மேலும் அறிய

பரமக்குடியில் புதிய டாஸ்மாக் கடைக்கு தடைவிதிக்க கோரிய வழக்கு - ராமநாதபுரம் ஆட்சியர் பதில் தர உத்தரவு

மதுபான சில்லறை விற்பனை கடையைத் திறக்கும் பட்சத்தில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். எனவே இப்பகுதியில் மதுபான கடை வைப்பதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த நாகேஸ்வரன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், " பரமக்குடியின் போக்குவரத்து மற்றும் மக்கள் நெரிசல் மிக்க இடமான ஐந்துமுனை உழவர் சந்தை செல்லும் சாலையில் புதிதாக மதுபான சில்லறை விற்பனை கடையை நிறுவ உள்ளனர். இந்தப் பகுதியில் கோவில்களும், மகப்பேறு மருத்துவமனை மற்றும் உழவர் சந்தை அமைந்துள்ளது இதனால் தினசரி பொதுமக்களும் பெண்களும் இந்த பிரதான சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே மதுபான சில்லறை விற்பனை கடையைத் திறக்கும் பட்சத்தில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். எனவே இப்பகுதியில் மதுபான கடை வைப்பதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
 

கனிம வளத்துறை உதவி இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது - மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 

தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளாக மணல் மற்றும் ஜல்லிக் கற்கள் விற்பனை செய்து வருகின்றேன். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு அனுமதியுடன் குவாரிகல் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அனுமதியுடன் நடைபெறும் குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் மணல் யூனிட் ஒன்றிற்கு 300 ரூபாயை கனிம வளத்துறை உதவி இயக்குநர் சார்பில் சிலர் லஞ்சமாக வாங்குகின்றனர். இது சட்ட விரோதமானது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட  குவாரிகளில் இருந்து மணல் எடுப்பதற்கு தொடர்ந்து லஞ்சமாக 300 பெற்று வருகின்றனர்.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு மனுக்கள் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே ஊழலில் ஈடுபடும் தூத்துக்குடி கனிம வளத்துறை உதவி இயக்குநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு, "முறையாக விசாரிக்காமல் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட இயலாது. அதோடு மனுதாரர் நடவடிக்கை எடுக்குமாறு மனு அளிக்கவில்லை. ஆகவே மனுதாரருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதோடு இந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Kuldeep Yadav Record: அனில் கும்ப்ளேவின் சாதனையை போட்டு நொறுக்கிய குல்தீப் யாதவ்; 3-வது ஒருநாள் போட்டியில் அசத்தல்
அனில் கும்ப்ளேவின் சாதனையை போட்டு நொறுக்கிய குல்தீப் யாதவ்; 3-வது ஒருநாள் போட்டியில் அசத்தல்
Putin's Indian Dinner: முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Kuldeep Yadav Record: அனில் கும்ப்ளேவின் சாதனையை போட்டு நொறுக்கிய குல்தீப் யாதவ்; 3-வது ஒருநாள் போட்டியில் அசத்தல்
அனில் கும்ப்ளேவின் சாதனையை போட்டு நொறுக்கிய குல்தீப் யாதவ்; 3-வது ஒருநாள் போட்டியில் அசத்தல்
Putin's Indian Dinner: முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
IND vs SA  3rd ODI: புயலாய் தொடங்கி புஸ்வானமாய் போன தெ.ஆப்பிரிக்கா.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மேஜிக் நடக்குமா?
IND vs SA 3rd ODI: புயலாய் தொடங்கி புஸ்வானமாய் போன தெ.ஆப்பிரிக்கா.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மேஜிக் நடக்குமா?
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
Embed widget