மேலும் அறிய

திண்டுக்கல் ஆட்சியர் வீட்டின் முன் மாணவிகள் தர்ணா-தாளாளர் ஜோதி முருகன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் முத்தனம்பட்டி தனியார் நர்சிங் தாளாளர் பாலியல் வழக்கில் இருப்பதால் கல்லூரியை அரசே ஏற்று நடத்த கோரி மாணவர்கள் ஆட்சியர் வீடு முன்பு சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்லை அடுத்த முத்தனம்பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரியின் தாளாளராக இருப்பவர் ஜோதிமுருகன். இந்த கல்லூரியில் தென்மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இந்த நிலையில் தாளாளர் ஜோதிமுருகன், கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதற்கு விடுதி வார்டன் அர்ச்சனா உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ-மாணவிகள் கடந்த 19ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் ஆட்சியர் வீட்டின் முன் மாணவிகள் தர்ணா-தாளாளர் ஜோதி முருகன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
 
இதையடுத்து திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகள் 3 பேர் கொடுத்த புகாரின் பேரில், ஜோதிமுருகன், விடுதி வார்டன் அர்ச்சனா ஆகியோர் மீது தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விடுதி வார்டன் அர்ச்சனா கைது செய்யப்பட்டார். இதற்கிடையே 20ஆம் தேதி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கல்லூரிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. அதோடு குழு அமைத்து மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் பல மாணவ-மாணவிகள் விடுதியை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு சென்றனர்.

திண்டுக்கல் ஆட்சியர் வீட்டின் முன் மாணவிகள் தர்ணா-தாளாளர் ஜோதி முருகன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
 
இந்த நிலையில் நேற்று தனியார் நர்சிங் கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள ஆட்சியர் வீட்டு முன்பு திரண்டனர். பின்னர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. காசிசெல்வி மற்றும் போலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாளாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு இருப்பதால் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும். தாளாளர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் நிர்வாகத்தில் தலையிட கூடாது. அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அசல் சான்றிதழ்களை பாதுகாக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் அமைக்கும் குழு மாணவ-மாணவிகள், பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

திண்டுக்கல் ஆட்சியர் வீட்டின் முன் மாணவிகள் தர்ணா-தாளாளர் ஜோதி முருகன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
 
இதை தொடர்ந்து மாணவ-மாணவிகள் கல்வியை தொடர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குழுவில் இடம்பெற்ற அதிகாரிகளின் செல்போன் எண்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும் குழுவினர் மாணவ-மாணவிகளை சந்தித்து குறைகளை கேட்பார்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவ-மாணவிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக திண்டுக்கல் பஸ் நிலைய பகுதியில் சுமார் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
Embed widget