்த 19ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் ஆட்சியர் வீட்டின் முன் மாணவிகள் தர்ணா-தாளாளர் ஜோதி முருகன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
 
இதையடுத்து திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகள் 3 பேர் கொடுத்த புகாரின் பேரில், ஜோதிமுருகன், விடுதி வார்டன் அர்ச்சனா ஆகியோர் மீது தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விடுதி வார்டன் அர்ச்சனா கைது செய்யப்பட்டார். இதற்கிடையே 20ஆம் தேதி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கல்லூரிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. அதோடு குழு அமைத்து மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் பல மாணவ-மாணவிகள் விடுதியை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு சென்றனர்.

திண்டுக்கல் ஆட்சியர் வீட்டின் முன் மாணவிகள் தர்ணா-தாளாளர் ஜோதி முருகன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
 
இந்த நிலையில் நேற்று தனியார் நர்சிங் கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள ஆட்சியர் வீட்டு முன்பு திரண்டனர். பின்னர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. காசிசெல்வி மற்றும் போலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாளாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு இருப்பதால் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும். தாளாளர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் நிர்வாகத்தில் தலையிட கூடாது. அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அசல் சான்றிதழ்களை பாதுகாக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் அமைக்கும் குழு மாணவ-மாணவிகள், பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

திண்டுக்கல் ஆட்சியர் வீட்டின் முன் மாணவிகள் தர்ணா-தாளாளர் ஜோதி முருகன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
 
இதை தொடர்ந்து மாணவ-மாணவிகள் கல்வியை தொடர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குழுவில் இடம்பெற்ற அதிகாரிகளின் செல்போன் எண்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும் குழுவினர் மாணவ-மாணவிகளை சந்தித்து குறைகளை கேட்பார்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவ-மாணவிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக திண்டுக்கல் பஸ் நிலைய பகுதியில் சுமார் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Embed widget