மேலும் அறிய

கூட்டணி ஆட்சி எத்தனை நாளைக்கு  தாக்குப் பிடிக்கும் என்பது தெரியவில்லை - பாலகிருஷ்ணன்

எதேச்சிய அதிகார ஆட்சி நடத்தி பழக்கப்பட்டவர் மோடி, கூட்டணி ஆட்சி எத்தனை நாளைக்கு  தாக்கு பிடிக்கும் என்பது தெரியவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி

திண்டுக்கல்லிற்கு இன்று 18.06.24 வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘மோடி அரசாங்கம் எவ்வளவு நாள் தாக்கு பிடிக்கும் என்பது ஒரு கேள்வி குறிதான்? மோடிக்கு கூட்டணி ஆட்சி  நடத்தும் பக்குவம் இருக்குமா என்பது தெரியாது. குஜராத்திலும் சரி டெல்லியிலும் சரி பாஜகவை அனுசரித்து ஆட்சி நடத்திய அனுபவம் இல்லாதவர் . எதேச்சிய அதிகாரம் ஆட்சி நடத்தி பழக்கப்பட்டவர். கூட்டணி ஆட்சி எத்தனை நாளைக்கு நடத்த போகிறார் என்பது தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாங்கள் புறக்கணிக்கிறோம் என சொல்வது மோசடியானது.


கூட்டணி ஆட்சி எத்தனை நாளைக்கு  தாக்குப் பிடிக்கும் என்பது தெரியவில்லை -  பாலகிருஷ்ணன்

இடைத்தேர்தலில் சந்திக்கின்ற திராணியோ, தைரியமோ அதிமுகவிற்கு இல்லை கோயமுத்தூரில் இரண்டு நாட்களில் நாங்கள் வேட்பாளரை அறிவிப்போம் என கூறிய எடப்பாடி பழனிசாமி தற்பொழுது மறுப்பதற்கு காரணம் விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை. விக்கரவாண்டி தேர்தலை அதிமுகவினர் புறக்கணித்து வாக்களிக்க மறுத்தால் கட்சி அவர் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அர்த்தம், அதே நேரம் தேர்தலை புறக்கணித்து வேறு கட்சிக்கு வாக்களித்தால் கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை என அர்த்தம்.

ஒரே ரயில் தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எப்படி வர முடியும் எதனால் குறைபாடு ஏற்படுகிறது. இது குறித்து மத்திய அரசு எந்தவிதமான விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை. ஏற்கனவே ரயில்வே அமைச்சராக இருந்தவர் தான் தற்பொழுது மீண்டும் அமைச்சராக உள்ளார்.  இவர் எதற்காக அமைச்சராக உள்ளார்.  இந்த விபத்திற்கு மத்திய அரசு, மத்திய ரயில்வேதுறை தான் பொறுப்பு ஏற்க வேண்டும், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஊழியர்கள் மீது குற்றம் சாட்டி தப்பிக்க நினைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.


கூட்டணி ஆட்சி எத்தனை நாளைக்கு  தாக்குப் பிடிக்கும் என்பது தெரியவில்லை -  பாலகிருஷ்ணன்

விபத்துக்கு உரிய காரணம் கூறாத இவர் ஏன் ரயில்வே அமைச்சராக தொடர வேண்டும். இவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் பொதுமக்கள் ரயிலில் பயணம் செய்ய அச்சப்படக்கூடிய நிலை தற்பொழுது ஏற்பட்டு உள்ளது. நீட் தேர்வில் நாடு முழுவதும் பெரிய அளவில் குளறுபடிகள் ஏற்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றமே தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. என்னென்ன முறைகேடுகள் நடந்துள்ளது என தெளிவாக பத்திரிகையில் வந்துள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடைபெற்று உள்ளது. இந்த மோசடி காரணமாக தேர்வு எழுதிய 23 லட்சம் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மத்திய அரசு தேவையில்லாத நீட் தேர்வை புகுத்தி பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களில் நீட் தேர்வுக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளது. ஆகவே, மத்திய அரசு உடனடியாக தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

சட்டத்தின் அடிப்படையில் மேஜர் ஆன பிறகு யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற உரிமை உள்ளது. காதல் தம்பதிகளுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாதுகாப்பு அளிக்கும். இது சமூக விரோத காரியம் அல்ல இது புனிதமான கடமை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது இதனை எதிர்க்கும் சமூக விரோதிகள் மீது தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கூட்டணி ஆட்சி எத்தனை நாளைக்கு  தாக்குப் பிடிக்கும் என்பது தெரியவில்லை -  பாலகிருஷ்ணன்

இந்த விவகாரத்தில் காவல்துறை மிகவும் அலட்சியமாக செயல்பட்டு உள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வரை விரைவில் சந்தித்து பல கோரிக்கைகள்  வைக்க உள்ளோம். நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆணவ படுகொலை சம்பந்தமான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளோம். மேலும் காதல் திருமணம் செய்து கொள்வோர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இதற்கு எல்லா கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget