மேலும் அறிய

மதுரை : பாலம் இடிந்த விவகாரம்: ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் - அமைச்சர் எ.வ வேலு..!

இந்த விபத்தில் ஹைட்ராலிக்    இயந்திரங்களைக் காண்ட்ராக்ட்டிற்கு கொடுத்திருக்கும் செல் மேக் நிறுவனத்தினை சேர்ந்த பாஸ்கரனை காவல் துறையினர்  தல்லாகுளம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக திட்ட பொறுப்பாளர், பொறியாளர் , ஹைட்ராலிக் ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 3பேர் மீது வழக்குப்பதிவு. இந்நிலையில் ஒப்பந்ததாரின் அஜாகரதை காரணமாக தான் பாலம் இடிந்து விழுந்துள்ளது என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
 

மதுரை : பாலம் இடிந்த விவகாரம்: ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் - அமைச்சர் எ.வ வேலு..!
மதுரையிலிருந்து செட்டிக்குளம் வரையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் 7.5 கி.மீட்டர் நீளத்தில் 544 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்குவழி மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் நேற்று மாலை ஐய்யர்பங்களா அருகே நாராயணபுரம் பேங்க் காலனி பகுதியில் மேம்பாலத்தை இணைக்கும் போது ஹைட்ராலிக் இயந்திரம் பழுது காரணமாக பாலத்தின் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.  இதில் அங்கு பணியில் இருந்த உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் சிங் என்ற தொழிலாளர் சம்பவ  இடத்திலயே உயிரிழந்தார். இதனையடுத்து கட்டிட இடிபாட்டில் சிக்கிய மேலும் ஒரு தொழிலாளர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். .

மதுரை : பாலம் இடிந்த விவகாரம்: ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் - அமைச்சர் எ.வ வேலு..!
இதையடுத்து  மேம்பாலம் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்து தொடர்பாக மேம்பாலப் பணிகளை மேற்கொள்ளும் மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஜே.எம்.சி ப்ராஜெக்ட்  இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் திட்ட பொறுப்பாளர் பிரதீப் குமார் ஜெயின் கட்டுமானப்பணிகள் பணிகளின் பொறியாளர் ஜதேந்தர் வர்மா, ஹைட்ராலிக்  மெஷின்களை ஒப்பந்தந்திற்கு வழங்கியிருக்கும்  ஷெல் மேக் நிறுவனத்தின் பொறுப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது ஐ.பி.சி 287 அஜாக்கிரதையாக இயந்திரங்களை கையாள்வது, 304 (ஏ) விபத்தில் உயிரிழப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தல்லாக்குளம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
 
இதனிடையே விபத்து நடைபெற்ற  பகுதியில் கீழே விழுந்துள்ள தூண்களை அகற்றும் பணிகளும் நடைபெற்றுவருகிறது. தொடர்ச்சியாக பாலத்தின் பணிகள் நடைபெறும் பகுதிகள் முழுவதிலும் அதிகாரிகளும் அமைச்சர்களும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை : பாலம் இடிந்த விவகாரம்: ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் - அமைச்சர் எ.வ வேலு..!
இன்று மதுரை வந்த பொதுப்பணித்துறை அமைச்சர் பாலம் இடிபாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார் அப்போது செய்தியாளர்களிடம், “விபத்து ஒப்பந்ததாரர் அஜாக்கிரதை காரணமாக நடைபெற்றுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த பாலம் நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் ஒன்றிய அரசின் கீழ் நடைபெறுகிறது. இருப்பினும் தமிழ்நாட்டு மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதால் இதற்கு முக்கியதுவம் கொடுக்கிறோம். இந்த விபத்திற்கு இதன் ஒப்பந்ததாரர் தான் முழு காரணம். ஒரு எஞ்ஜினியர் தலைமையில் மேற்பார்வையிடாமல் மெத்தனமாக வேலை செய்துள்ளனர் அதனால் ஒரு தொழிலாளி உயிரிழந்துவிட்டார். இதில் கண்டிப்பாக ஒப்பந்தகாரர் மீது நடவடிக்கை தேவை" என்றார்
 

தலைப்பு செய்திகள்

வெள்ளைக்காளி தாயார் பரபரப்பு புகார்: இன்ஸ்டாகிராம் அவதூறால் மகனின் எதிர்காலம் கேள்விக்குறி!
வெள்ளைக்காளி தாயார் பரபரப்பு புகார்: இன்ஸ்டாகிராம் அவதூறால் மகனின் எதிர்காலம் கேள்விக்குறி!
மதுரையில் இனி நெரிசல் இல்லாத பயணம்.... அவுட்டர் ரிங்ரோடு திறப்பு !
மதுரையில் இனி நெரிசல் இல்லாத பயணம்.... அவுட்டர் ரிங்ரோடு திறப்பு !
மதுரை: நாளை பராமரிப்பு மின் தடை.. ஜூலை 16 அன்று பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் !
மதுரை: நாளை பராமரிப்பு மின் தடை.. ஜூலை 16 அன்று பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் !
சிவகங்கை: மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர் வாழ்வாதாரத்தை உயர்த்த ஆட்சியர் ஆய்வு!
சிவகங்கை: மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர் வாழ்வாதாரத்தை உயர்த்த ஆட்சியர் ஆய்வு!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
Maruti WagonR CNG: ரூ.2 லட்சம் போதும்; 34 கிமீ மைலேஜ், நடுத்தர குடும்பங்களின் நண்பன்- ரூ. 8,612 இஎம்ஐயில் சொந்தமாக்குங்கள்!
Maruti WagonR CNG: ரூ.2 லட்சம் போதும்; 34 கிமீ மைலேஜ், நடுத்தர குடும்பங்களின் நண்பன்- ரூ. 8,612 இஎம்ஐயில் சொந்தமாக்குங்கள்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
Embed widget