மேலும் அறிய

மதுரையில் பேருந்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை - ஊராட்சி செயலாளர் சஸ்பென்ட்

நாகலெட்சுமி தற்கொலை சம்பவம் தொடர்பாக தற்கொலைக்கு தூண்டியதாக 3 பேர் மீது கள்ளிக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு.

மதுரை மாவட்டம்  கள்ளிக்குடி பகுதியில் மையிட்டான் பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் -  நாகலட்சுமி தம்பதிகளுக்கு  சங்கீதா, விஜய தர்ஷினி, தேன் மொழி, சண்முகப் பிரியா, பாண்டி சிவானி என ஐந்து குழந்தைகள் உள்ளனர். நாகலெட்சுமி மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்துவருதால் இவருக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மரு.அனீஷ் சேகர், 100 நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக பணி வழங்கி ஒன்றரை ஆண்டுகளாக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. 
 

மதுரையில் பேருந்தில் இருந்து குதித்து  பெண் தற்கொலை -  ஊராட்சி செயலாளர் சஸ்பென்ட்
 
இந்த சூழலில், சில நாட்களாக நாகலட்சுமி பணிக்கு சென்ற போது மையிட்டான் பட்டி கிராமத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன் மற்றும் கிளர்க் முத்து ஆகியோர் நாகலட்சுமியை தகாத வார்த்தையில் பேசி இப்பணியினை உனக்கு தர இயலாது எனக் கூறி மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த நாகலட்சுமி நேற்று மதியம் மையிட்டான் பட்டி கிராமத்திலிருந்து திருமங்கலம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்ல பேருந்தில் தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது  சிவரக்கோட்டை பகுதிக்கு அரசு பேருந்து வந்த பொழுது நாகலட்சுமி தன்னுடைய 2 குழந்தைகளை அருகில் பயணம் செய்த சக பயணிகளிடம் குழந்தைகளை கொடுத்துவிட்டு திடீரென பேருந்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மதுரையில் பேருந்தில் இருந்து குதித்து  பெண் தற்கொலை -  ஊராட்சி செயலாளர் சஸ்பென்ட்
 
பேருந்தில் இருந்து குதித்ததால் ஓட்டுநர் உடனடியாக பேருந்து நிறுத்தி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார். தனது தற்கொலை முயற்சிக்கு முக்கிய காரணம் மையிட்டான்பட்டி கிளார்க் முத்து வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன் என்னை அடிக்க கை ஓங்கி அசிங்கப்படுத்தியது தான் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பணிக்கு செல்ல விடாமல் மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இறந்த நாகலட்சுமியின் கைக்குழந்தைகள் அழுதது பார்ப்போர் கண்களில் கண்ணீர் வரவழைத்தது.
 

மதுரையில் பேருந்தில் இருந்து குதித்து  பெண் தற்கொலை -  ஊராட்சி செயலாளர் சஸ்பென்ட்
 
தற்கொலை செய்த சம்பவத்தில் ஊராட்சி செயலர் முத்து, துணைத்தலைவர் பாலமுருகன், வார்டு உறுப்பினர் வீரக்குமார் ஆகிய மூன்று பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாகபிரிவின் எண் 306 கீழ் கள்ளிக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகவுள்ள 3 பேரையும் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். கூடுதல் ஆட்சியர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் மையிட்டான்பட்டி பகுதியில் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துள்ள நிலையில் ஊராட்சி செயலர் முத்து சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
 
Suicidal Trigger Warning..

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget