மேலும் அறிய

“பருப்பு இல்லை, பாமாயில் இல்லை, இதைக் கேட்கக் கூட நாதியும் இல்லை” - ஆர்.பி.உதயகுமார் தாக்கு !

திருமங்கலம் தொகுதி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது, 100 நாள் வேலை திட்டத்தை கூட தராமல் ஒரவஞ்சனை செய்கிறார்கள்.

நிதிநிலை அறிக்கை போல ஆண்டுதோறும் தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மூன்று ஆண்டுகளில் 5,000 படுகொலைகள் நடைபெற்றுள்ளன என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
 

மதுரையில் ஆர்.பி.உதயகுமார் பேசியது

மதுரை அதிமுக சார்பில் பேறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கல்லுப்பட்டியில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது...,” அம்மாவின் ஆட்சி காலங்களில் காவல்துறை இங்கிலாந்து ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகராக இருந்தது. காட்டு கொள்ளையன் வீரப்பனை சுட்டு வீழ்த்தியது அம்மாவின் ஆட்சியில் தான். ஆனால் இன்றைக்கு காக்கிச்சட்டை கண்டு காவாலிகள் பயப்பட மறுக்கிறார்கள். அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பிஐ முடியை பிடித்து இழுத்துள்ளனர். அதேபோல் குடிபோதையில் காவலரை தாக்கி உள்ளனர். இன்றைக்கு காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. இன்றைக்கு உள்துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர் இதற்கு பொறுப்பாவார், காக்கிச்சட்டை மதிப்பு அதிமுக ஆட்சி காலத்தில் கம்பீரமாக இருந்தது.

தமிழகத்தில் கொலைகள் அதிகரித்து வருகிறது

அதேபோல் தமிழகத்தில் கொலைகள் அதிகரித்து வருகிறது. 2021-2022 ஆண்டுகளில் 1558 கொலைகளும், 2022-2023 ஆண்டுகளில் 1596 கொலைகளும், 2023-2024 ஆண்டுகளில் 1600 கொலைகள் என மூன்று ஆண்டுகளில் 5,000 கொலைகள் நடைபெற்றுள்ளது. சட்டமன்ற நிதிநிலை அறிக்கையில் முதியோர் உதவி தொகையில் 4200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்று லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டது, என்று தான் அறிவிப்போம். ஆனால் இன்றைக்கு இந்த மூன்றாண்டுகள் 5000 கொலைகள் நடைபெற்றது, என்று வாசிக்கப்பட்டு வருகிறது. காவல்துறை கைகள் இன்றைக்கு கட்டப்பட்டுள்ளன. ஒரே நாளில் 60 ஐபிஎஸ் அதிகாரி மாற்றம், 45 ஐஏஎஸ் அதிகாரி மாற்றம் இதைத்தான் செய்கிறார்கள், ஆனால் ஸ்டாலின் ஆட்சியில் கொலை வழிப்பறி ஆகியவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. காவல் துறை அதிகாரிகளையும், ஐஏஎஸ் அதிகாரி மாற்றம் செய்ய வேண்டாம் ஸ்டாலின் ஆட்சியை மாற்றம் செய்தால் போதும் எல்லாம் சரியாகிவிடும் என்று மக்களே கூறுகிறார்கள்.
 

எனக்கு நடிக்கத் தெரியாது

கப்பலூர் டோல்கேட் பிரச்னையில் தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் நான் நடிக்கிறேன் என்று என்னை கூறுகிறார்கள். எனக்கு உழைக்க தெரியும், நடிக்க தெரியாது. டோல்கேட் பிரச்னை குறித்து கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஒரு நாள் கூட போராட்டம் நடைபெறவில்லை, மேலும் மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில்  கட்டண விலக்கை ஏற்படுத்தி தந்தவர் எடப்பாடியார். தற்போது சுங்கச்சாவடியை அகற்ற மக்கள் எங்களை அழைக்கிறார்கள். அமைச்சர்கள் பேச்சின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரவில்லை.
 

பருப்பு இல்லை, பாமாயில் இல்லை

 
திருமங்கலம் தொகுதி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது, 100 நாள் வேலை திட்டத்தை கூட தராமல் ஒரவஞ்சனை செய்கிறார்கள். ஒரு பைசா கூட மேம்பாட்டு நிதிக்கு ஒதுக்கப்படவில்லை. இதை எல்லாம் கண்டு கொதித்துப் போன மக்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் மட்டும் அதிமுக கூட்டணிக்கு 10,050 வாக்குகளை கூடுதலாக பெற்று தந்தார்கள். அதே போல் ரேஷன் கடைகளில் தரமான அரிசிகளை போட முடியவில்லை, பாமாயில் இல்லை, பருப்பு இல்லை இதை கேட்க கூட நாதி இல்லாமல் உள்ளது.” என்று குற்றம் சாட்டினார்.
 
 

தலைப்பு செய்திகள்

விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget