வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் இருந்து கீழ பஜார் வழியாக புதிய பஸ் நிலையம் வரை பேரணி செல்ல அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

வீ த லீடர்ஸ்” சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாடு, சமூக ஒற்றுமையை வலியுறுத்தி வாசுதேவநல்லூரில் விழிப்புணர்வு பேரணி அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கு.
தேசியக்கொடியை ஏந்தியபடி அமைதியான ஊர்வலம்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த சாமி என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்..., தான் “வீ த லீடர்ஸ்” என்ற அமைப்பின் உறுப்பினராக உள்ளேன். சுதந்திர தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை வாசுதேவநல்லூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் வரையிலோ அல்லது அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் இருந்து வாசுதேவநல்லூர் புதிய பேருந்து நிலையம் வரையிலோ 80 அடி நீளமும், 5 அடி அகலமும் கொண்ட தேசியக்கொடியை ஏந்தியபடி அமைதியான ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளளோம்.
பேரணி செல்ல அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் நேரில் மனு அளித்த நிலையில் காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். எனவே இந்திய தேசிய மூவர்ண கொடியுடன் சுற்றுசூழல் விழிப்புணர்வு தேசிய ஒருமைப்பாடு, சமூக ஒற்றுமையை வலியுறுத்தி வாசுதேவநல்லூரில் நடைபெறும் விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதியும், பாதுகாப்பும் வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி இருந்தார். இந்த வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.
முடிவில், அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் இருந்து கீழ பஜார் வழியாக புதிய பஸ் நிலையம் வரை பேரணி செல்ல அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















