மேலும் அறிய

முல்லை பெரியாறு அணையில் கேரள போலீசாருக்கு 150 எச்பி திறனில் "மீட்பு" விரைவு படகு - தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு கேரள போலீசாருக்கு 150 எச்பி திறனில் "மீட்பு" விரைவு படகு வழங்கி உள்ளநிலையில், தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்கும் பொறுப்பு தொடக்கத்தில் தமிழகத்திடம் இருந்தது. 1982 முதல் பெரியாறு அணை பாதுகாப்பில் கேரள போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். பெரியாறு அணையின் பாதுகாப்பை மத்திய பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கவேண்டும் என தமிழகம் தெரிவித்தபோதும், மத்திய பாதுகாப்பு படை தேவையில்லை என்ற கேரள அரசு ஒரு டிஎஸ்பி, 3 இன்ஸ்பெக்டர்கள், 8 எஸ்ஐ என 124 கேரள போலீசார் அடங்கிய தனிப்படையை, பெரியாறு அணை பாதுகாப்புக்கு நியமித்தது.


முல்லை பெரியாறு அணையில் கேரள போலீசாருக்கு 150 எச்பி திறனில்

அவர்களுக்கான காவல்நிலையம் அணைப்பகுதியில் உள்ளது. இதில் சுமார் 60 பேர்கள் வரை தற்போது மாற்றுப்பணியாக வள்ளக்கடவு, வண்டிப்பெரியார் காவல்நிலையங்களில் பணியில் உள்ளனர். அணை பாதுகாப்பு போலீசாருக்கு 2 படகுகள் இருந்தது. இதில் ஒன்று பழுதானதால், தற்போது 14 பேர்கள் பயணிக்கும், 39.50 லட்சம் ருபாய் செலவில் 150 எச்பி திறன் கொண்ட புதிய விரைவு படகு உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டது. இந்த படகுக்கு “ “ரக்ஷா” (மீட்பு) என பெயரிடப்பட்டுள்ளது. நேற்று தேக்கடி படகுத்துறையில் இந்த புதிய படகை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இடுக்கி மாவட்ட எஸ்பி விஷ்ணு பிரதீப் படகு சேவையை கொடி அசைத்து தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் முல்லைப் பெரியாறு டிஎஸ்பி ராஜ் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


முல்லை பெரியாறு அணையில் கேரள போலீசாருக்கு 150 எச்பி திறனில்
ஆனால் கடந்த 2014&ல் தமிழகப் பொதுப்பணித்துறையினர் பெரியாறு அணைக்குச் சென்று திரும்ப வாங்கிய தமிழன்னை படகுக்கு இன்னும் கேரள அரசு அனுமதி தராதநிலையில், கேரள போலீசாருக்கு புதிய படகு வழங்கி, அதற்கு அனுமதியும் வழங்கி உள்ளதற்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணை என்பது தமிழ்நாட்டிற்கு திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் எழுதிக் கொடுக்கப்பட்ட ஒரு செட்டில்மெண்ட் ஏரியா. கிட்டத்தட்ட 8200 ஏக்கருக்கு ஆண்டுதோறும் வாடகையை பெற்றுக் கொண்டு, தமிழ்நாட்டிற்கு முற்றாக கையளிப்பு செய்யப்பட்ட ஒரு பகுதி.


முல்லை பெரியாறு அணையில் கேரள போலீசாருக்கு 150 எச்பி திறனில்

முறையாக நாம் வாடகை செலுத்தும் ஒரு பகுதியில் வந்து, தமிழ்நாடு அரசினுடைய எவ்வித அனுமதியும் இன்றி, உள்ளே அமர்ந்து கொண்டு, நாங்கள் தான் எல்லாம் என்று கையில் துப்பாக்கிகளோடு வலம் வருவது என்பது, ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று. 24 மணி நேரமும் கண்ணும் கருத்துமாக அணையை பராமரிக்கும் தமிழக பொறியாளர்கள் பயன்படுத்துவதற்காக வாங்கப்பட்ட தமிழனை படகு, கடந்த 2014 ம் ஆண்டு அணைக்கு வந்தது.10 ஆண்டுகளை கடந்தும் அந்தப் படகை நம்மால் ஓட்ட முடியவில்லை. அதற்கு பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களை சொல்லிய கேரள மாநில அரசு மற்றும் கேரள மாநில வனத்துறை, குறிப்பாக பெரியார் புலிகள் காப்பக அதிகாரிகள், அதை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.


முல்லை பெரியாறு அணையில் கேரள போலீசாருக்கு 150 எச்பி திறனில்

அணைக்கு பாதுகாப்பு கொடுக்கிறோம் என்கிற போர்வையில் அத்துமீறி உள்ளே நுழைந்து, ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும், கேரள காவல்துறையினர்கள் அணைக்குள் வந்து போவதற்கு ஏற்கனவே 2 படகுகள் வைத்திருக்கிறார்கள். இந்நிலையில், 150 குதிரை திறன் கொண்ட புது படகு ஒன்றும் கேரள காவல்துறைக்காக வாங்கப்பட்டு, இடுக்கி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஷ்ணு பிரதீப் படகை இயக்கி வைத்ததோடு, அணைக்கும் வந்து சென்று இருக்கிறார். கொச்சினில் உள்ள போட் அத்தாரிட்டியிடம் அனுமதி பெற்ற தமிழனைக்கு இன்று வரை அனுமதி இல்லை. ஆனால் முற்றிலும் தமிழ்நாட்டிற்கு சொந்தமான ஒரு அணைக்குள் வந்து, தமிழக அரசிடம் எவ்வித அனுமதியும் பெறாமல், ஒரு மாவட்ட கண்காணிப்பாளரால், ஒரு படகை இயக்கி வைக்க முடியுமா...? 1979 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையில்  ஆரம்பித்த உரிமை பறிப்பு, இன்றுவரை நீடித்து வருவதை தமிழக அரசாங்கம் ஏன் வேடிக்கை பார்க்க வேண்டும். பெரியாறு அணைக்குள் கேரள மாநில அரசால் இயக்கப்படும் அத்தனை படங்களுக்கும், முறையான அனுமதியை பெற வேண்டும் என்கிற அழுத்தத்தை கேரளாவிற்கு தமிழகம் கொடுக்க வேண்டும். அதுபோல், ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையிலான குறைந்தபட்ச தமிழக காவலர்கள், முல்லைப் பெரியாறு அணையில் பாதுகாப்பு பணிக்காக தங்க வைக்கப்பட வேண்டும் என்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
Savitri Jindal: ஹரியானா தேர்தல், நாட்டின் பணக்கார பெண்ணை கட்சியிலிருந்து நீக்கிய பாஜக..! சாவித்ரி ஜிண்டால் செய்தது என்ன?
Savitri Jindal: ஹரியானா தேர்தல், நாட்டின் பணக்கார பெண்ணை கட்சியிலிருந்து நீக்கிய பாஜக..! சாவித்ரி ஜிண்டால் செய்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLANArun IPS Transfer Order : 24 INSPECTOR-கள் TRANSFER..ஒரே நேரத்தில் பறந்த ஆர்டர்! அருண் IPS வார்னிங்!Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
Savitri Jindal: ஹரியானா தேர்தல், நாட்டின் பணக்கார பெண்ணை கட்சியிலிருந்து நீக்கிய பாஜக..! சாவித்ரி ஜிண்டால் செய்தது என்ன?
Savitri Jindal: ஹரியானா தேர்தல், நாட்டின் பணக்கார பெண்ணை கட்சியிலிருந்து நீக்கிய பாஜக..! சாவித்ரி ஜிண்டால் செய்தது என்ன?
Yercaud Floating Restaurant: ஏற்காட்டில் மிதவை உணவகம்... அமைச்சர் ராஜேந்திரன் கொடுத்த அப்டேட்
ஏற்காட்டில் மிதவை உணவகம்... அமைச்சர் ராஜேந்திரன் கொடுத்த அப்டேட்
Breaking News LIVE 5th OCT 2024: சென்னையில் பரவலாக பெய்யும் மழை..
Breaking News LIVE 5th OCT 2024: சென்னையில் பரவலாக பெய்யும் மழை..
Indian Israel Army: இஸ்ரேலால் அதிகரிக்கும் போர் பதற்றம் - இந்தியாவின் ராணுவ பலத்தை தாங்குமா? வெற்றி யாருக்கு?
Indian Israel Army: இஸ்ரேலால் அதிகரிக்கும் போர் பதற்றம் - இந்தியாவின் ராணுவ பலத்தை தாங்குமா? வெற்றி யாருக்கு?
”விஜய்க்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ்?” தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்க திமுக திட்டம் ?
”விஜய்க்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ்?” தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்க திமுக திட்டம் ?
Embed widget