மேலும் அறிய
அதிக விலைக்கு விற்பனை செய்யலாம்.. மதுரையில் ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் கைது
தமிழகத்தில் புகையிலை, கூல் லிப்பிற்கு தடைவுள்ளதால் அதிக விலைக்கு விற்பனை செய்யலாம் என நினைத்து பெங்களூருவில் இருந்து கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள்
Source : whats app
தமிழகத்தில் புகையிலை, கூல் லிப்க்கு தடை உள்ளதால் கூடுதல் விலைக்கு விற்பதற்காக பெங்களூருவில் இருந்து மதுரைக்கு காரில் 495 கிலோ கூல் லீப் மற்றும் புகையிலை கடத்தி வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்
தமிழகத்தில் புகையிலை, கூலிப் விற்க தடை உள்ள நிலையில் கடந்த டிசம்பர் 25- ஆம் தேதியன்று கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கன்டெய்னரில் கிருஷ்ணகிரியில் இருந்து மதுரைக்கு கடத்தி வந்த 1400 கிலோ குட்காவை மதுரை மாநகர புதூர் காவல்துறையினர் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து வெளிமாநில பதிவெண் கொண்ட வாகனங்களை தீவிரமாக கண்காணித்து சோதனையை தீவிரப்படுத்த காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று முன்தினம் மதுரை தெப்பக்குளம் அனுப்பானடி சாலை சந்திப்பில் ஆய்வாளர் அருண்குமார் தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அதிக விலைக்கு விற்பனை செய்யலாம் என நினைத்து பெங்களூருவில் இருந்து கடத்தல்
அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கார் மீது சந்தேகமடைந்து அதனை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது காரில் இருந்த நபரின் பேச்சில் சந்தேகம் ஏற்பட்டதால் காரில் காவல்துறையினர் சோதனையிட்டனர். அப்போது காருக்குள் மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை, கூல் லிப் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, காரில் வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த ரமேஷ்குமார் (25) தினேஷ்குமார் (29) ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் தமிழகத்தில் புகையிலை, கூல் லிப்பிற்கு தடைவுள்ளதால் அதிக விலைக்கு விற்பனை செய்யலாம் என நினைத்து பெங்களூருவில் இருந்து கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் கைது
விசாரணை முடிந்த பின்னர் காரில் இருந்து 339 கிலோ புகையிலை, 134 கிலோ கூல் லிப், 22 கிலோ பான்மசாலா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் புகையிலை, கூல் லிப் தடை உள்ளதால் கூடுதல் விலைக்கு விற்பதற்காக பெங்களூருவில் இருந்து மதுரைக்கு காரில் 495 கிலோ கூல் லீப் மற்றும் புகையிலை கடத்திவந்த ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Tungsten Protest: டங்ஸ்டன் திட்டம் ரத்து; போராடிய மக்களுக்கு கிடைத்த வெற்றி - சமூக ஆர்வலர் பெருமிதம்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement