துவங்கியது பருவ மழை.. கேரளாவில் ஆரஞ்ச், எல்லோ அலர்ட் எந்தெந்த பகுதிகளுக்கு தெரியுமா?
மத்திய கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால், ஓரிரு நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தெற்கு கொங்கன் - கோவா கடலோர பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அரபிக் கடலில் நிலவி வந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் கேரளாவில் மூன்று நாள்களில் தென் மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வழக்கமாக கோடை காலமான மே மாதம் வெயில் வாட்டி வதைக்கும் ஆனால் இந்த ஆண்டு மே மாதம் அவ்வப்போது பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால் வெக்கை குறைந்தது. அதே போல் அரபிக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென்மேற்கு பருவழை மூன்று நாள்களில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் பத்து நாள்கள் கனமழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கேரளாவில் கனமழை பெய்ய துவங்கி உள்ள நிலையில் 12 மாவட்டங்களில் அதிகனமழைக்கான மஞ்சள் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால், ஓரிரு நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கேரளாவில் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கேரளாவில் 12 மாவட்டங்களில் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மே 26ம் தேதி வரையில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துக் கொள்ளவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சமயங்களில் கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களான பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு,ஆரஞ்ச் அலர்ட் கண்ணூர், காசர்கோடு
மஞ்சள் அலர்ட்; பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு
மே 25 ஆம் தேதி
ஆரஞ்ச் அலர்ட் ; கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடுமஞ்சள் அலர்ட்; திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், வயநாடு
மேலும் மே - 26 - ஆம் தேதி
ஆரஞ்ச் அலர்ட் ; திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடுமஞ்சள் அலர்ட்; திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி,
ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் அதிகனமழை பெய்யும். 11 செ.மீ., முதல் 20 செ.மீ., வரை மழை பெய்யும். மஞ்சள் அலர்ட் பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் 6 செ.மீ., முதல் 11 செ.மீ., மழை பொழிவு இருக்கும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















