மேலும் அறிய
ராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் பிரம்மோற்சவ திருவிழாவை 10-நாட்கள் நடத்த இயலுமா?
பிரம்மோற்சவம் திருவிழாவை 10 நாட்கள் நடத்த இயலுமா? என்பது குறித்து, கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்க மதுரை அமர்வு உத்தரவு.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
ராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில் பிரம்மோற்சவ திருவிழாவை 10 பத்து நாட்கள் கொண்டாட உத்தரவிடக் கோரிய வழக்கு.
மதுரைக் கிளையில் வழக்கு
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் யானை. ராஜேந்திரன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மிகவும் பழமையானது. ஸ்ரீ ராமநாதசுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். ஆனி மாதத்தில் விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு 3 நாட்கள் மட்டுமே திருவிழா கொண்டாடப்படுவதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, " பிரம்மோற்சவ திருவிழாவை 10 பத்து நாட்கள் கொண்டாட உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
வழக்கு ஒத்திவைப்பு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு, " பிரம்மோற்சவம் திருவிழாவை 10 நாட்கள் நடத்த இயலுமா? என்பது குறித்து, கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கை தீர்ப்புக்காக நாளைக்கு ஒத்திவைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















