மேலும் அறிய

Abp Nadu Exclusive: சிவகங்கை சிறையில் 35 ஏக்கரில் இயற்கை விவசாயம்.. சந்தைப் படுத்த தனி யுக்தி.. அசத்தும் சிறைத்துறை!

இங்கு விளைவிக்கப்படும் காய்கள் மற்றும் பழங்கள் மதுரை மத்திய சிறையில் உள்ள அங்காடிகளில் விற்பனை செய்யப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ளது புரசை உடைப்பு. இங்குள்ள திறந்தவெளி சிறையில் கைதிகள் மூலம் இயற்கை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மத்திய சிறை டி.ஜ.ஜி., பார்வையிட்ட போது நாமும் அங்கு சென்றோம். பின்னர் நம்மிடம் டி.ஐ.ஜி., பழனி கூறுகையில், " புரசை உடைப்பு பகுதியில் கடந்த 2013 முதல் திறந்தவெளி சிறைச்சாலை செயல்படுகிறது. 2015 முதல் முழுவீச்சில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.


Abp Nadu Exclusive: சிவகங்கை சிறையில் 35 ஏக்கரில் இயற்கை விவசாயம்.. சந்தைப் படுத்த தனி யுக்தி.. அசத்தும் சிறைத்துறை!
 
வானம் பார்த்த பூமியாக பார்க்கப்படும் சிவகங்கை மாவட்டத்தில் சவாலாக விவசாயம் செய்யப்படுகிறது. சுமார் 85 ஏக்கர் சிறையில் 35 ஏக்கரில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் இயற்கையாகவே வளர்ந்து நிற்கும் புளியமரம், வேப்பமரம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் உள்ளது. வாழை, மரவள்ளிக் கிழங்கு, கரும்பு, சோளம், நிலக்கடலை உள்ளிட்ட ஏகப்பட்ட விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. 350 தென்னை மரங்கள், 300 கொய்யா மரங்கள், 50 நெல்லி மரம், 40 முந்திரி மரம், 20 பலா மரம், எலுமிச்சை கன்று என ஏகப்பட்ட பலன் தரும் மரங்கள் உள்ளது.

Abp Nadu Exclusive: சிவகங்கை சிறையில் 35 ஏக்கரில் இயற்கை விவசாயம்.. சந்தைப் படுத்த தனி யுக்தி.. அசத்தும் சிறைத்துறை!
அதே போல் தேக்கு, சந்தனம், மகாகனி, தேக்கு, ரோஸ் உட் என்று டிம்பர் மரங்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு மரங்களும் உள்ளது. குறைந்த கால பயிர்களான கத்தரி, வெண்டை, அவரை, கொத்தவரங்காய், பருத்தி, உளுத்தும் பயிர் செய்யப்படுகிறது. பயிர்களுக்கு தேவையான இயற்கை உரங்கள் இங்குள்ள ஆடு, நாட்டு மாடுகளிடம் இருந்து கிடைக்கும் கழிவுகளை இயற்கை உரங்களாக பயன்படுத்துகின்றனர்.  தொடர்ந்து புரசை உடைப்பு சிறையில் விவசாயத்தை அதிகப்படுத்த  கிணறு அமைக்கசிறைத்துறை டி.ஜி.பி., அம்ரேஷ் பூஜாரி முயற்சி எடுத்துள்ளார்.

Abp Nadu Exclusive: சிவகங்கை சிறையில் 35 ஏக்கரில் இயற்கை விவசாயம்.. சந்தைப் படுத்த தனி யுக்தி.. அசத்தும் சிறைத்துறை!
அதன் மூலம் இங்கு சிறப்பாக விவசாயம் செய்யமுடியும். திறந்தவெளி சிறை முழுக்க முழுக்க நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுவதால் சிறைவாசிகளுக்கு மன அழுத்தம் குறைகிறது. இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து மனமாற்றம் அடைகின்றனர். அதே போல் சிறைவாசிகளுக்கு தண்டனை காலம் குறைவாக மாறுவதும் இந்த சிறையில் கூடுதல் சிறப்பு. இதனால் டி.ஜி.பி., அவர்கள் திறந்த வெளி சிறைக்கு கூடுதல் கவனம் செலுத்தி திட்டங்களை செயல்படுத்துகிறார். இங்கு விளைவிக்கப்படும் காய்கள் மற்றும் பழங்கள் மதுரை மத்திய சிறையில் உள்ள அங்காடிகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மதுரை விவசாயிகளுக்கும் கூடுதல் பணி கிடைக்கிறது. தற்போது புரசை உடைப்பு சிறையில் 51 சிறைவாசிகள் உள்ளனர். தொடர்ந்து சிறைவாசிகள் எண்ணிக்கை அதிகப்படுத்தி இயற்கை விவசாயம் அதிகப்படுத்தப்படும்" என தெரிவித்தார்.
 
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
 
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Cheapest 5 Seater EV: கெத்து காட்டும் டாடா.. 5 சீட்டர் மலிவான ev கார் இது தான்! முழு விவரம்
Cheapest 5 Seater EV: கெத்து காட்டும் டாடா.. 5 சீட்டர் மலிவான ev கார் இது தான்! முழு விவரம்
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
IPL 2026 Retained Players: ஐபிஎல் மினி ஏலம்.. ஒவ்வொரு அணியிலும் தற்போதுள்ள வீரர்கள் யார்? வலுவான ப்ளேயிங் லெவன்
IPL 2026 Retained Players: ஐபிஎல் மினி ஏலம்.. ஒவ்வொரு அணியிலும் தற்போதுள்ள வீரர்கள் யார்? வலுவான ப்ளேயிங் லெவன்
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
Embed widget