மேலும் அறிய

Palani Murugan Temple: பழனி முருகன் கோயிலில் செல்போனுக்கு தடை விதிப்பு; ஏற்பாடு பணிகள் தீவிரம்

பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிப்பதற்கான ஏற்பாடுகளை நிர்வாகம் தீவிரமாக செய்து வருகின்றனர்.

பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிப்பதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகின்றனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் செல்போன், கேமரா உள்ளிட்டவைகள் மூலமாக மலைக்கோவிலுக்கு சென்று புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்வதற்காக மலைக் கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது, ஊழியர் ஒருவர் அவரது மகளை தொட்டு தள்ளினார் எனக் கூறி ஆடியோவை வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கோவில் நிர்வாகம் தரப்பில் அவர் கருவறையை படம் பிடிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டார். அதனால் செல்போனை எடுக்கக்கூடாது என கூறினோம் என்றும் அதற்கு உண்டான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு விளக்கம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் மலைக்கோவிலுக்கு செல்போனை கொண்டு செல்ல கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.


Palani Murugan Temple: பழனி முருகன் கோயிலில் செல்போனுக்கு தடை விதிப்பு; ஏற்பாடு பணிகள் தீவிரம்

அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதி கேசவலு அமர்வில் கோவிலுக்குள் செல்போன் போன்ற கருவிகளை எடுத்துச் செல்ல நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்ட நிலையில், அதை ஏன் அமல்படுத்தக் கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கருவறைக்குள் புகைப்படம் எடுக்க அனுமதித்ததற்காக கண்டனம் தெரிவித்தனர். மேலும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட நடவடிக்கையில் எடுக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள் , திருப்பதி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல முடியாததை  போல தமிழகத்தில் ஏன் அமல்படுத்தக் கூடாது என கேள்வி எழுப்பினர்.


Palani Murugan Temple: பழனி முருகன் கோயிலில் செல்போனுக்கு தடை விதிப்பு; ஏற்பாடு பணிகள் தீவிரம்

இதனை தொடர்ந்து பதிலளித்த அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதை தடுத்து 24 மணி நேரம் கண்காணிக்கும் வழிகளை நிரந்தர கட்டமைப்பை ஏற்படுத்த இருப்பதாக தெரிவித்தார். தற்போதைக்கு இதை தடுக்க வேண்டும் செல்போன் கொண்டு வருபவர்களை மலையில் இருந்து இறக்கி விடுங்கள் என தெரிவித்த நீதிபதிகள், பழனி கோவில் எந்தெந்த இடங்களில் கண்காணிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை வெள்ளிக்கிழமை அறிக்கை தாக்கல் செய்யவும் , கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்து பிறப்பித்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தி


Palani Murugan Temple: பழனி முருகன் கோயிலில் செல்போனுக்கு தடை விதிப்பு; ஏற்பாடு பணிகள் தீவிரம்

இரு வாரங்களில்  அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். பழனி கோவிலில் மலைக்கோவிலுக்கு செல்லும் முன் மலை அடிவாரம் , படிப்பாதை ,  மின் இழுவை ரயில் நிலையத்திலும், ரோப் கார் நிலையங்களிலும் செல்போன் , கேமராக்களை ஒப்படைத்துவிட்டு , டோக்கன் பெற்று சென்று விட்டு மீண்டும் செல்போனை பெற்று செல்வதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget