மேலும் அறிய
இளைஞர் அஜித் உயிரிழக்க முக்கிய காரணமே இந்த விசயம் தான்.. மனித உரிமைக்கு எதிராக நடந்த சம்பவம் !
50 இடத்தில் காயங்கள்… மூளையில் ரத்தக்கசிவு… சிகரெட் எரிப்பு, அஜித் மீது நடந்தது மனிதமற்ற சித்திரவதை.

திருப்புவனம் காவல்நிலையம்
Source : whats app
ஒரே இடத்தில் மீண்டும், மீண்டும் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இதில் தெளிவாக இருக்கின்றன. காயங்கள் பல்வேறு கோணங்களில் உள்ளதால், பலர் சேர்ந்து பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கியிருக்க வாய்ப்பு உள்ளது.
அஜித் குமாருக்கு என்ன நடந்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறையினரால், சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட மடப்புரம் அஜித்குமார் தொடர்பான மருத்துவ பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை, நெஞ்சை உறைய வைக்கும் அளவிற்கு, அவர் மீது செய்யப்பட்ட கொடூர தாக்குதல் மற்றும் சித்திரவதையை வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், அஜித்குமாரின் உடலில் சுமார் 50 வெளிப்புற காயங்கள் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் 12 சிராய்ப்பு காயங்கள் என்றும், மீதமுள்ளவை அனைத்தும் ரத்தக் கட்டு (கன்றிய நிலையில் உள்ள காயங்கள்) எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது
இந்த காயங்கள் வெறும் வெளிப்படையான காயங்கள் அல்ல. ஒவ்வொன்றும் பல தாக்கங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன. ஒரே இடத்தில் மீண்டும், மீண்டும் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இதில் தெளிவாக இருக்கின்றன. காயங்கள் பல்வேறு கோணங்களில் உள்ளதால், பலர் சேர்ந்து பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கியிருக்க வாய்ப்பு உள்ளது. அதிலும் வயிற்றின் நடுவே கம்பியால் குத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது, மிக அதிர்ச்சியளிக்கிறது. இது உயிருக்கு ஆபத்தான காயமாகக் கருதப்படுகிறது. மேலும் தலையில் (கபாலத்தில்) கம்பியால் அடிக்கப்பட்டதால், மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது என்றும், இது மரணத்திற்கான முக்கியமான காரணமாக இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கொலைக்கு தகுந்த விரைந்த நீதி கிடைக்குமா?
அத்துடன், சிகரெட் சூட்டால் எரித்துச் சித்திரவதை செய்யப்பட்டது பற்றிய தகவலும் மருத்துவ அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இது மனித உரிமைகளுக்கே எதிரான சித்திரவதை முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மருத்துவ நிபுணர்களின் மதிப்பீட்டுப்படி, இந்த அளவிலான தாக்கங்கள், ஒரு விபத்தில் ஏற்பட்டவையாக இருக்க முடியாது. இது திட்டமிட்டு, தொடர்ந்து, பல மணி நேரங்கள் நடத்திய தீவிரமான காவல் சித்திரவதை என்றும், சட்டவிரோத விசாரணை மற்றும் படுகொலை என்றும் விவரிக்கப்படுகிறது. இவ்வாறு ஒரு கோவில் வளாகத்துக்குள் நடந்த இந்த கொடூரச் சம்பவம், சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், அஜித்குமாரின் கொலைக்கு தகுந்த விரைந்த நீதி கிடைக்குமா? என பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement





















