மேலும் அறிய
வைகையை காக்க வாருங்கள் இளைஞர்களே... இதுவும் தேசப்பற்றுதான் - ஆளுநர் அர்லேகர் !
வைகை ஆறு மட்டுமல்ல இளைஞர்கள் சக்தியால் இன்னும் பல மாற்றங்களை கொண்டுவர முடியும். சமூகத்தில் நமது சொந்த முயற்சி இருக்க வேண்டும்.

வைகையை இளைஞர்கள் மீட்க வேண்டும்
Source : whatsapp
வைகை ஆற்றை மீட்க இளைஞர்கள் முன்வர வேண்டும்; இல்லையெனில் ஆளுநர் மாளிகை நடவடிக்கை எடுக்கும்- இதுவும் தேசப்பற்று தான் துப்பாக்கி எடுத்து போருக்கு செல்ல வேண்டும் என அவசியம் இல்லை-" – ஆளுநர் அர்லேகர்.
தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் சௌராஷ்டிரா கல்லூரி மற்றும் சென்னை தென்னிந்திய ஆய்வு மையம் (Centre for South Indian Studies) இணைந்து நடத்தும் INA வீரர்களை போற்றும் கட்டுரை மற்றும் குறும்படப் போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பங்கேற்று பேசினர். இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் முதலில் வந்தே மாதரம் அதைத் தொடர்ந்து தேசிய கீதம் அதன் பின்னர் இறுதியாக தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது.
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரை
"நமது சுதந்திரம் போராட்ட வீரர்களின் நினைவு கொள்ளும் நிகழ்ச்சி இது. இந்த முறையினால் தமிழில் பேச முடியவில்லை. அடுத்த முறை நான் இங்கு வரும்போது தமிழில் பேசுவேன். ஏனென்றால் இப்போது எனது மொழியாகிவிட்டது. எனது மொழியை நான் தவிர்க்க முடியாது. ஹிந்தி பேசினால் உங்களுக்கு புரியாது என்பதால் வெளிநாட்டு மொழியான ஆங்கிலத்தில் பேசுகிறேன். நான் சொன்னதைப் போல நாம் வித்தியாசமான ஒரு நிகழ்ச்சியில் சந்தித்திருக்கிறோம். இது கல்லூரி ஆண்டு விழாவோ பட்டமளிப்பு விழாவோ இல்லை. நம்முடைய தமிழ்நாடு கலாச்சாரம் எப்படி சிறந்தது என்பதை நினைவு கொள்கிறோம். நமது கலாச்சாரம் வரலாறை புரிந்து கொள்ள நமக்கு சிறப்பு தினங்கள் தேவையில்லை எந்த தினமாக இருந்தாலும் அதை நாம் கொண்டாடுவோம். அதனால் இன்று நாம் நமது தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
வைகை ஆற்றில் தூய்மை வேண்டும்
தற்போது என்னத்திற்கு நான் வந்து கொண்டிருக்கும் போது எனக்கு வைகை ஆறு எனது உதவியாளர் எனக்கு காட்டினார். அந்த ஆற்றைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன் ஆறு உள்ளது நீர் எங்கே. நீர் இல்லை ஆறு என்றால் அதில் நீர் இருக்க வேண்டும். இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன் ஏதாவது செய்ய வேண்டும். குஜராத்தில் நிரஞ்சனா என்ன ஒரு ஆறு இருந்தது அதுவும் இது போல தான் வற்றி இருந்தது. அன்பு சதீஷ் என்பவர் என்னிடம் வந்து நான் ஆளுநராக இருந்தபோது அந்த ஆற்றை சுத்தம் செய்வோம் எனக்கூறி ஒரு ஆறை காட்டி ஏற்கனவே தான் சுத்தம் செய்ததாக காட்டினார். அதேபோல இங்கு வைகை ஆறிலும் செய்ய முடியும்.
மதுரையை சேர்ந்த இளைஞர்கள் அதை இலக்காக மாற்ற வேண்டும்
மதுரையை சேர்ந்த இளைஞர்கள் அதை இலக்காக மாற்றி அதற்கு முயற்சி செய்ய வேண்டும். இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு சக்தி மிக முக்கியமானது. அந்த ஆறில் தண்ணீர் வந்தால் அந்த கரையில் நாகரிக வளர்ச்சி ஏற்படும். கடவுள் ஆறுதல் ஒற்றுவதற்கு காரணம் கடவுள் என்று சொன்னார்கள் ஆனால் கடவுள் இதற்கு காரணம் இல்லை நாம்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். யாராவது அதற்கு முயற்சி எடுக்க வேண்டும், யாரும் முயற்சி எடுக்கவில்லை என்றால் ஆளுநர் மாளிகை முயற்சி எடுக்கும். இதுவும் தேசப்பற்று தான் துப்பாக்கி எடுத்து போருக்கு செல்ல வேண்டும் என அவசியம் இல்லை.
இளைஞர்கள் முயற்சி வேண்டும்
வைகை ஆறு மட்டுமல்ல இளைஞர்கள் சக்தியால் இன்னும் பல மாற்றங்களை கொண்டுவர முடியும். சமூகத்தில் நமது சொந்த முயற்சி இருக்க வேண்டும். அனைத்து மக்களின் ஒத்துழைப்பு வேண்டும். கல் நிச்சயமாக அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவார்கள். நாம் இன்று ஒரு உறுதிமொழி எடுப்போம் நேதாஜி இந்த தேசத்திற்காக உறுதிமொழி எடுத்ததைப்போல நமது நாட்டை முன்னேற்றுவதற்கு நாம் உறுதிமொழி எடுப்போம் என கூறி உரையை நிறைவு செய்தார்.
Before You Go
SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















