மேலும் அறிய

சிவகங்கை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் மரக்கன்றுகள்! ரூர்பன் திட்டம் மூலம் புதிய முயற்சி!

விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் நாற்றாங்கால் பண்ணையினை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு, பயன்பெற வேண்டும் - மாவட்ட ஆட்சியர்.

காய்கறி செடிகளுக்கான நாற்றுக்கள் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கிட திட்டமிடப்பட்டு, அதேபோல், பல்வேறு வகையிலான மரக்கன்றுகளும் இங்கிருந்து விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சியர் அறிக்கை
 
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை மற்றும் சிவகங்கை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் செயல்பட்டு வரும் நாற்றாங்கால் பண்ணைகளின் செயல்பாடுகள் மற்றும் மரக்கன்று வகைகள், பழ வகை மற்றும் காய்கறி நாற்றுக்கள் ஆகியவைகளின் பராமரிப்பு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்...,"சிவகங்கை மாவட்டம் விவசாயத் தொழிலை பிரதானமாகக் கொண்டு இயங்கி வருகிறது. அந்த வகையில் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அதிகளவு பங்களித்து வருகின்றன. விவசாயிகளின் விளைநிலங்கள் பகுதிகளில் தண்ணீர் இருப்பிற்கு ஏற்றவாறு பயிரிட்டு பயன்பெறும் வகையில், விவசாயிகளுக்கு மானியத்திட்டத்தில் சொட்டு நீர் உபகரணங்கள், வேளாண்மைப் பணிக்கான உபகரணங்கள், பண்ணைக்குட்டைகள் என பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதுடன், காலச்சூழ்நிலைக்கு ஏற்றவாறு விவசாயிகளுக்கு தேவையான பல்வேறு வகையான பழவகை மரக்கன்றுகள் மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய அரிய வகையிலான உற்பத்தித்திறன் கொண்ட காய்கறி வகை நாற்றுக்கள் தோட்டக்கலைத்துறையின் மூலமாக விவசாயிகளுக்கு மானியத்திட்டத்தில் நேரடியாக வழங்கப்படுகிறது.
 
ரூர்பன் திட்டம்
 
அந்தவகையில் தோட்டக்கலைத்துறையின் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு பண்ணை அமைத்து அதன் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு வகையான மரக்கன்றுகள் மற்றும் காய்கறி நாற்றுக்கள் தேவையான அளவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க, சிவகங்கை பகுதியிலுள்ள  மாவட்ட தோட்டக்கலைத்துறை தலைமை அலுவலக வளாகத்தில் 2 ½  ஏக்கர் தேர்வு செய்து, நாற்றங்கால் பண்ணை அமைத்து விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் காய்கறி நாற்றுக்கள் வழங்கும் வகையில், ரூர்பன் திட்டத்தின் மூலம் நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதில், தோட்டக்கலைத்துறையின் மூலம் பல்வேறு வகையான பழங்களைச் சேர்ந்த கன்றுகள் நடவு செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், காய்கறி செடிகளுக்கான நாற்றுக்கள் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கிட திட்டமிடப்பட்டு, அதேபோல், பல்வேறு வகையிலான மரக்கன்றுகளும் இங்கிருந்து விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 
நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
 
இங்கு அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையின் நோக்கம், அதிகளவு விவசாயப் பெருமக்கள் தலைநகர் பகுதிக்கு அதிகளவு பல்வேறு வேலைப்பணி காரணமாக வந்து செல்லும் போது அவற்றுடன் வேளாண்மைப் பணிக்காக தேவையான கன்றுகளை அரசுப்பண்ணையிலேயே குறைந்த கட்டணத்தில் எடுத்துச் செல்லும் வகையில் செயல்பட்டு வருகிறது. இப்பண்ணையின் செயல்பாடுகள் மற்றும் பராமரிக்கப்பட்டு வரும் மரக்கன்றுகளின் வகைகள் ஆகியன குறித்து, நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
 
10 ஆயிரம் மரக்கன்று
 
இதேபோன்று, தேவகோட்டை பகுதியில் கண்டதேவி ஊராட்சிக்குட்பட்ட கீழசெம்பொன்மாரி கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூபாய் 4.91 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் வட்டார நாற்றங்கால் பண்ணையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அங்கு 20 செண்ட் பரப்பளவில் பராமரிக்கப்பட்டு வரும் கொய்யா, பெருநெல்லி, பூவரசு, செம்மரம், மகாக்கனி மற்றும் ரோஸ்வுட் உள்ளிட்ட பல்வேறு வகையான 10,000 எண்ணிக்கையிலான மரக்கன்றுகளின் பராமரிப்பு பணிகள் குறித்தும், நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.   விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் நாற்றாங்கால் பண்ணையினை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு, பயன்பெற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Southern Rising Summit 2025 LIVE:  திரைப்படத்தாலேயே எட்டயபுரம் அரசர் மீது தவறான வரலாறு பரவியுள்ளது - சந்திர சைதன்யா
ABP Southern Rising Summit 2025 LIVE: திரைப்படத்தாலேயே எட்டயபுரம் அரசர் மீது தவறான வரலாறு பரவியுள்ளது - சந்திர சைதன்யா
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து  ஆச்சரியம்  மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து ஆச்சரியம் மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Southern Rising Summit 2025 LIVE:  திரைப்படத்தாலேயே எட்டயபுரம் அரசர் மீது தவறான வரலாறு பரவியுள்ளது - சந்திர சைதன்யா
ABP Southern Rising Summit 2025 LIVE: திரைப்படத்தாலேயே எட்டயபுரம் அரசர் மீது தவறான வரலாறு பரவியுள்ளது - சந்திர சைதன்யா
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து  ஆச்சரியம்  மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து ஆச்சரியம் மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
Embed widget