மேலும் அறிய

மதுரை : பாலம் இடிந்த விவகாரம்: ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் - அமைச்சர் எ.வ வேலு..!

இந்த விபத்தில் ஹைட்ராலிக்    இயந்திரங்களைக் காண்ட்ராக்ட்டிற்கு கொடுத்திருக்கும் செல் மேக் நிறுவனத்தினை சேர்ந்த பாஸ்கரனை காவல் துறையினர்  தல்லாகுளம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக திட்ட பொறுப்பாளர், பொறியாளர் , ஹைட்ராலிக் ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 3பேர் மீது வழக்குப்பதிவு. இந்நிலையில் ஒப்பந்ததாரின் அஜாகரதை காரணமாக தான் பாலம் இடிந்து விழுந்துள்ளது என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
 

மதுரை : பாலம் இடிந்த விவகாரம்: ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் - அமைச்சர் எ.வ வேலு..!
மதுரையிலிருந்து செட்டிக்குளம் வரையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் 7.5 கி.மீட்டர் நீளத்தில் 544 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்குவழி மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் நேற்று மாலை ஐய்யர்பங்களா அருகே நாராயணபுரம் பேங்க் காலனி பகுதியில் மேம்பாலத்தை இணைக்கும் போது ஹைட்ராலிக் இயந்திரம் பழுது காரணமாக பாலத்தின் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.  இதில் அங்கு பணியில் இருந்த உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் சிங் என்ற தொழிலாளர் சம்பவ  இடத்திலயே உயிரிழந்தார். இதனையடுத்து கட்டிட இடிபாட்டில் சிக்கிய மேலும் ஒரு தொழிலாளர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். .

மதுரை : பாலம் இடிந்த விவகாரம்: ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் - அமைச்சர் எ.வ வேலு..!
இதையடுத்து  மேம்பாலம் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்து தொடர்பாக மேம்பாலப் பணிகளை மேற்கொள்ளும் மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஜே.எம்.சி ப்ராஜெக்ட்  இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் திட்ட பொறுப்பாளர் பிரதீப் குமார் ஜெயின் கட்டுமானப்பணிகள் பணிகளின் பொறியாளர் ஜதேந்தர் வர்மா, ஹைட்ராலிக்  மெஷின்களை ஒப்பந்தந்திற்கு வழங்கியிருக்கும்  ஷெல் மேக் நிறுவனத்தின் பொறுப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது ஐ.பி.சி 287 அஜாக்கிரதையாக இயந்திரங்களை கையாள்வது, 304 (ஏ) விபத்தில் உயிரிழப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தல்லாக்குளம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
 
இதனிடையே விபத்து நடைபெற்ற  பகுதியில் கீழே விழுந்துள்ள தூண்களை அகற்றும் பணிகளும் நடைபெற்றுவருகிறது. தொடர்ச்சியாக பாலத்தின் பணிகள் நடைபெறும் பகுதிகள் முழுவதிலும் அதிகாரிகளும் அமைச்சர்களும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை : பாலம் இடிந்த விவகாரம்: ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் - அமைச்சர் எ.வ வேலு..!
இன்று மதுரை வந்த பொதுப்பணித்துறை அமைச்சர் பாலம் இடிபாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார் அப்போது செய்தியாளர்களிடம், “விபத்து ஒப்பந்ததாரர் அஜாக்கிரதை காரணமாக நடைபெற்றுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த பாலம் நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் ஒன்றிய அரசின் கீழ் நடைபெறுகிறது. இருப்பினும் தமிழ்நாட்டு மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதால் இதற்கு முக்கியதுவம் கொடுக்கிறோம். இந்த விபத்திற்கு இதன் ஒப்பந்ததாரர் தான் முழு காரணம். ஒரு எஞ்ஜினியர் தலைமையில் மேற்பார்வையிடாமல் மெத்தனமாக வேலை செய்துள்ளனர் அதனால் ஒரு தொழிலாளி உயிரிழந்துவிட்டார். இதில் கண்டிப்பாக ஒப்பந்தகாரர் மீது நடவடிக்கை தேவை" என்றார்
 

தலைப்பு செய்திகள்

மதுரையில் வளர்ச்சிப் பணிகள்: ரூ.53 லட்சம் மதிப்பிலான 10 வளர்ச்சிப் பணிகளை திறந்து வைத்த எம்.பி!
மதுரையில் வளர்ச்சிப் பணிகள்: ரூ.53 லட்சம் மதிப்பிலான 10 வளர்ச்சிப் பணிகளை திறந்து வைத்த எம்.பி!
சிவகங்கையில் கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்பு: ரூ.60 ஆயிரம் நிவாரணம்!
சிவகங்கையில் கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்பு: ரூ.60 ஆயிரம் நிவாரணம்!
முதுகுளத்தூரில் 5000 ஆண்டு பழமையான பெருங்கற்கால புதையல்: மர்ம குறியீடுகள்!
முதுகுளத்தூரில் 5000 ஆண்டு பழமையான பெருங்கற்கால புதையல்: மர்ம குறியீடுகள்!
மதுரை: ஜூன் 28 போலியோ சொட்டு மருந்து முகாம்... குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்போம்!
மதுரை: ஜூன் 28 போலியோ சொட்டு மருந்து முகாம்.. குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்போம்!

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Sarathkumar: ‘Drug‘ பயன்படுத்தினேனா.? அவசரப்பட்டுட்டீங்களே.! சர்ச்சை வீடியோவிற்கு அமைச்சர் சரத்குமார் விளக்கம்
‘Drug‘ பயன்படுத்தினேனா.? அவசரப்பட்டுட்டீங்களே.! சர்ச்சை வீடியோவிற்கு அமைச்சர் சரத்குமார் விளக்கம்
Gold Rate June 26th: ஒரே நாளில் இரு முறை ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி; மாலையிலும் விலை உயர்வு; தற்போது விலை என்ன.?
ஒரே நாளில் இரு முறை ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி; மாலையிலும் விலை உயர்வு; தற்போது விலை என்ன.?
நியாயமா சிஎம் சார்? ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி!
நியாயமா சிஎம் சார்? ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி!
Strait of Hormuz: “எங்க அனுமதி இல்லாம நுழைய முடியாது“; எச்சரித்த ஈரான்; ரூட்டை மாற்றிய கப்பல்கள்; ஹார்முஸில் மீண்டும் சிக்கல்
“எங்க அனுமதி இல்லாம நுழைய முடியாது“; எச்சரித்த ஈரான்; ரூட்டை மாற்றிய கப்பல்கள்; ஹார்முஸில் மீண்டும் சிக்கல்
Annamalai: சிஎம் விஜய்யின் 'ரெய்டு' ஆக்ஷன், எ.வ.வேலுவோடு நிறுத்தாதீங்க - ஊழல் வேட்டைக்கு அண்ணாமலை கொடுத்த கிரீன் சிக்னல்
சிஎம் விஜய்யின் 'ரெய்டு' ஆக்ஷன், எ.வ.வேலுவோடு நிறுத்தாதீங்க - ஊழல் வேட்டைக்கு அண்ணாமலை கொடுத்த கிரீன் சிக்னல்
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ் தரும் BGauss இ ஸ்கூட்டர்கள்! விலை, சிறப்புகள் என்னென்ன?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ் தரும் BGauss இ ஸ்கூட்டர்கள்! விலை, சிறப்புகள் என்னென்ன?
Kim Jong Un: தென் கொரியாவை பீதியிலேயே வைத்திருக்கும் வட கொரியா; அதிநவீன ஆயுத சோதனை; பார்வையிட்ட கிம் ஜாங் உன்
தென் கொரியாவை பீதியிலேயே வைத்திருக்கும் வட கொரியா; அதிநவீன ஆயுத சோதனை; பார்வையிட்ட கிம் ஜாங் உன்
Kanimozhi: நிக்காத பஸ்சுக்கு பஸ் ஸ்டாப் எதுக்கு? கனிமொழியை கும்பலாக கேள்வி கேட்ட பெண்கள்
Kanimozhi: நிக்காத பஸ்சுக்கு பஸ் ஸ்டாப் எதுக்கு? கனிமொழியை கும்பலாக கேள்வி கேட்ட பெண்கள்
Embed widget