மேலும் அறிய

லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணியின் செயல்படாத சிறுநீரகம் அகற்றம்

கருவகத்தின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி குழந்தையின் வளர்ச்சியை இது தடை செய்துவிடும் என்பதால் அவசரநிலை சிகிச்சையாக லேப்ராஸ்கோபி முறையில் சிறுநீரக அகற்றல் சிகிச்சை உடனடியாக செய்யப்பட்டது. 

லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையை பயன்படுத்தி 24 வயதான கர்ப்பிணியிடமிருந்து நீர்க்கட்டி பாதிப்புள்ள செயல்படாத சிறுநீரகத்தை வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.
 

அவசரநிலை அறுவை சிகிச்சை

திருநெல்வேலி அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனை, 22 வாரங்கள் கருவை தாங்கியிருந்த 24 வயதான பெண்ணுக்கு மிக நுட்பமான லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறது. அத்துடன் ஒரு பெரிய சிறுநீரக நீர்க்கோவை கட்டியிருந்த செயல்படாத வலது சீறுநீரகமும் இச்செயல்முறையில் அகற்றப்பட்டது. கருவகத்தில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை வளர்ச்சி கண்டுவரும் நீர்க்கட்டியை ஏற்படுத்தி வருவதால் ஒரு அவசரநிலை சிகிச்சையாக இந்த அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை என்றால், பிரசவத்தின்போது தாய்க்கு உயிருக்கு ஆபத்தான சிக்கல்கள் ஏற்படுவதற்கு அது வழிவகுத்திருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 

லேப்ராஸ்கோபி முறையில் சிறுநீரகம் அகற்றல்

கல்லிகுளத்தைச் சேர்ந்த சிஹானா ஷேக் என்ற பெண் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முதன்முறையாக கருத்தரித்தார் மற்றும் இந்த ஆண்டு ஜூன் 3-ஆம் வாரத்தில் பிரசவம் நிகழுமென கணிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், 22 வாரங்கள் கர்ப்பநிலையில் கடுமையான அடிவயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு செய்யப்பட்ட ஸ்கேன் சோதனை, அடிவயிற்றின் வலதுபக்கத்தில் ஒரு பெரிய நீர்க்கட்டி இருப்பதை வெளிப்படுத்தியது. எம்ஆர்ஐ ஸ்கேன் சோதனையும் இதை உறுதிசெய்தது. நோயறிதலுக்கான லேப்ராஸ்கோபி செய்யப்பட்டபோது, சிறுநீரக நீர்க்கோவை கட்டி பெரியளவில் இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் இந்த நீர்க்கட்டியினால் குழந்தைக்கும், தாய்க்கும் அதிக சிக்கல்கள் வரும் வாய்ப்பிருந்தது. கருவகத்தின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி குழந்தையின் வளர்ச்சியை இது தடைசெய்துவிடும் என்பதால் அவசரநிலை சிகிச்சையாக லேப்ராஸ்கோபி முறையில் சிறுநீரக அகற்றல் சிகிச்சை உடனடியாக செய்யப்பட்டது. 
 

சிறுநீரகத்துடன் நீர்க்கட்டியை அகற்றும் சிகிச்சை

இதுதொடர்பாக, டாக்டர். அந்தோணி ராஜ் கூறியதாவது: கருவுற்ற பெண்களில் பெரியளவிலான சிறுநீரக நீர்க்கோவை கட்டியுடன் கூடிய சிறுநீரகம் காணப்படுவது அரிதானது. கருவுற்ற பெண்களில் சுமார் 5% நபர்களிடமே இது உருவாகிறது. பாதிக்கப்பட்ட சிறுநீரகத்துடன் இந்த நீர்க்கட்டியை அகற்றுவது உடனடியாக செய்யப்பட வேண்டியிருந்தது. எனினும், கருவகத்தில் வளரும் குழந்தையின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளும்போது, இந்த அறுவைசிகிச்சை அதிக சவாலானதாக இருக்கக்கூடும். லேப்ராஸ்கோபி செயல்முறைகளில் எமது நிபுணத்துவம், மேம்பட்ட நவீன கட்டமைப்பு வசதிகள் மற்றும் உயர்நிலை தொழில்நுட்பம் ஆகியவற்றின் காரணமாக எமது மருத்துவமனையில் இந்த அறுவைசிகிச்சையை எங்களால் வெற்றிகரமாக செய்ய முடிந்தது.

லேப்ராஸ்கோபி முறை

லேப்ராஸ்கோபி அறுவைசிகிச்சையில் 22 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவத்தைக் கொண்டிருக்கும் எமது மருத்துவமனை, குறைந்த ஊடுருவல் உள்ள மருத்துவ செயல்முறைகளை சிக்கலின்றி நேரடியாக மேற்கொள்வதில் முன்னணி மையமாக இருந்து வருகிறது. 15,000-க்கும் அதிகமான அறுவைசிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கும் நிலையில் லேப்ராஸ்கோபி முறையிலிருந்து திறந்தநிலை அறுவை சிகிச்சைக்கு மாறுகிற விகிதம் என்பது 1%-க்கும் குறைவாக இருப்பது எமது நிபுணத்துவம் மற்றும் சிகிச்சை செயல்முறையின் துல்லியத்தை வெளிப்படுத்துகிறது என பெருமையுடன் தெரிவித்தார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

போலி செய்திகளை பரப்புவதாக குற்றச்சாட்டு... அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை !
போலி செய்திகளை பரப்புவதாக குற்றச்சாட்டு... அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை !
சித்திரைத் திருவிழாக்களின் போது அன்னதானம் வழங்குபவர்கள் உரிமம் பெறுவது அவசியம் !
சித்திரைத் திருவிழாக்களின் போது அன்னதானம் வழங்குபவர்கள் உரிமம் பெறுவது அவசியம் !
சுந்தர் சி-க்கு சீட் கொடுத்ததால் எதிர்ப்பு... அதிமுக ex கவுன்சிலர் வேதனை ! - காரணம் என்ன?
சுந்தர் சி-க்கு சீட் கொடுத்ததால் எதிர்ப்பு... அதிமுக ex கவுன்சிலர் வேதனை ! - காரணம் என்ன?
'சங்கி' பட்டம் ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி - திருப்பரங்குன்றத்தில் பரபரப்புரை !
'சங்கி' பட்டம் ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி - திருப்பரங்குன்றத்தில் பரபரப்புரை !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Embed widget