மேலும் அறிய

பரமக்குடியில் புதிய டாஸ்மாக் கடைக்கு தடைவிதிக்க கோரிய வழக்கு - ராமநாதபுரம் ஆட்சியர் பதில் தர உத்தரவு

மதுபான சில்லறை விற்பனை கடையைத் திறக்கும் பட்சத்தில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். எனவே இப்பகுதியில் மதுபான கடை வைப்பதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த நாகேஸ்வரன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், " பரமக்குடியின் போக்குவரத்து மற்றும் மக்கள் நெரிசல் மிக்க இடமான ஐந்துமுனை உழவர் சந்தை செல்லும் சாலையில் புதிதாக மதுபான சில்லறை விற்பனை கடையை நிறுவ உள்ளனர். இந்தப் பகுதியில் கோவில்களும், மகப்பேறு மருத்துவமனை மற்றும் உழவர் சந்தை அமைந்துள்ளது இதனால் தினசரி பொதுமக்களும் பெண்களும் இந்த பிரதான சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே மதுபான சில்லறை விற்பனை கடையைத் திறக்கும் பட்சத்தில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். எனவே இப்பகுதியில் மதுபான கடை வைப்பதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
 

கனிம வளத்துறை உதவி இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது - மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 

தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளாக மணல் மற்றும் ஜல்லிக் கற்கள் விற்பனை செய்து வருகின்றேன். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு அனுமதியுடன் குவாரிகல் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அனுமதியுடன் நடைபெறும் குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் மணல் யூனிட் ஒன்றிற்கு 300 ரூபாயை கனிம வளத்துறை உதவி இயக்குநர் சார்பில் சிலர் லஞ்சமாக வாங்குகின்றனர். இது சட்ட விரோதமானது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட  குவாரிகளில் இருந்து மணல் எடுப்பதற்கு தொடர்ந்து லஞ்சமாக 300 பெற்று வருகின்றனர்.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு மனுக்கள் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே ஊழலில் ஈடுபடும் தூத்துக்குடி கனிம வளத்துறை உதவி இயக்குநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு, "முறையாக விசாரிக்காமல் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட இயலாது. அதோடு மனுதாரர் நடவடிக்கை எடுக்குமாறு மனு அளிக்கவில்லை. ஆகவே மனுதாரருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதோடு இந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Big Boss Season 9: எல்லை மீறிய கம்மூ-பாரு.. ”வெளியே கிளம்புங்க’ ரெட் கார்ட்டை தூக்கிய விஜய் சேதுபதி
Big Boss Season 9: எல்லை மீறிய கம்மூ-பாரு.. ”வெளியே கிளம்புங்க’ ரெட் கார்ட்டை தூக்கிய விஜய் சேதுபதி
US Captures Venezuela President: வெனிசுலா அதிபர் மதுரோவை மனைவியுடன் சிறைபிடித்த அமெரிக்கா; நாடு கடத்திய ட்ரம்ப்; பெரும் பதற்றம்
வெனிசுலா அதிபர் மதுரோவை மனைவியுடன் சிறைபிடித்த அமெரிக்கா; நாடு கடத்திய ட்ரம்ப்; பெரும் பதற்றம்
ABP Premium

வீடியோ

Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Big Boss Season 9: எல்லை மீறிய கம்மூ-பாரு.. ”வெளியே கிளம்புங்க’ ரெட் கார்ட்டை தூக்கிய விஜய் சேதுபதி
Big Boss Season 9: எல்லை மீறிய கம்மூ-பாரு.. ”வெளியே கிளம்புங்க’ ரெட் கார்ட்டை தூக்கிய விஜய் சேதுபதி
US Captures Venezuela President: வெனிசுலா அதிபர் மதுரோவை மனைவியுடன் சிறைபிடித்த அமெரிக்கா; நாடு கடத்திய ட்ரம்ப்; பெரும் பதற்றம்
வெனிசுலா அதிபர் மதுரோவை மனைவியுடன் சிறைபிடித்த அமெரிக்கா; நாடு கடத்திய ட்ரம்ப்; பெரும் பதற்றம்
CM Stalin on TAPS: புத்தாண்டு, பொங்கல் பரிசாக 'TAPS'; திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்.! முதலமைச்சர் உறுதி
புத்தாண்டு, பொங்கல் பரிசாக 'TAPS'; திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்.! முதலமைச்சர் உறுதி
ADMK vs TVK: விஜய் மீது செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி.. தவெக மீது அட்டாக்கை ஆரம்பிக்கும் அதிமுக!
ADMK vs TVK: விஜய் மீது செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி.. தவெக மீது அட்டாக்கை ஆரம்பிக்கும் அதிமுக!
குடும்பத்தை விட்டு பிரிய வேண்டாம்... உங்க சொந்த ஊரிலேயே வேலை வாய்ப்பு: முழு விபரங்கள் இங்கே!!!
குடும்பத்தை விட்டு பிரிய வேண்டாம்... உங்க சொந்த ஊரிலேயே வேலை வாய்ப்பு: முழு விபரங்கள் இங்கே!!!
TN New Pension Scheme: தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
Embed widget