மேலும் அறிய

Jallikattu : "ஜல்லிக்கட்டு போட்டியில் சாதி இருக்காது" - அமைச்சர் மூர்த்தி அதிரடி தகவல்!

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஜல்லிகட்டு போட்டிகளில் சாதி பெயரை குறிப்பிட்டு காளைகள் அவிழ்க்கப்படாது, என மதுரையில் அமைச்சர் மூர்த்தி பேட்டி.

கடந்தாண்டு சாதி பெயரில் காளைகள் அவிழ்க்கப்படவில்லை, அதே போல இந்த ஆண்டும் ஜல்லிகட்டு போட்டிகளில் சாதி பெயரை குறிப்பிட்டு காளைகள் அவிழ்க்கப்படாது. - அமைச்சர் தகவல்.

ஜல்லிக்கட்டு தொடர்பான ஆய்வுக் கூட்டம்

மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையோட்டி ஜனவரி 14-ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15- ஆம் தேதி பாலமேட்டிலும், 16- ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.  ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
 
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், தமிழ்நாடு ஜல்லிகட்டு பேரவை மாநிலத் தலைவர் ராஜசேகர், ஜல்லிகட்டு கமிட்டியினர், அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
 

மாவட்ட ஆட்சியர் சங்கீதா

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா பேசுகையில் "ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெறும் இடத்தில் 8 அடி உயரத்திற்கு தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும், ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்க்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ஆன்லைன் வாயிலாக நடைபெறும், முன்பதிவுக்கும், களத்தில் வரும் காளைகளின் புகைப்படங்களுக்கு வேறுபாடுகள் உள்ளன, புகைப்படங்கள் மாற்றம் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் கண்காணிக்கப்பட வேண்டும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சாதி பெயரில் காளைகளை அறிவிக்க கூடாது, காளை உரிமையாளரின் பெயரை மட்டுமே அறிவிக்க வேண்டும்" என கூறினார்.

அமைச்சர் மூர்த்தி

கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில் "காளைகளின் கொம்பின் மீது ரப்பர் குப்பிகள் வைக்க கால்நடைத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், இந்த முறை நடைமுறைக்கு சாத்தியமல்ல, ஒவ்வொரு காளைகளின் கொம்பு வெவ்வேறு விதமாக இருக்கும் ஆகவே ரப்பர் குப்பிகள் வைக்க இயலாது. காளைகளின் கொம்பில் ரப்பர் குப்பிகள் வைப்பதற்கு பதிலாக மாற்று வழியை கால்நடைத்துறை அறிவிக்க வேண்டும்" என கூறினார் என்றார்.
 
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி பேசுகையில் "காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ஆன்லைன் வாயிலாக முன்பதிவு நடைபெறும். அரசு சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு மூன்று ஊர்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். ஜல்லிக்கட்டு போட்டிகளில் தமிழக அரசின் சார்பில் எந்த ஒரு பரிசுகளும் வழங்குவதில்லை. ஒவ்வொரு ஊரிலும் நன்கொடையாளர்கள் வழங்க கூடிய பரிசுகள் காளை உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் வழங்கப்படும்.
 
கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அரங்கில் போட்டி நடைபெறக்கூடிய தேதி பின்னர் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்படும். சாதி பெயரில் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்க்க கூடாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி கடந்தாண்டு சாதி பெயரில் காளைகள் அவிழ்க்கப்படவில்லை. அதே போல இந்த ஆண்டும் ஜல்லிகட்டு போட்டிகளில் சாதி பெயரை குறிப்பிட்டு காளைகள் அவிழ்க்கப்படாது" என தெரிவித்தார்.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
DMK Vs ADMK: மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை...
மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை... "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மேயருக்கு குழு குழு ரூம் தேவையா?" -அதிமுக ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமாEPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
DMK Vs ADMK: மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை...
மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை... "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மேயருக்கு குழு குழு ரூம் தேவையா?" -அதிமுக ஆவேசம்
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு:  எப்போது?
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு: எப்போது?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Embed widget