மேலும் அறிய

மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை 6000ஆக உயர்த்தப்பட்டதற்கு மீனவர்கள் வரவேற்பு...!

’’மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை 5 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்’’

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையாக மீனவ குடும்பங்களுக்கு தலா 5,000 நிவாரணம் வழங்கி வந்த நிலையில்,  தற்போது கூடுதலாக ஆயிரம் ரூபாய் உயர்த்தி 6000 ரூபாய் வழங்க  முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதற்கு தீபாவளி பண்டிகை வர உள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இதற்கு  வரவேற்பு தெரிவித்துள்ளனர். கிழக்கு கடற்கரை பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் தேதியில் இருந்து ஜூன் 14 ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும். அதே போல மேற்க்கு கடற்கரைப் பகுதியில் ஜூன் 1 ஆம் தேதியில் இருந்து ஜூலை 31 ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும். இந்த மீன்பிடி தடைக்காலங்களில் விசைப்படகுகள், இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கச் செல்பவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை நம்பி இருக்கும் மீனவ குடும்பங்கள் ஆகியோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரணத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது.


மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை 6000ஆக உயர்த்தப்பட்டதற்கு மீனவர்கள் வரவேற்பு...!

மீன்கள்‌ இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15 முதல்‌ ஜூன் 15 வரை 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அரசால் தடை விதிக்கப்படுகிறது. இதனால் தமிழ‌க கடலோர பகுதிகளான ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நாகை, திரு‌வள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில்‌ உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதியில்லை. இந்த காலங்களில் தமிழகத்தில்‌ உள்ள 13 கடலோர மாவட்டங்களை சேர்ந்த  விசைப்படகுகளை மீனவர்கள் கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தி வைப்பர். கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2016 வரை மீன்பிடி தடைக்காலம் 45 நாட்களாக கடைப்பிடித்து வந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 61 நாட்களாக மீன்பிடி தடைக் காலம் அதிகரிக்கப்பட்டது. இந்த தடை காலத்தில் மீன்கள் வரத்து குறைவு காரணமாக நாட்டு படகுகளின் மூலம்  கரையோரங்களில்  பிடித்து வரப்படும் மீன்களுக்கு அதிகம் கிராக்கி இருக்கும்.


மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை 6000ஆக உயர்த்தப்பட்டதற்கு மீனவர்கள் வரவேற்பு...!

மீன்பிடி தடைக்காலங்களில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோழியகுடி, வாலிநோக்கம், முந்தல், மாரியூர், மூக்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இந்த நேரங்களில் மீனவர்கள் தங்களது படகுகளை சீரமைப்பது, பழுது பார்ப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள். இந்த நேரங்களில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால், அவர்களுக்கான நிவாரண நிதி அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை மீன்பிடி குறைவு காலம் மற்றும் மீன் பிடித்தடை காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை 5 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
Velmurugan:
Velmurugan: "2026-ல் தேர்தல்.. எங்கள் ஆதரவு இல்லாமல் முதலமைச்சர் ஆக முடியாது” வேல் முருகன் பேட்டி
Annamalai Questions Stalin: யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Prashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
Velmurugan:
Velmurugan: "2026-ல் தேர்தல்.. எங்கள் ஆதரவு இல்லாமல் முதலமைச்சர் ஆக முடியாது” வேல் முருகன் பேட்டி
Annamalai Questions Stalin: யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
14,889 பேருக்கு தொழிற்நிறுவனங்களின் வேலைவாய்ப்பு.. எப்படி அப்ளைசெய்வது ! முழு விவரம்
14,889 பேருக்கு தொழிற்நிறுவனங்களின் வேலைவாய்ப்பு.. எப்படி அப்ளைசெய்வது ! முழு விவரம்
TVK in Trouble: ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும்  இத்தனை ஆயிரம் கோடியா ?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும் இத்தனை ஆயிரம் கோடியா ?
Fact Check: நோன்பில் தண்ணீர் குடித்ததற்கு மன்னிப்பு கேட்டாரா முகமது ஷமி? உண்மை இதுதான் மக்களே!
Fact Check: நோன்பில் தண்ணீர் குடித்ததற்கு மன்னிப்பு கேட்டாரா முகமது ஷமி? உண்மை இதுதான் மக்களே!
Embed widget