![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Hanuman Temple : 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பெரியகுளத்தில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
![Hanuman Temple : 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா Ram temple Maha Kumbabhishek ceremony was held at Anjaneya temple which is more than 500 years old. Hanuman Temple : 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/21/1d0d0f4bf7eb105dc90f57afbaf4603f1705816758721739_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அயோத்தியில் நாளை நடைபெறும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பெரியகுளத்தில் உள்ள 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
Rajinikanth: ராமர் கோயில் நிகழ்வில் பங்கேற்பதில் மகிழ்ச்சி.. அயோத்தி கிளம்பிய ரஜினிகாந்த் உற்சாகம்!
தேனி மாவட்டம் மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில உள்ளது. 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் ராம பக்தராகவும், சிறை பிடித்து இருந்த சீதாவை ராமர் மீட்க சென்ற போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள வானரங்கள் ராம பக்தரான ஆஞ்சநேயரின் தலைமையில் ராமனுக்கு உதவி செய்ய சென்றதாக ஐதீகம் உள்ளது.
Ayodhya Ram mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு : உங்கள் வீட்டில் ராமர் பூஜை செய்வது எப்படி?
இந்த நிலையில் நாளை அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவிலில் பிரதிஷ்ட்டை செய்யப்பட்ட கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் பெரியகுளத்தில் உள்ள ராம பக்தரான ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த மூன்று நாட்களாக நான்கு கால யாக பூஜை நடைபெற்று 10 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின்போது ஆஞ்சநேயரின் கருவறைக்கு மேல் புதிதாக வைக்கப்பட்டுள்ள கலசம் மற்றும் ராஜகோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள கலசத்துக்கு கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகளில் இருந்து எடுத்துவரப்பட்டு தீர்த்த நீரை வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓதி மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.
Vijay Devarakonda - Rashmika: ராஷ்மிகாவுடன் திருமணமா? காட்டமான பதில் தந்த விஜய் தேவரகொண்டா!
மேலும் வந்திருந்த பக்தர்கள் மகா கும்பாபிஷேகத்தின் போது ஹரே ராமா ஹரே ராம என பக்தர்கள் கோசமிட்டு கும்பாபிஷேகத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த மக்கள் மீது புண்ணிய நீர் தெளிக்கப்பட்டது. இந்த ஆஞ்சநேயர் மகா கும்பாபிஷேக விழாவில் பெரியகுளம் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)